உன்னால்
எனது முதல் மரணம்
நிகழ்த்தப்பட்டுவிட்டது
அது ஒரு பருவ காலம்
அழகிய நிலவு நேரம்
நீயும் நானும்
நேசத்தை தங்குதடையின்றி
பகிர்ந்துகொண்டிருந்தோம்
பின்னர் வந்த இரவொன்றில்
பெருக்கெடுத்தோடும்
நேசத்தின் பாதையினை
மாற்றியமைக்க
விரும்புவதாகச் சொன்னாய்
பின்வாங்க மறுத்த நேசம்
கதறியழுதது
சுவாசம் திணறியது
கண்டு கொள்ளாது
திரும்பி நின்றாய்
ஒருவழியாய்
துடிதுடித்து சாகடிக்கப்பட்டதென்
உணர்வுகள்
உணர்வுகள்
சாவதே முதல் மரணம்
எனது முதல் மரணம்
நிகழ்த்தப்பட்டுவிட்டது
உனது சுயநினைவுடன்..
- இவள் பாரதி (