நித்தம் நித்தம் நினைக்கும் போதும்
நெஞ்சம் துடிக்கிறது -உன்
நிழற்படம் காணும் பொழு தெல்லாம்
நொறுங்கிப் போகிறது.
புறம் பாடித் திரிந்த தமிழனின்
புதல்வன் இன்று களத்தில்
விழுப்புண் தாங்கிக் கிடந்தது
வீரத்தின் விளைநிலமாம்.
கண்ணை மூடி துயில நினைத்தாலும்
கண்ணிமையில் உன்னுருவம் - வாழ்வின்
ஆயிரம் கனவுகள் தாண்டி
அந்த நிமிடம் என்ன நினைத்தாயோ
என் மகனைப் பார்க்கும் பொழுதெல்லாம்
உன் உருவம் தானே விரிகிறது - அவனை
வாரி யணைத்துக் கொள்கிறேன் ,
வக்கற்ற தமிழ்ப் பிள்ளை நான்.
ஆயிரமாயிரம் பிள்ளைகள் விதையாயினர்
அந்த நிலத்தில் நாதியற்று - ஆயினும்
உன் மரணத்தை மட்டும் ஏனோ
மனம் செரிக்க மறுக்கிறது.
விதையாய் வீழ்ந்தது என்றும்
வீணாய்ப் போகுமோ - நம்
இனம் அழித்தவனின் கொடி வீழும்
குலம் அழியுமிது சத்தியம்.
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
அண்மைப் படைப்புகள்
- ஒவ்வொரு பெட்டியிலும் ரயில் இருக்கிறது
- சுவரோவியங்கள்
- முதல் மந்திரி கவனிப்பாரா?
- உங்கள் நூலகம் செப்டம்பர் 2023 இதழ் மின்னூல் வடிவில்...
- முன் விடுதலைத் திட்டத்தில் முஸ்லிம்கள் மீது மட்டும் ஏன் பாரபட்சம் காட்டப்படுகின்றது?
- அண்ணாவின் கால் தூசி அண்ணாமலை!
- ஜி20 மாநாடும், இம்சை அரசன் 23ஆம் புலிகேசியும்!
- கடலின் மழைக் காடுகளைக் காப்பாற்றும் கலைச் சிற்பங்கள்
- பா.ஜ.க. ஆட்சி ‘ஸ்வாஹா’
- நீட் - தமிழ் மாணவர்க்கு மட்டுமல்ல இந்திய மாணவர்களின் பிரச்சனை!
- விவரங்கள்
- வ.இரா.தமிழ் நேசன்
- பிரிவு: கவிதைகள்