மலைச் சாலையோரத்தில்
தன்னியல்பு தொலைத்து
கைநீட்டி நிற்கிறது.....
கடந்து செல்லும் வாகனத்திலிருந்து
வீசியெறியப்படும்
பழங்களை கவ்வி
புசிக்கிறது.
தாயை
பார்த்து
பழகிய குட்டி-அதுவும்
தன்னியல்பு தொலைத்து
கைநீட்டி நிற்கிறது.
வேகமாய்
கடந்த வாகனத்திற்கிடையே
லாவகம் தெரியாது
கைநீட்டி
சக்கரத்தில் சிக்கி
நசுங்கி
துடிதுடித்து குருதி வழிய
செத்தது குட்டி.
நசுங்கிய குட்டியை
கண்ணீரோடு
வாரியெடுத்து
தடவிப்பார்கிறது
தாய்.
கடந்த செல்லும் வாகனத்திலிருந்து
வீசியெறிப்பட்ட
பழம்
ரத்தம் பட்டு
தெறித்து விழுகிறது.
ஆகப்பெரிய
காரியம் செய்த மிதப்பில் நம்
பயணம் நீள்கிறது.
- அ.கரீம் (