சினிமா நடிகனுக்காக
அடித்துக்கொள்ளும்
கூட்டம் நாடெங்கும்
நிரம்பி வழிகிறது....
தெரு நாய்கள்
சோற்றுக்கு அடித்து
கொள்வது போல..
கவிதை சிறிதாக இருந்தாலும், கருத்து பெரிதாக இருக்கிறது. காசை சுளையாக வாங்கிக் கொண்டு வர்த்தக ரீதியில் நடிக்கும் ஓர் நடிகனின் திரைப்படத்துக்கு அவனது விசிலடிச்சான் குஞ்சுகள் விசிலடிப்பதிலாவது ஓரளவு நியாயம் கற்பிக்கலாம். அனால், நமது ஊடகங்களும் அதற்கும் மேலாக இங்குள்ள அரசியல்வாதிகளும் விசிலடிப்பது ஏன்? தமிழ் மொழியினை ஒழுங்காக பேசத் தெரியாத, அரசியல் மற்றும் சமூகம் பற்றி ஆழ்ந்த பார்வை இல்லாத ஒருவனுக்குப் பின்னால் 20 ஆண்டுகளுக்கும் மேலாக இங்குள்ளவர்கள் பின் தொடர்ந்து ஒருவது ஏன்? அவன் துப்பினாலும், கழிவறைக்குச் சென்றாலும் ஓர் அழகு என பைத்தியகாரத்தனமாக வர்ணனை செய்யும் நமது ஊடகங்களை எதனைக் கொண்டு அடிப்பது?