*
கைகளில் ஏந்தி நிற்கும்
வரலாற்றின் உலோகக் கிண்ணங்களில்
ஊற்றிப் போகிறார்கள்
என்
மூதாதையரின் ரத்தத்தை
நினைவுகூற மறந்துவிட்ட காயங்களை
துக்கம் தொலைந்த இரவுகளின் வெம்மையை
அதன் இருண்ட நிறத்தை
தனிமைப் புலம்பலை
ஊற்றிப் போகிறார்கள்
கிண்ணங்களில்
பருகியபோது சிதறும் துளிகள் யாவும்
மீண்டும் மீண்டும் துளிர்த்தபடி
ஓயாது பிரசவிக்கிறது
போர்களை
*****
- இளங்கோ (