உலகின் தொன்மையான் மொழிகளில் ஒன்று என பெருமைப்பட்டுக்கொள்ள காரணமான தமிழ் மொழியின் இன்றைய நிலையை பார்த்தால் மிகவும் சோகம்தான்.
தமிழின் சிறப்பு தொன்மையில் இல்லை அதன் தொடர்ச்சியில் உள்ளது. என தமிழை காப்பாற்ற வேண்டிய காலமும் கடமையும் இப்பொழுது நம் கையில் உள்ளது. தமிழன் தன் பெருமையை மறந்து ஆங்கிலத்தின் மேல் மோகம் வைத்ததுதான் தமிழின் இந்த நிலமைக்கு அடிப்படை காரணம். பெரும்பாலும் இப்பொழுது நம்மிடம் தமிழ் இல்லை. ஆங்கிலத்தமிழ் தான் நமது நுனி நாக்கில் மிஞ்சியுள்ளது. அதிலும் தமிழை விழுங்கி ஏப்பம் விடும் நிலைதான் எதிர் வரும் காலத்தில் நிகழும் போல,
தமிழரிடம் தமிழில் சேசுங்கள் என பிரச்சாரம் செய்ய வேண்டிய அழிவு நிலைக்கு வந்து விட்ட நம்து செந்தமிழ் மொழி நம் தலைமுறையுடன் முடிந்துவிடுமோவென அச்சம் நெஞ்சினுள் ஊற்றெடுக்கிறது.
கவிஞன் ஒருவன் அருமையாக சொன்னான், பசுமாடும் தாயை அம்மாவென சொல்கிறது, பச்சைத்தமிழனோ மம்மினு சொல்கிறான் என்று. இந்த வார்த்தைகள் அவனது வாயில் வர அவனது எண்ணக்குமுறல்கள் எப்படி இருக்குமென யோசிக்க முடிகிறது. சிறு குழந்தை பள்ளிக்கு போகும்முன் பெற்றோர் சொல்லிக்கொடுக்கும் முதல் வார்த்தைகள் கூட தாய்த்தமிழ் மொழியில் இருப்பதில்லை. நம்மை அடிமையாக்கியவர்கள் மொழிதான் இன்று தமிழனுக்கு உயர்வாக தெரிகிறது.
ஒருவனின் ஆங்கிலப்புலமையே அவனது அறிவுத்திறமையாக கணக்கிடப்படுகிறது. சிந்தியுங்கள், இப்பொழுது நம்மை சுற்றியிருக்கும் பொருட்கள் பலவற்றின் தமிழ் பெயர்கள் நம் இதுவரை நாம் அறிந்திடாதவையாக இருக்கிறது. மனதின் சிந்தனைகள் கூட சுத்தத் தமிழில் இருப்பதில்லை.
சரி விடுங்கள், மொழிதான் இப்படி, கலாச்சாரம் எப்படியென பார்த்தால் அதுவும் மிகவும் சோகம்தான். அந்தி மயங்கும் மாலையில் சாலையோரம் வறுத்துக் கொடுக்கும் சோற்று உருண்டைகளை பெயர் தெரியாமல் சுவைக்கும் கலாச்சாரத்தை காலம் ஏற்படுத்தியுள்ளது.
சினிமா என்னும் ஊடகம் முன்பெல்லாம் நாடகத்தமில் வடிவில் தமிழ் கலாச்சாரத்தை வளர்க்க மட்டுமே உதவியது. இப்பொழுது நிலைமையே தலைகீழ். நுனி நாக்கில் ஆங்கிலமும் சாயம் பூசப்பட்ட தலைமுடியும் ஐந்து நிமிடத்தில் நூறு பேரை சாகடிக்கும் ஒருவந்தான் நாயகனாம்.
எல்லாம் சரிதான் நூறு பேரை சாகடித்துவிட்டு அடுத்து என்ன செய்வான் என்றால் விசித்திரம்தான். அரை நிர்வாண உடையில் நாயகியும் முழுதாக போர்த்திய உடையில் நாயகனும் இமயமலையின் உறைய வைக்கும் பனி மலைச்சாரலில் இடி இசையில் நடனம்.
தற்ப்போதுள்ள தமிழ் கலாச்சாரத்தில் பெண்கள் ஒரு கேலிப்பொருள்களாகவே சித்தரிக்கப்படுகின்றனர். இதனை தமிழ் சினிமா இன்றும் ஆதாரப்பூர்வமாக நிருபித்துக்கொண்டுதானிருக்கிறது.
அவலங்கள் இத்துடன் முடியவில்லை. தமிழின் பண்டைய வரலாற்றையும் சண்டைக்கு இழுக்கிறது. இதற்க்கு தற்போது சிறந்த எடுத்துக்காட்டு ஒன்று இருக்கிறது. மிகப்பெரும் கூட்டணியில் பிரம்மாண்ட செலவில் தமிழில் வெளிவந்த சிவாஜி என்னும் படத்தில் ' தமிழ் வேந்தன் கொடை வள்ளல் பாரி மன்னனின் புதல்விகள் அங்கவை, சங்கவை என்பவர்களை கதாப்பாத்திரங்களின் பெயர்களாக வைத்து அவர்களின் தந்தையாக ஒரு நாடறிந்த தமிழ் பேராசிரியரை நடிக்க வைத்து அவரது வாயிலாகவே இரட்டை அர்த்த வசனங்களை பேசி தமிழையும் தமிழ் கலாச்சாரத்தையும் கொலை செய்ய துணிந்திருக்கிறார்கள்.
தமிழ் கலாச்சாரத்தையும் ஈகைப்பண்பையும் போற்றி வளர்த்த பாரியின் புதல்விகளின் பெயர்களுக்கே இந்த நிலைமையா? அதுவும் தமிழகத்திலேயே!
இதனால்தான் இந்த சூழலில் இப்படியொரு கேள்வி எழுப்புகிறேம். அழிவை நோக்கி தமிழ் கலாச்சாரம் ?
- பொன்வேந்தன், திருப்பூர்
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
அண்மைப் படைப்புகள்
- டி.எம்.கிருஷ்ணாவின் கலகக் குரல் ஓங்கி ஒலிக்கட்டும்
- விவாதத்தில் வெல்ல முடியாதவர் அண்ணா
- பதற்றத்தில் பாரதிய ஜனதா கட்சி!
- புலப்பெயர்வு: கற்காலம் முதல் தற்காலம் வரை…
- ஊழலற்ற உத்தமக் கட்சியா பாஜக?
- ஜாதிவெறியோடு பேசிய நாமக்கல் வேட்பாளரை கண்டித்து செயலவை தீர்மானம்
- சர்க்கரை நோயை ஏற்படுத்தும் காற்று மாசு
- எங்களுக்கு வேலை இருக்கிறது
- காங்கிரஸ்காரர்களின் தேர்தல் பிரசார யோக்கியதை
- பெரியார் முழக்கம் மார்ச் 28, 2024 இதழ் மின்னூல் வடிவில்...
- விவரங்கள்
- பொன்வேந்தன்
- பிரிவு: கட்டுரைகள்
-------------------------------------------------------------------
இன்றைய நிலையில் மாணவர்களின் நிலை என்ன?
அவர்கள் எங்கு திசை திருப்ப படுகிறார்கள்,
எதுவும் புரியாத நிலையில் பெற்றோர்கள் ஆசிரியர்கள்
மறுபக்கமோ கல்வியை வைத்து பணம் பறிக்கும் குள்ளநரி கூட்டம். இந்நிலையில் மாணவர்களிடம் எப்படி வளர்ப்பது நாட்டுப்பற்றை, ஓழக்கத்தை, கல்வி தரத்தை, இது புரிந்தும் புரியதது போல அரசாங்க அரியாணையின் கல்வி மான்கள்.
என்ன படிக்கின்றோம், எதற்காக படிக்கின்றோம், என்று நினைக்காமல் ஏதோ ஓரு கடமையென நினைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு நிற்கும் நமது மாணவர்கள். இந்நிலை மாற நாம் என்ன செய்யவேண்டும்
இந்நிலை மாற மாணவர்களிடம் கல்வி கற்பித்தல் நாட்டுபற்று ஓழக்கம் இவற்றை வளர்க்க நாம் பழமையின் புதிய தேடலி இறங்க வேண்டும் போதிக்கும் முறையும் புகட்டும் முறையும் ஓழக்கத்தின் வெளிப்பாடக இருத்தல் வேண்டும்.
நமது சுற்றுபுறத்தின் சூழலலையும் துாய்மையும் பாதுகாக்,கா வாரம் ஓரு முறையென கல்வி நிலையங்களுக்கு அருகில் உள்ள பகுதிகளை சுற்றி பார்த்தல் துாய்மை படுத்துதல் கலாச்சார நிகழ்வுகளின் மூலம் இந்நாட்டின் வளர்ச்சிக்கு ஏன் இவ்வுலகிற்கே முன்னுாதரனமாகலாம்.
மக்கள் ,என்போர் மாணவர்ளின் பெற்றோர்தான் தனது பிள்ளையின் நன்மைக்காக நல்ல பழக்கத்தை அவர்கள் கண் முன்னே செயல் படுத்துதல் நல்ல மனப்போக்கை உண்டாக்கும் பணத்தின் வழி மனத்தை மாற்றமல் நல்ல பழக்கத்தின் வழி மனத்தை பண்படுத்தினால் நல்லதொரு முன்னேற்றத்திற் கு நாட்டின் புதிய தலை முறை உருவாகும்
என்னால் செய்யா முடியாததை என் பிள்ளை செய்வான் என்றிருப்பதை விட எனக்கு முன்னுதாரனமாக என் பிள்ளை இருப்பான் என்றே உரைப்போம் ஏற்றிவைப்போம் புதிய தலைமுறையைய்
மழை போல் நடந்து
மலை கடந்து
மா நிலம் போற்றும்
மனிதனாக வலம் வருவோம்
எந் நாடும்
என் நாடே என்று
இந்நாட்டின்
இயல்பு நிலை திரும்பிட
---------------------------உழைப்போம் வாரீர்
செயலாக்காத்திற்கு நன்றி
நான் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை யைச் சார்ந்தவன்... நான் 4 சகோதரிகளுடன் பிறந்ததால் என்னவோ பெண்கள் மீது உயரிய மதிப்புக் கொண்டவன்.. அதனால் தமிழ் பாரம்பரியத்தின் மீதும், கலாச்சாரத்தின் மீதும் அளவளாவிய பற்று கொண்டவன்... நான் தற்பொழுது திரைத்துறையில் உதவி இயக்குனராக பணி புரிந்து கொண்டிருக்கிறேன ்.. தமிழ் திரைத் துறையில் ஏதேனும் புதுமையை சொல்ல வேண்டும் என்ற நோக்கில் உள் புகுந்தவன்.. மேலே எழுத்தாளர் சொன்னது போல பெண்களை ஆபாசமாக காட்ட விருப்பமில்லாதவ ன்.. நான் தற்பொழுது எழுதிக் கொண்டிருக்கும் கதைக்கு தமிழ் கலாச்சாரத்தை முழுமையாகத் தெரிந்த ஆழ்ந்த அறிவு உள்ள ஒருவரை எனது படத்திற்கு வசனகர்த்தாவாக நியமித்து சரியான ஒன்றை தெளிவாகவும், யாரும் கேள்வி கேட்காமால் இருக்கும் நிலை இதுதான் என்று உணர வேண்டும்படியும் வசனங்கள் இருக்க வேண்டும் என எண்ணி இனைய தளத்தில் கலாச்சாரத்தைப் பற்றி யார் தெளிவாகவும் , தீர்க்கமாகவும் எழுதுகிறார்கள் என தேடிக் கொண்டிருக்கிறேன ்... இப்பொழுது திரைத் துறையை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் எந்த ஒரு பெரிய எழுத்தாளரையும் உபயோகப் படுத்திக்கொள்ள எனக்கு மனமில்லை.. ஆகவே நீங்கள் எனக்கு சிறந்த எழுத்தாளரை பரிந்துரை செய்யுமாறு கேட்டுக்கொள்கிற ேன்.. எனது கைப் பேசி எண் : 9444057407, நான் பணிபுரிந்த இயக்குனர்கள் - மித்ரன்.ஆர்.ஜவஹ ர்( யாரடி நீ மோகினி)- உத்தமபுத்திரன்( தனுஷ், செல்வராகவன் - இரண்டாம் உலகம், மேலும் பெயரிடப்படாத படம்- இயக்கம்- செல்வராகவன் உதவியாளர் - யுவராஜ்.. இவர்களிடம் பணிபுரிந்த அநுபவம் இருக்கிறது.. நான் தற்சமயம் இயக்கும் எண்ணத்தில் இல்லை ஆனால் கதையை எழுதி முடித்து அடுத்த வருடம் இயக்கலாம் என்ற எண்ணமிருக்கிறது ... நன்றி...
RSS feed for comments to this post