அவென்யூவின்
நாற்சதுரப் பள்ளங்களில்
அடைப்பெடுக்க
ஆள் தேடி..
இறங்கிக் கறுப்பாகி
இடுக்கெல்லாம் குத்தி..
மயிற்கற்றையும்.,
பஞ்சுக் குப்பையும்
அள்ளிப் போட்டவனுக்கு..
ஆயிரத்தை ஐநூறாக்கி.,
அனுப்பிய பின்.,
கறுப்புத் திட்டாய்
நாறிக் கிடக்கிறது..
வயிற்றுப் பசியோடு
வந்த அவனை
இறக்கி விட்டதற்கான
உறுத்தல்..
- தேனம்மை லெக்ஷ்மணன் (