மானஸ கங்கையில் கரையொதுங்கிய
பிரேதங்களில்
முன்பு வலது கண்ணிருந்த
துளையினுள் ஊர்ந்து சென்றது
உறுமீனொன்று
தான் பார்த்தவைகள் குறித்தான
பீதியில் விசும்பினார்கள்
பிரேதங்கள்
நதியின் முற்றத்தில்
பௌர்ணமி நாளின் பகற்பொழுதுக்காக
அழுது கொண்டிருந்தவனுக்கு
இந்தக் கவிதையை
எழுதாதவனின் சாயலிருந்தது
மல்லாந்து கிடக்கும்
ஆகாசத்தின் மீது
காறியுமிழ்ந்தது பூமி
- மதன் (