மாய மந்திரங்கள் மிகைத்த வாழ்வின் சுடரேற்றி வெளிச்சம் தந்த உன்னில் காற்றைத் தூவி அணைத்திடத் துணியா தேங்கிக் கிடக்கும் நீரில் நீராடும் சிறு குருவியொத்த மனதுன் காதல் கலந்து நிறைத்த மொழிகளை எண்ணிச் சிலிர்த்து வாழ்கிறது காதலின் நாளதைக் காவலுக்கு வைத்து நீலத்தினொரு சாயலோடு சிவந்திருக்கும் பொன்னந்தி மாலையொன்றிலுன்னழகிய விரல்கள் கோர்த்து ஒளிரும் வான் தாரகைகளின் தூரம்வரை நாமிருவரும் நடந்தபடி உன்னினிய வார்த்தைகளை மின்னல் துண்டுகளின் பிரகாசத்தோடான சிணுங்கல்களை கேட்டிடும் ஆவலை இன்றும் எழுதிக் காத்திருக்கிறேன் - எம்.ரிஷான் ஷெரீப், மாவனல்லை, இலங்கை. இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். |
கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- வேளாண் விளைபொருள்கள் விலைக்குச் சட்ட ஏற்பு வழங்கு!
- கலைஞர் நூற்றாண்டு: மறுவாசிப்பில் கலைஞரின் ‘நளாயினி'
- சனாதனம் குறித்த உயர்நீதிமன்றத்தின் முறையற்ற தீர்ப்பு!
- இறகுகளுக்காக ஒரு நூலகம்
- எதிர்மறை அலைகள்
- நான்
- பாரதத்தை எதிர்த்து இந்தியா பக்கம் நிற்பது ஏன்?
- தோல்வி பயத்தில் தரம் தாழ்ந்து பேசும் நரேந்திர மோடி!
- ஆரிய மாடலும், திராவிட மாடலும்!
- தோழர் சங்கீதாவை தாக்கியவர்களுக்கு பிணை மறுப்பு!
- விவரங்கள்
- எம்.ரிஷான் ஷெரீப்
- பிரிவு: கவிதைகள்