man 185என்
காயங்களுக்கு உதவாதவை
உன் ஆறுதலும் கவிதைகளும்
என்
கண்ணீருக்குப் போதாதவை
உன் சிறு அரவணைப்பும் கைக்குட்டைகளும்
என்
தொன்றுதொட்டு தொடரும் கவலைகளுக்கு முழுத் தீர்வு வழங்காதவை
உன் பொய்யான அக்கறையும் போலியான சலுகைகளும்
எனினும்
மீண்டும் மீண்டும்
முளைக்கவும்
உயிர்த்தெழவும்
உன்னைவிட எனக்கு நன்றாகவே
சொல்லித்தந்து கொண்டிருக்கின்றாள்
ஓர் ஆதி மனுஷி.

- அமுதாராம் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.