பேசும் மலை
எரிந்து அடங்கிய
உன் மௌனத்திற்குத்தான்
எவ்வளவு அடர்த்தி

என் துயரக் கணவாயின்
கங்குக்குள் ஒளிந்திருக்கும்
பொறி போல

என் மகிழ்ச்சிகளில்
வெளியேற
துடித்துக் கொண்டிருக்கும்
கண்ணீர் போல

இரண்டுக்கும் இடையில்
ஒரே அடர்த்தியின்
மொழியை இத்தனை காலம்
எப்படித்தான்
அடைகாத்து வைத்திருக்கிறாயோ?

***

மெய் பதம்

மௌனத்தின்
பிரவாகம்
ஒரு மலர் போன்றது.

காற்றின்
சிறு தொடுதலில்
விரியும்
மொட்டின்
மெய் பதம் —
“அது.”

- மாரி.கிருஷ்ணமூர்த்தி

More articles by மாரி.கிருஷ்ணமூர்த்தி

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.