கீற்று இணையதளத்தின் வளர்ச்சியில் படைப்பாளிகளுக்கு முக்கிய பங்குண்டு. கீற்றை ஆரோக்கியமான விவாதக்களமாகவும், சமகால இலக்கியம் மற்றும் அரசியலைப் புரிந்துகொள்வதற்கான தளமாகவும் மாற்றியதில் படைப்பாளிகளாகிய தங்களின் பங்கு அளப்பரியது. சமூகத்தில் மேலெழுந்து வரும் எந்தப் பிரச்சினை குறித்தும் ஆழத் தெரிந்து கொள்ள விரும்புகிறவர்கள், அது குறித்து கீற்றில் தேடினால் குறைந்தது 30, 40 படைப்புகளாவது கிடைக்கும் என்றால் அந்தப் பெருமை, சமகாலப் பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கும் படைப்பாளிகளையே சேரும்.
கீற்று வாசகர் சந்திப்பின்போது, வாசகர்கள் தெரிவித்த கருத்துக்களில் ஒன்றை தங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறோம்.
ஏற்கனவே வேறொரு தளத்தில் வெளியான படைப்பை, மறுபடியும் கீற்றில் பார்ப்பது பெரும்பாலானோர்க்கு சலிப்பைத் தருகிறது. எனவே நீங்கள் கீற்றிற்கு அனுப்பிய படைப்பை தயவு செய்து வேறு எந்த தளத்திற்கும் அனுப்ப வேண்டாம் அல்லது வேறு தளத்தில் வெளியான படைப்பை கீற்றிற்கு அனுப்ப வேண்டாம். படைப்பு நேர்மையைக் கருதி, இந்தக் கோரிக்கையை தங்கள் முன் வைக்கிறோம்.
Blog வைத்திருக்கும் படைப்பாளிகள், தங்களது படைப்பு கீற்றில் வெளியானதற்கு இரண்டு நாட்கள் கழித்து அதை blog-ல் வலையேற்றம் செய்யுமாறு வேண்டுகிறோம்.
தங்களது படைப்புகளுக்கு தொடர்ந்து முக்கியத்துவம் தர கீற்று தயாராக இருக்கிறது. கீற்று இணையதளத்திற்கான பங்களிப்பை தாங்கள் தொடர்ந்து அளிக்க வேண்டுகிறோம். தங்களது படைப்புகளை வெளியிடுவதில் நாங்கள் என்றும் பெருமை கொள்கிறோம்.
கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- வேளாண் விளைபொருள்கள் விலைக்குச் சட்ட ஏற்பு வழங்கு!
- கலைஞர் நூற்றாண்டு: மறுவாசிப்பில் கலைஞரின் ‘நளாயினி'
- சனாதனம் குறித்த உயர்நீதிமன்றத்தின் முறையற்ற தீர்ப்பு!
- இறகுகளுக்காக ஒரு நூலகம்
- எதிர்மறை அலைகள்
- நான்
- பாரதத்தை எதிர்த்து இந்தியா பக்கம் நிற்பது ஏன்?
- தோல்வி பயத்தில் தரம் தாழ்ந்து பேசும் நரேந்திர மோடி!
- ஆரிய மாடலும், திராவிட மாடலும்!
- தோழர் சங்கீதாவை தாக்கியவர்களுக்கு பிணை மறுப்பு!
- விவரங்கள்
- நிர்வாகி
- பிரிவு: கட்டுரைகள்
கீற்று முந்தைய வடிவில் இருந்தபோது பயனர்பெயர், கடவுச்சொல் கொடுத்து லாகின் செய்து படைப்புகளை சமர்ப்பித்து வந்தேன். என்னுடைய பல கட்டுரைகள் கவிதைகளை கீற்று இணையதளம் வெளியிட்டுள்ளது . கீற்றின் இப்போதைய வடிவமைப்பில் லாகின் செய்யும் வசதியோ படைப்புகளை சமர்ப்பிக்கும் வாய்ப்போ இல்லையே ? அன்புகூர்ந்து படைப்புகளை கீற்றுக்கு உள்ளீடு செய்யும் முறையைத் தெளிவுபடுத்துங் கள்
RSS feed for comments to this post