மனவெளியெங்கும்
இறைந்து கிடக்கின்றன
ஆசையிலைகள்
உதிர்த்த பின்பும்
மீண்டும் மீண்டும்
துளிர்க்கின்றன
புதிய இலைகள்!
தள்ளி நின்று
போதி மரத்தை
வேடிக்கைப் பார்க்கிறது
புத்த மனம்! 

***

பக்குவம்!

யாருமற்ற தனிமையில்
கரையிடம்
புலம்பி விட்டு
செல்கின்றன அலைகள்
ஆக்ரோஷமாகப் பொங்கினாலும்
அமைதியாகத் தழுவினாலும்
ஆரவாரம் காட்டாத கரைக்கு
அம்மாவின் சாயல்!

- பா.சிவகுமார்

Pin It