சுடரின் ஒளியில்
வழிந்துவிடுகிறது
தீயின் ஒரு சொல்.
அடர்த்தியேற்றி
வலிமையாகிறது அதன்
அசைவுகள்.
திரியின் தூண்டலில்
எந்த இருட்டையும்
வெளியேற்றிவிடும் அது...
ஒப்பிட்டுக் கொள்கிறது
தன்னை ஒளிரும் நிலவுடன்.
எனினும்-
நிலவு நோக்கி நீளும்
சிறு குழந்தையின் விரல்
தன்னை நெருங்கி ...
மடங்குகையில்
திடுக்குற்றுக் கரைகிறது
அறையின் இருளில்.