*
நிறுத்தாமல் அழைக்கிறாய்
நறுவிசு குலையும் பகலை
காலடியில் உணரத் தூண்டுகிறது
உனது கானல்
செவிகளுக்கு அப்பால் கடக்கவிருக்கும் தொலைவை
நிழல் போர்த்தவில்லை
துல்லியமான வெளியைக் கையகப்படுத்தும்
சூட்சுமத்தின் ஈரத்தை
கண்ணாடிக் குடுவையில் ஏந்தி நடக்கிறேன்
நீ
நிறுத்தாமல் அழைக்கிறாய்
*****
-- இளங்கோ (