அடுத்த புயலுக்குக் காத்திருக்கிறது

நினைவுகள் ஓரிடமாய்
நங்கூரம் பாய்ச்சி யிருக்க
கனவுகள் வானந் தேடி
தேசாந்திரம் போயிருக்கின்றன
நிஜங்களை விழுங்க முடியாமல்
திணறும் சுவாசத்துடன்
நீலம் பாரிக்கத் தயாராயிருக்கிறது
உயிர்.
ஆழத்தில் அழுந்திக் கிடக்கின்றன, முத்துகள்
முத்துக் குளிக்க ஆளின்றி....