வலி
____
ஆற்றிலிருந்த
அத்துணை மணலையும்
துருவி ஒழித்தெடுத்த
ஓர் தினத்திற்குப் பின்னால்
அவர்கள் ஆற்று மணலை
என்ன சொல்லியழைப்பார்கள்?
புன்னகை
__________
வெம்மைப் பொழுதுகளில்
மேஜை நிரம்பிய
அலுவல்களில்
சக்கரம் கட்டிய
கால்களில்
இதமாய்
புன்னகைப்பவன் கூட
கடவுளாகத்தான் படுகிறான்.
- நிராசி (