கீற்றில் தேட...

குளித்தல் என்பது
பொதுவானதே தான்
ஆண்கள் உடலை மட்டும்
கழுவிக் கொள்கிறார்கள்
பெண்கள் உடல் வலியையும்
மனச் சுமையையும்
மெதுவாக இறக்கி வைக்கிறார்கள்

பொதுவாக அதிகாலை நேரத்தில்
குளித்து முடித்து தலை துவட்டும்
ஆண்களைப் போல
அந்த நேரம் அமைந்து விடுவதில்லை.

பெண்களுக்கு
மாதவிடாய் நாட்களைத் தவிர
மற்ற எல்லா நாட்களிலும்
நீரின் கீழ் நின்றபடி
வலியையும்
மௌனத்தையும்
மெதுவாக இறக்கி வைக்கிறார்கள்.

அடையாளமின்றி
தண்ணீர்த் துளிர்களில்
கலந்து ஓடுகிறது
பெண்களின் கண்ணீர்.

- மு.பிரபு, வேலூர்