மழை பெய்து ஓய்ந்திருக்கும்
ஒரு மாலையில்
கசிந்து வழியும் ஈரங்களில்
மறைந்து கிடக்கும் மெளனம்...

மிஞ்சியிருக்கும்
மழைத்துளிகளை
தூறிக்கொண்டிருக்கும்
மேகமெல்லாம்
எதையோ எதிரொலிக்கும்...

அமர்ந்திருக்கும் மர நிழலும்
சிதறிக்கிடக்கும் சிறுபூக்களும்
இனம்புரியா தேடலை
மென்மையாய் இயற்றுவிக்கும்...

அங்கும்
மழை ஓய்ந்த‌ மாலையும்
ஈர மர நிழலும்
சிதறிய சிறு பூக்களும்
இருக்கிறதா?

எதையேனும்
இயற்றுவிக்கிறதா?

- த‌னி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.