நித்தம் நித்தம் நினைக்கும் போதும்
நெஞ்சம் துடிக்கிறது -உன்
நிழற்படம் காணும் பொழு தெல்லாம்
நொறுங்கிப் போகிறது.
புறம் பாடித் திரிந்த தமிழனின்
புதல்வன் இன்று களத்தில்
விழுப்புண் தாங்கிக் கிடந்தது
வீரத்தின் விளைநிலமாம்.
கண்ணை மூடி துயில நினைத்தாலும்
கண்ணிமையில் உன்னுருவம் - வாழ்வின்
ஆயிரம் கனவுகள் தாண்டி
அந்த நிமிடம் என்ன நினைத்தாயோ
என் மகனைப் பார்க்கும் பொழுதெல்லாம்
உன் உருவம் தானே விரிகிறது - அவனை
வாரி யணைத்துக் கொள்கிறேன் ,
வக்கற்ற தமிழ்ப் பிள்ளை நான்.
ஆயிரமாயிரம் பிள்ளைகள் விதையாயினர்
அந்த நிலத்தில் நாதியற்று - ஆயினும்
உன் மரணத்தை மட்டும் ஏனோ
மனம் செரிக்க மறுக்கிறது.
விதையாய் வீழ்ந்தது என்றும்
வீணாய்ப் போகுமோ - நம்
இனம் அழித்தவனின் கொடி வீழும்
குலம் அழியுமிது சத்தியம்.
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
அண்மைப் படைப்புகள்
- ஆரியப் பார்ப்பனியப் பாசிசக் கருத்துகள் பொசுங்கட்டும்!
- குளிரூட்டும் ஆடைகள்
- பெண்களின் சமஉரிமைக்குத் தொடரும் போராட்டம்
- சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாக வேண்டும்
- காலம் காட்டும் மேஜிக்
- மாறுவேடம்
- ஜஸ்டிஸ் பத்திரிகையின் நிர்வாகம்
- பா.ஜ.கவின் வீழ்ச்சியை வழிமொழியும் வட இந்தியா!
- பாலாற்று நீரில் தமிழ்நாட்டின் உரிமையைத் தடுப்போம்!
- பத்தாண்டுகளுக்குப் பின் பேரா. சாய்பாபா விடுதலை
- விவரங்கள்
- வ.இரா.தமிழ் நேசன்
- பிரிவு: கவிதைகள்