தங்களின் ஆசைக்காக...
என்னை மாற்றிக்கொண்டேன்...
ஏதாவது ஒரு மாறுதலின் போதாவது...
என்னை...
பிடிக்கும் என்று நம்பி...
இலையாய் மாறினேன்...
என்னை மிதித்து விட்டீர்கள்
பூவாய் மாறினேன்...
என்னை கசக்கி விட்டீர்கள்
காயாய் மாறினேன்...
ஏன் முகம் சுழிக்கிறீர்கள்...
துவர்க்கிறேனா?
கனியாய் மாறினேன்...
இம்முறையும் என்னை உமிழ்ந்து விட்டீர்கள்...
புளித்துவிட்டேனா?
கடைசியாய்...
வேராய் மாறினேன்...
அய்யோ... என்னை முழுதாய்...
வெட்டிச்சாய்த்து விட்டீர்களே...
எதுவாக மாறி வந்தால் ...
தங்களுக்கு பிடிக்கும் ?...
சொல்வீர்களா...?
- அனாமிகா பிரித்திமா (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)
கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- ‘குடிஅரசு’க்கு வயது 100
- இடஒதுக்கீட்டின் எதிரி ஆர்எஸ்எஸ், பாஜக அடிபணிந்தது!
- நிலை தடுமாறும் நீலகிரி
- திருப்பூர் சங்கீதா மீது பொய் வழக்கு - குற்றவாளிகளுக்கு துணைபோகும் காவல் ஆய்வாளர்
- கௌரவ விரிவுரையாளர்கள் வாழ்வு, விடியலைப் பெறுமா?
- “திராவிட புரட்சிக் கவி” பாரதிதாசன்
- பிராகிருத நாடகத்தில் தென்னிந்தியக் குறிப்புகள்
- பிரளயம் தோன்றிடுமே!
- பார்ப்பன பத்திரிகைகளும் சர். ஷண்முகமும்
- பெரியார் முழக்கம் மே 02, 2024 இதழ் மின்னூல் வடிவில்...