புழுதி வாசனையைக் கிளப்பி
என் பூமியை மலர்த்தும்
இந்த மழை வாசனையை விவரிக்க
உலகின் எந்த மொழியிலும்
எந்தச் சொல்லிலும் முடியாமல்
அவள் கழுத்தோரம் வழிந்து
மார்புக்கு நடுவே
இறங்கிய வியர்வைத் துளியில்
ஒப்புக் கொடுத்து நனைகிறேன்
காமக் கடும்புனலில்..
பெய்யெனப் பெய்கிறாள்
பெருமழைக்காரி.

- சதீஷ் குமரன்

Pin It