*
எங்கிருந்து தொடங்குவது
என்றொரு கணம்
அடுக்கி வைத்திருக்கும்
புத்தக இடைவெளியில் நெளிகிறது
லாவகமான நிமிடங்களை
அபகரித்துக் கொள்ளும்
பார்வையின் முள் நிரடிச் சலிக்கிறது மௌனத்தை
எதிர் நாற்காலியின் வெறுமையை
அமைதியாக மெழுகிக் கொண்டிருக்கிறது
விளக்கொளி
வார்த்தைகளை
அரைத்துச் சுழலும் மின்விசிறி இழை
ஒவ்வொரு பக்கத்தின் எண்களையும்
சுழற்றி வீசுகிறது வாசல் நோக்கி..
*****
--இளங்கோ (
கீற்றில் தேட...
பார்வையின் முள்
- விவரங்கள்
- இளங்கோ
- பிரிவு: கவிதைகள்