தாள்கள் ஒவ்வொன்றாய்
நிரப்பப்படுகையில்
அழும் வார்த்தைகளின் விசும்பல்கள்
இரவுகளில் மட்டுமே
சில சுற்றுகள் பெருகக்கூடும்..
நனையும் கையேடிற்கான
ஆறுதல் மொழி
மௌனம்தான்
என்பதில் மிச்சப்பட்டு
மெலிதாய் இழைகிறது
எனது எழுதுகோல் சாயம்...
பிரிவின் வீச்சத்தில்
தெறித்து விழும் புன்னகை,
ஓர் நூற்றாண்டு சோகத்தை
உள்ளடக்கிய வரிகள்,
கண்ட நொடியில் விளங்கிடாது
அவற்றின் வீரியம்..
விளங்கும் வேளையில்
தனிமை குளவிகள்
கொட்ட கொட்ட
ஏற்றுகிறேன் உணர்வுகளை
அதற்கென அலங்கரிக்கப்பட்டதோர்
தற்கொலை விளிம்பினில்...
- தேனப்பன் [