கீற்றில் தேட...

என் இதயம்
நொறுங்கும்
சப்தம் மட்டுமே
உன்னிதயம்
நெருங்கும்
என்றால்

என் அழுகுரல்
மட்டுமெ
உன் செவி
உட்புகும் என்றால்

நான் ஊமையாக
இருந்து கொள்கிறேன்
நீ செவிடாக
இருந்து கொள்

இடையே
ஒரு ஓரமாய்
நம் காதல்
ஒளிந்து கொள்ளட்டும்.

- அ.சீனிவாசன்