திரவியம் தேடி...
உடல் மட்டும்
திரைகடல் தாண்டி
உயிரை மட்டும்
உன்னிடத்தில் விட்டு
ஆண்டுகள் இரண்டு கழிய
ஆயுள்கால வேதனை.
பாலையில் நான் இருந்தும்...
வெம்மை என்னை சுடுவதில்லை.
தனிமையில் நான் இருப்பதினால்....
உன் நினைவுகள் என்னை சுடுகிறது.
பிரிவின் சுமையோ
இரண்டு ஆண்டுகள் தான்...
நினைவின் சுமையோ
நிமிடங்கள் தோறும்...
- வி. களத்தூர் நிலாப்ரியன் (