நீ விட்டுச்சென்ற சொற்கள்
இன்னும் பத்திரமாக
இந்த மணல் பரப்பில்
அப்படியே இருக்கிறது
அதில் நானும்
தொலைத்துவிட்ட
என் நினைவுகளோடு
அலைகள் முன் நிற்கிறேன்
கீழே கிடந்த நம் சொற்கள்
உப்பு நீரில் முளைத்து
உப்பு சிறகை
பொருத்திக்கொண்டு
பறந்துவிட்டது திசையில்
கண்ணீர் மழையில்
முளைத்துக் கொண்டே
இருக்கிறது
நம் நினைவின் தடங்கள்.

- ப.தனஞ்ஜெயன்

 

Pin It