இதயங்கள்
அத்துவானக் காடாகி விட்ட
நகரத்தில்
வனாந்திரம் என்பது
மொட்டை மாடி தான்
மெய் சிலிர்க்க ஒரு தீண்டல்
உடைந்து கசிய ஒரு வார்த்தை
கிடைக்காத தெருக்கள்
கல் குழிகளை வயிறாக
ஏந்தித் திரியும் சீவன்களை
எப்படி திருப்தி படுத்த ?
காய சண்டிகைகள்
நிறைந்த ஊர் இது
பிளாஸ்டிக் மொக்கு புன்னகைகளையும்
ரப்பர் வார்த்தைகளையும் வாயில் அதக்கி
ஊரெல்லாம் சுற்றி விட்டு
இரவில் வீடு வந்து
சுத்தமாக குளித்து விட்டு
கண்ணாடி முன் நின்றால்
வேறு ஆள்
என் பெயர் என்னவென்று
குழந்தைகளைத்தான்
கேக்க வேண்டும்
- தங்கேஸ்