தமிழ்நாடு மார்க்சிய லெனினியக் கட்சியின் தமிழ்நாடு சட்டபேரவை தேர்தல் குறித்து வெளியிடப்பட்ட "'மாற்று' என்ற பெயரில் ஏமாற்றுகளின் அணிவகுப்பு!" என்ற சிறு வெளியீட்டில் இன்றைய தேர்தல் முறைகள் குறித்தும், த.நா.ம.லெ.க.வின் நிலைப்பாடு குறித்தும் விவரிக்கப்பட்டுள்ளது.
இதில் பல பிரச்சனைகளை முன் வைத்து இவைகளை தீர்க்க முடியுமா(?) என்று கேள்வி எழுப்புகிறது. ஆனால், பிரச்சனைகளின் உண்மைத் தன்மையை வர்க்க கண்ணோட்டத்தில் ஆராயாமல் மேலோட்டமாக மட்டுமே பார்ப்பதாக உள்ளது. மேல்கட்டுமானத்தில் வெளிப்படும் பிரச்சனைகளை சிலவற்றை சுட்டிக் காட்டி பேசுகிறார்கள். வர்க்க கண்ணோட்டத்தில் இன்றைய பிரச்சனைகளை பற்றி பேசவில்லை. பாட்டாளி வர்க்கம், விவசாயிகள், அரைபாட்டாளிகள் ஆகியோரின் பிரச்சினைகளை வர்க்க கண்ணோட்டத்தில் ஆராயமால், மேலோட்டமாக, தமிழர்களின் பிரச்சினை என்பதாகவே பேசுகிறது. தமிழகத்தில் (இவர்கள் முன்வைக்கும் தமிழ்தேசிய அடிப்படையிலேயே கூட) பல்வேறு வர்க்கங்களின் நிலை எவ்வாறு உள்ளது, சுரண்டு வர்க்கங்கள் மற்றும் அவர்களின் அணிச் சேர்க்கை, சுரண்டப்படும் வர்க்கங்கள் மற்றும் அவர்களின் நட்பு சக்திகள் ஆகியவற்றைப் பற்றி தற்போதைய நிலை என்ன என்பது குறித்து எந்த வித விவரிப்பையும் காணோம்.
தொழிலாளர்கள், ஒப்பந்த மற்றும் தற்காலிக அடிப்படையில் வைக்கப்பட்டு கடுமையாக சுரண்டப்படுவது குறித்தும், தொழிற்சங்கங்கள் அமைப்பதற்கு கூட கடுமையாக போராட வேண்டியதன் நிலையையும், தொழிலாளர்களின் அனைத்து உரிமைகளும் பறிக்கப்பட்டு வீதியில் நிறுத்தப்படுவதை குறித்தும், தொழிலாளர் விரோத போக்கின் நடப்பு நிலைமைகள் குறித்தும் எதுவும் பேசவில்லை. பாட்டாளி வர்க்க தலைமையில் தமிழ் தேசிய மக்கள் சனநாயக குடியரசு அமைப்பது இலட்சியம் என்று கூறும் த.நா.ம.லெ.க, பாட்டாளி வர்க்கத்தின் வர்க்க நிலை குறித்தும் அதன் நெருக்கடிகள் மற்றும் போராட்டங்கள் குறித்தும் தவறியும் வாய் திறக்கவில்லை.
இங்கு அரசு என்பது இந்திய அரசாக மட்டுமே உள்ள நிலையில், இந்திய அரசின் வர்க்கத் தன்மை, பிற நாடுகளின் அரசுகளோடு அதற்கு உள்ள வர்க்க உறவுகள், தனியார்மய-தாரளமய-உலகமய திணிப்புகளுக்கு பின்பான நிலை ஆகியவற்றை பற்றிய எந்த விளக்கமும் இல்லை. பல்வேறு வர்க்கங்கள் சந்திக்கும் பிரச்சனைகள், நெருக்கடிகள் ஆகியவை பற்றி எந்த வரையறுப்பும் இல்லை.
தொழிலாளர்களின் போராட்டங்கள் இந்திய அளவில் ஒருங்கிணைந்து நடந்து வருகின்றது; ஆண்டுக்கு ஒருமுறை முதலாளித்துவ தொழிற்சங்கங்களின் சார்பாக பொது வேலைநிறுத்தப் போராட்டங்கள் நடக்கின்றன (அவை பாட்டாளி வர்க்கத்தின் நலன்களை முழுமையாக பிரதிபலிக்காவிட்டாலும், பாட்டாளி வர்க்கத்தை ஒற்றுமைப்படுத்தும் வேலையை செய்து வருகிறது). இதற்கு எந்த இடத்திலும் தேசியத்தன்மை தடையாக இல்லை. ரயில்வே, வங்கி, காப்பீடு, தொலைத்தொடர்பு உள்ளிட்ட எண்ணற்ற துறை சார்ந்த தொழிலாளர்களின் போராட்டங்கள், விவசாயிகளின் போராட்டங்கள், வணிகர்கள் மற்றும் மாணவர்களின் போராட்டங்கள் என்று தேசிய இனம் கடந்து உழைக்கும் மக்கள் இந்திய அரசுக்கு எதிராக ஒன்று திரண்டு போராடி வருகிறார்கள்.
தமிழ்நாட்டில் அப்படியான தேசம் தழுவிய வேலை நிறுத்தங்கள் நடைபெறுவதில்லை; தமிழ்த் தேசிய விடுதலை குறித்து பேசும் த.நா.ம.லெ.க, தமிழக பாட்டாளிகள் பிற தேசிய இனப் பாட்டாளிகளோடு சேர்ந்து போராட எவை தடையாக இன்னமும் நீடிக்கின்றன என்பது குறித்து எவ்வித விளக்கமும் இல்லை
இத்தகைய தன்மைகளை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல், தன் அக விருப்பத்தின் அடிப்படையில் தமிழக பாட்டளிகள் மற்றும் உழைக்கும் மக்களின் பிரச்சனைகள் என்று கூறி அவற்றையும் வர்க்க அடிப்படையில் ஆராயாமல், பிரச்சனைகளின் வெளிபுறத் தன்மைகளை மட்டுமே முன்னிறுத்துகிறது. வர்க்க கண்ணோட்டத்தில் மார்க்சிய வழியில் இதை அவர்கள் முன்வைத்தால் அவர்களின் தமிழ்த்தேசிய கோட்பாட்டிற்கு தடை வந்து விடும் என்பதால் இதனை புறக்கணிக்கின்றனர்.
தற்போது தமிழக மக்களின் பிரச்சனைகளாக சுட்டிக் காட்டுபவைகள் கூட முதலாளித்துவ கட்சிகள் வைக்க கூடிய தன்மையிலேயே முன் வைக்கின்றன.
சிங்கள இராணுவம், தமிழக மீனவர்களை சுட்டுக் கொல்லுவதின் பின்னணியில் இருக்கும் பன்னாட்டு கம்பெனிகளின் கடல் வளச் சுரண்டலை சுட்டிக் கட்டாமல், இந்திய -சிங்கள அரசின் கூட்டு குறித்து சுட்டிக் காட்டாமல், சிங்கள தேசிய இனம் மற்றும் தமிழ் தேசிய இனத்திற்குமான முரண்பாடாக முன்வைக்கிறது. மேலும் தமிழகத்தில் உள்ள மீனவர்களில் ஒரு பிரிவினர், பொருளாதார ரீதியில் வலுவடைந்து நவீன மீன்பிடி கலங்களை கொண்டு மீன்வளங்களை மொத்தமாக வாரி சுருட்டுவதன் மூலம் தமிழ்நாட்டு மீனவர்கள் மற்றும் இலங்கையில் உள்ள தமிழ் மற்றும் சிங்கள மீனவர்கள் பாதிக்கப்படுவது குறித்து எதுவும் இல்லை. இவர்கள் (பண பலம் படைத்த மீனவர்கள்) சர்வதேச எல்லையை தாண்டி மீன் பிடிப்பதை ஒப்புக் கொண்டு அதனை உடனடியாக சரி செய்ய இயலாது, கொஞ்சம் கொஞ்சமாக சரி செய்து கொள்வதாக, இரு நாட்டு மீனவர்களுக்கு இடையே நடந்த பேச்சு வார்த்தையில் ஒப்புக் கொண்டது குறிப்பிடத்தக்கது.
காவிரி, முல்லைப் பெரியாறு, பாலாறு உள்ளிட்ட ஆற்று நீர் சிக்கலில் பாட்டாளி வர்க்க கண்ணோட்டம் என்ன? அதனை எப்படி தீர்ப்பது? தமிழகத்தின் உரிமை என்பது என்ன? பிற தேசிய இன விவசாயிகளின் தேவை என்ன? அவற்றை எப்படி தீர்த்துக் கொள்வது என்பது பற்றி எதுவும் கூறவில்லை. மேலோட்டமாக தமிழகத்திற்கு சொந்தமான ஆற்று நீரை பெற்று தர முடியுமா என்று கேட்கிறது.
வங்கி துறை, இரயில்வே துறை உள்ளிட்ட எண்ணற்ற துறைகளை தமிழகத்திற்கென்று தனியாக கேட்கும் இவர்கள், தொழிலாளர் துறைகளுக்கு மட்டும் இந்திய அரசிடம் சீர்த்திருத்தங்களை கோருகிறார்கள். உலகமயம், சிறப்பு பொருளாதார மண்டலங்கள், இந்திய அரசின் தொழிலாளர் விரோத சட்டங்கள் ஆகியவை பற்றியும், இவற்றில் தொழிலாளர்கள் மீதான ஒடுக்குமுறைகள் குறித்தும், எந்த வித பகுத்தாய்வையும் காண முடியவில்லை.
கல்வித் துறையில் ஆங்கிலம், இந்தி, சமஸ்கிருதம் ஆகியவற்றின் திணிப்புகளை பற்றி பேசும் போது கூட சி.பி.எஸ்.சி முறையில் மட்டுமே உள்ளதாக கூறுகிறார்கள், தமிழக அரசின் மாநில பாடத்திட்டமும் ஆங்கில வழியையும் கொண்டுள்ளது பற்றி இவர்கள் வாய் திறப்பதில்லை. தமிழக அரசும் அரசு பள்ளிகளில் ஆங்கில வழியை படிப்படியாக கொண்டு வருகிறது.
அனைத்து கல்வி நிறுவனங்களையும் அரசுடைமையாக்கி தமிழில் வழங்குவதாக மற்றோர் இடத்தில் கூறும் த.நா.ம.லெ.க. இதில் மக்களின் விருப்பங்கள் மற்றும் ஆங்கில கல்வி வழியை தேர்வு செய்யும் நிலைக்கு சென்றதற்கான காரணங்களை பற்றி எதுவும் வாய் திறக்கவில்லை. அவற்றை வெறும் திணிப்புகள் என்று கூறி உண்மை நிலைமையை பார்க்க தவறுகிறது. இன்றைய உற்பத்தி முறைக்கு பொருத்தமான அளவில், நவீன அறிவியலை, தொழில்நுட்பங்களை தமிழ் மொழி தற்போது பெற்றிருக்கவில்லை என்பதையும், இது ஆங்கிலத்தில் மட்டுமே உள்ளதால், அதனை நோக்கி மக்கள் தள்ளப்படுகின்றனர் என்பது குறித்தும் எதுவும் கூறவில்லை. மேலோட்டமாக திணிப்புகள் என்று கூறி அதனை இன முரண்களாக சித்தரிக்கும் த.நா.ம.லெ.க, அதன் வரலாற்று வழியிலான மாற்றத்திற்கான காரணங்களை பார்க்க மறுக்கிறது.
“குறிப்பிட்ட ஒரு நாட்டில், வாணிப உறவுகளின் நலன்களை முன்னிட்டு எந்த மொழி தெரிந்திருந்தால் பெரும்பாலோருக்கு அனுகூலமாய் இருக்கும் என்பதைப் பொருளாதாரப் பரிவர்த்தனையின் தேவைகள் தாமாகவே தீர்மானித்துக் கொண்டுவிடும்” என்று லெனினியம் கூறுகிறது (தேசிய இனப்பிரச்சனையும் பாட்டாளி வர்க்க சர்வதேசியவாதமும்).
மேலும் அழிந்து கொண்டிருக்கும் சமசுகிருதம், உற்பத்தி முறை மற்றும் வாழ்க்கை முறையிலிருந்து வழக்கொழிந்து போன சமசுகிருதம் திணிக்கப்படுவதாக கூறி இவர்களே அதற்கு உயிரூட்டி வருகின்றனர். இந்தி மொழியை ஆட்சி மொழியாக ஆக்கி, சில சிறப்பு சலுகைகளை இந்திய அரசு அளித்து வந்தாலும் கூட இந்தி மொழி படித்தவர்களும் வேலை வாய்ப்பிற்காக சொந்த இடங்கள் விட்டு வேறு மாநிலங்ககளுக்கும், வெளி நாடுகளுக்கும் இடம் பெயர்ந்து செல்கின்றனர். அங்கு கொத்தடிமைகள் போன்று வேலை செய்து வருகிறார்கள்.
இந்தி மொழிக்கு முக்கியத்துவம் கொடுப்பது போல இந்திய அரசு தன்னுடைய செயல்பாட்டை வெளிப்படுத்துவதன் மூலம் தேசிய இனங்களிடயே முரண்களை உருவாக்கி பிளவுகளை ஏற்படுத்தி வருகிறது. இதற்கு த.நா.ம.லெ.க.வும் பலியாகி வருகிறது.
தமிழகத்தில் உள்ள அனைவருக்கு அரசு வேலை வழங்க முடியுமா என்று கேள்வி எழுப்பும் த.நா.ம.லெ.க உழைக்கும் வர்க்கம், சுரண்டும் வர்க்கம் ஆகியவற்றின் தன்மைகள் மற்றும் அனைவரையும் உற்பத்தியில் பங்கேற்பதற்கான திட்டம் குறித்து இங்கு எதுவும் பேச வில்லை. அனைவரையும் உற்பத்தியில் பங்கேற்பு என்பதை முன்வைக்காமல் அனைவருக்கும் அரசு வேலை என்று முதலாளித்துவ கட்சிகளின் ஏமாற்றுகளை இதுவும் முன்வைக்கிறது.
தமிழகத்தில் உள்ள ஈழத்தமிழர்களுக்கு குடியுரிமை கோரும் த.நா.ம.லெ.க இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து தமிழ்நாட்டிற்கு வந்துள்ள பிற தேசிய இன மக்களுக்கு எவ்வித கோரிக்கையும் வைக்கவில்லை. பிற தேசிய இன மக்களுக்கு குடும்ப அட்டை, வாக்குரிமை போன்றவற்றை வழங்க கூடாது என்று “தமிழ்த் தேசிய பேரியக்கம்” கோருவதற்கும், அவர்கள் (இந்தியாவின் பிற பகுதிகளிலிருந்து தமிழகத்திற்கு குடிபெயர்ந்துள்ள உழைக்கும் மக்கள்) பற்றி வாய் திறக்காமல் மவுனம் சாதிக்கும் த.நா.ம.லெ.க.விற்கும் எந்த விதமான வேறுபாடும் இல்லை. இரண்டுமே இனவாதம் தான்.
அது மட்டுமல்லாமல், தமிழீழ அரசு அமைய பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும், ஈழத்தமிழர்களின் விடுதலை போராட்டத்திற்கு துணை நிற்க வேண்டும் என்று கோரும் த.நா.ம.லெ.க காசுமீரில் நடக்கும் தேசிய விடுதலை போராட்டத்தை பற்றி வாய் திறக்கவில்லை. த.நா.ம.லெ.க.வின் தமிழ் இனவாதம் அப்பட்டமாக வெளிப்படுகிறது. காசுமீர் மக்கள் மீது இந்திய அரசு நாள் தோறும் செலுத்தி வரும் இராணுவ ஒடுக்குமுறைகள் குறித்து மறந்தும் அது பேசவில்லை. சிறையில் இருக்கும் ஏழு தமிழர்கள் விடுதலை குறித்து பேசும் அதே வேளையில், சிறுபான்மை முசுலீம்கள் பொய் வழக்குகளில் பிணைக்கப்பட்டு சிறையில் அடைக்கபடுவது குறித்தும், இந்தியாவில் உள்ள பிற தேசிய இனத்தை சார்ந்த போராளிகள் மீது பொய் வழக்குகள் போடப்பட்டு சிறையில் அடைக்கபடுவது குறித்தும் எதுவும் வாய் திறக்காமல் இருப்பதும் இவர்களின் இனவாதத்திற்கு சான்றாக உள்ளது. பிரிக்கால் தொழிலாளர்கள் 8 பேரின் ஆயுள் தண்டனை குறித்தும், சங்கம் ஆரம்பித்ததற்காக மாருதி சுசுகி ஆலை தொழிலாளர்கள் இன்னமும் 60க்கும் மேற்பட்டோர் நான்காண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளது குறித்தும், எண்ணற்ற தொழிலாளர்கள் தங்களின் வாழ்வாதாரத்திற்காகவும், உரிமைகளுக்காகவும் போராடி சிறைப்பட்டிருப்பது குறித்தும் மவுனம் சாதிக்கிறது.
அதற்காக, ஈழத் தமிழர்களின் மீதான ஒடுக்குமுறைகளுக்கு எதிரான போராட்டங்கள் கூடாது என்பதல்ல. அனைத்து தேசிய இன ஒடுக்குமுறைகளுக்கும் எதிராக குரல் கொடுக்க வேண்டியது பாட்டாளி வர்க்கத்தின், பாட்டாளி வர்க்க கட்சிகளின் கடமை. ஆனால், த.நா.ம.லெ.க இனவாதத்தில் சிக்கியுள்ளதால், அவர்களுக்கு தங்கள் சொந்த இன உறவுகள் மட்டுமே தெரிகிறது. பிற தேசிய இன ஒடுக்குமுறைகள் குறித்து தெரிவதில்லை.
மருத்துவம் குறித்து பேசும் போது கூட சித்த மருத்துவத்திற்கு முன்னுரிமை கோருகிறது. ஆனால், பிற மருத்துவ முறைகளின் அறிவியல் தொழில்நுட்பங்களை பயன்படுத்துவது குறித்தும் சரியான மருத்துவ முறைகளை அனைத்திலிருந்தும் ஒருங்கிணைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வருவது குறித்தும் எதையும் பேசவில்லை.
நிலப்பிரபுத்துவ கலாச்சாரத்தின் ஒரு அங்கமான ஜல்லிகட்டின் மீது தீராத காதல் கொண்டு அதனை நடத்த முடியுமா என்று கோருகிறது. ஜல்லிகட்டு தமிழர்களின் பண்பாடு என்ற அடிப்படையில் அதனை கோருகிறது. ஆதிக்க சாதிகளின் ஆதிக்க தனத்தை நிறுவுவதற்கான பண்பாட்டு விழாவாகவும், மனித இனத்திற்கு விரோதமான பண்பாடாகவும் விளங்கும் இதனை தூக்கி நிறுத்துவதும், த.நா.ம.லெ.க.வின் இனவாதத்தை அம்பலப்படுத்துகிறது. தமிழர்கள் கலாச்சாரம் என்ற பொதுத் தன்மையில் ஆதிக்க சாதி நிலவுடைமைகளின் பண்பாட்டை அனைவருக்குமான பண்பாடாக பார்ப்பது என்பது பாட்டாளி வர்க்க கண்ணோட்டத்திற்கு எதிரானதாகும். பூர்ஷ்வா வர்க்கம் தான் பொதுவான பண்பாடு என்ற அடிப்படையில் தேசியவாதத்தை உள்நுழைத்து உழைக்கும் மக்களை ஏமாற்றும். த.நா.ம.லெ.க.வும் அதை தான் செய்து வருகிறது.
தமிழகத்தில் தற்சார்பு தொழில் துறை நிறுவுவதாக கூறும் த.நா.ம.லெ.க. இன்றைய அறிவியல் தொழில்நுட்பங்கள் அனைத்தும் தமிழ் நாட்டிற்கு வெளியே தான் உள்ளது என்பதையும், அதன் துணை இல்லாமல் சோசலிச உற்பத்தி முறையை நிறுவ முடியாது என்பதையும் பார்க்க மறுக்கிறது. இந்த நிலைப்படானது, த.நா.ம.லெ.கவின் குறுகிய தேசியவாதம், தனித்து இருத்தல், ஒதுங்கி வாழ்தல் என்ற பிற்போக்கை அப்பட்டமாக காட்டுகிறது. அந்நிய தொழில் நுட்ப உதவியில்லாமல் எந்த பின் தங்கிய நாடும் அல்லது தேசமும் முன்னேற முடியாது எனபதும், அதனை பெறுவதற்கு சில இழப்புகளை ஏற்றுத்தான் ஆக வேண்டும் என்பதும் ரசியாவின் உதாரணம் நமக்கு காட்டுகிறது.
அனைத்து அதிகாரங்களும் டெல்லியில் குவிக்கப்பட்டுள்ளன. என்று கூறும் த.நா.ம.லெ.க, டெல்லி (இந்திய) அரசை வழி நடத்துகின்ற வர்க்கங்கள் எங்கெங்கு எவ்வாறு பரவியுள்ளன. அவற்றின் அணிச் சேர்க்கைகள் என்ன, என்பது பற்றி, எதுவும் கூறாமல், டெல்லி அரசுக்கும், தமிழ் நாட்டில் உள்ள சுரண்டும் வர்க்கங்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்பது போல கூறுகிறது.
பாரளுமன்ற சனநாயகம் போலி ஜனநாயகம், சோவியத் ஜனநாயகமே மக்கள் ஜனநாயகம் என்னும் உள்தலைப்பில், 8 கோடி தமிழர்களின் வாழ்வும் ஏற்றம் பெற தற்சார்பான (?) தமிழ்த் தேசிய மக்கள் சனநாயக குடியரசு வேண்டும் என்று பொதுவாக கோருவதன் மூலம் தன்னுடைய முதலளித்துவ வர்க்கத் தன்மையையும் அதனுடைய தேசியக் கோரிக்கையையும் முன்வைக்கிறது. இதில் வர்க்க முரண்கள், அதனை எதிர்க் கொள்ளுதல் ஆகியவற்றை பற்றி எதுவும் பேசவில்லை.
விவசாய கூட்டு பண்ணைகளுக்கு பக்கத்தில் சிறு சிறு உற்பத்தி கூடங்கள் அமைக்கப்படும் என்பதானது பெருவீத உற்பத்தியை விட்டு பின் தங்கிய உற்பத்தி முறையை தக்க வைக்க முயல்வதாகும். பாட்டாளி வர்க்கம் ஏகாதிபத்திய சகாப்தத்தில் உருவான பெருவீத, நவீன உற்பத்தியை கைகொள்வதன் மூலம் சோசலிச கட்டுமானத்தை விரைவுபடுத்த முடியும். ஆனால், இவர்கள் சிறு உற்பத்தியை முன்வைத்து காந்திய பொருளாதாரவாதத்தை முன் நிறுத்துகின்றனர். இதன் மூலம் கால சக்கரத்தை முன்னேறவிடாமல் தடுக்க முயல்கின்றனர்.
மேலும், அனைத்து மக்களுக்கும் சம வாய்ப்பு வழங்கபடும் என்பதில் இடஒதுக்கீடு குறித்து அதனுடைய நிலைப்பாட்டை பற்றி தெளிவுப்படுத்தவில்லை. மேலும், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு குறைந்தபட்சம் சில காலமாவது அவர்களுக்கு சில சலுகைகளை வழங்க வேண்டிய தேவை குறித்து எதுவும் பேசவில்லை.
இனவாதத்தின் உச்சகட்டமாக, தமிழக தமிழர்களை ஓர்மைபடுத்தும் நோக்கத்துடன், வெளிநாடுகளில் வாழும் தமிழர்களை மீண்டும் தாய்தமிழகத்திற்கு அழைப்பு விடுக்கிறது. தேசிய இனம் கடந்து பாட்டாளிகளின் ஒன்று கலத்தலை பொறுத்துக் கொள்ள முடியாத த.நா.ம.லெ.க இனவாதத்தை நிலைநிறுத்த உழைக்கும் மக்களை மீண்டும் தேசிய இன ரீதியாக ஒன்று சேர்க்க பாடுபடுகிறது.
தேசிய இன இயக்கங்களின் இரண்டாவது காலகட்ட பகுதியில், பாட்டாளி வர்க்கமானது தேசிய இனம் கடந்து ஒன்று கலக்கிறது. சர்வதேச ரீதியில் ஒன்றிணைக்கப்பட்ட மூலதனத்துக்கும் சர்வதேச தொழிலாளி வர்க்கத்துக்கும் இடையிலான முரண்பாட்டை முன்னணிக்கு கொண்டு வருகிறது என்கிறார் லெனின். ஆனால் த.நா.ம.லெ.க. வரலாற்றின் வளர்ச்சியை பின்னோக்கி இழுக்க பார்க்கிறது. தேசிய இனம் கடந்து தமிழர்கள் பல்வேறு இடங்களில் ஒன்று கலந்து வரும் நிலையில் அவர்களை மீண்டும் தமிழ் தேசியவாதத்திற்குள் இழுக்க பார்க்கிறது. இதன் மூலம் தேசியவாதத்தை நிலைநிறுத்த பார்க்கிறது.
ஒட்டு மொத்தமாக பார்க்கும் போது த.நா.ம.லெ.க.வின் இந்த வெளியீட்டில் பாட்டாளி வர்க்க கண்ணோட்டம் என்பது சிறிதும் இல்லாமல், மேலோட்டமாக பிரச்சனைகளை பேசுவதும், அதற்கு மாற்றாக சோவியத் மாதிரி வடிவங்களை சில பேசுவதும், ஆனால், வர்க்க பகுப்பாய்வு செய்யாமல், தேசியவாத கண்ணோட்டத்தில் அதனை முன்வைப்பதும். பல இடங்களில் அப்பட்டமாக தமிழினவாதமும், பிற்போக்குவாதமும் தலைத்தூக்குவதுமாக உள்ளது.
இறுதியாக லெனினுடைய தொழிலாளி வர்க்கத்தின் தேசிய இன வேலைத்திட்டத்துடன் இதனை நிறைவு செய்கிறேன்.
ஒரு குறிப்பிட்ட அரசில் இருக்கின்ற எல்லா தேசிய இனங்களின் தொழிலாளர்களையும், அரசியல், தொழிற்சங்க, கூட்டுறவு, கல்வித்துறை, இதரவை போன்ற ஒன்றுபட்ட பாட்டாளி வர்க்க ஸ்தாபனங்களில் இணைக்க வேண்டும் என்று தொழிலாளி வர்க்க நலன்கள் வற்புறுத்துகின்றன. (தேசிய இனப்பிரச்சனையும் பாட்டாளி வர்க்க சர்வ தேசியவாதமும்)
- தோழர்.குறிஞ்சி
இந்த உண்மையை கட்டுரையாளர் மறைத்து திரித்து வெளியிட வேண்டிய நோக்கமென்ன?
இவ்வெளியீட்டின் மையப் பொருள் தமிழக சட்டமன்றம் அதிகாரம் ஏதுமற்ற ஒரு மன்றம் என்பதையும், இந்த முதலாளித்துவ சனநாயகம் போலியானது, சோவியத் வடிவ சனநாயகமே மக்கள் சனநாயகம் என்பதே ஆகும். ஆனால் இதைப் பற்றி எந்தவித கருத்தையும் தெரிவிக்காமல், களத்துக்கு வெளியே போய் காற்றோடு கத்திச் சண்டை போடுகிறார் தோழர் குறிஞ்சி.
ஒரு குறிப்பான சூழலுக்காக வெளியிடப்பட்ட, மக்கள் திரள் அமைப்பின் வெளியீட்டில் அனைத்துச் சிக்கல்களிலும் கட்சியின் நிலைப்பாட்டைக் காணவில்லை என்று குறை கூறுவது, அவரது கோட்பாட்டு தெளிவின்மையையே உணர்த்துகிறது.
த.நா.மா.லெ.கவின் கட்சித் திட்டத்தைத் தோழர் குறிஞ்சி முதலில் படிக்க வேண்டும். அனைத்துச் சிக்கல்கள் குறித்தும் கட்சியின் நிலைப்பாடுகள் தெளிவாக விளக்கப்பட்டுள் ளன. பிறகு விமர்சனக் கட்டுரை எழுத வேண்டும். நேர்மைத் திறமிருந்தால் கண்டிப்பாகச் செய்வார்.
1. வெளியிட்டது புரட்சிகர இளைஞர் முன்னணி, புரட்சிகர தொழிலாளர் முன்னணி, புரட்சிகர விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர் முன்னணி, ஒடுக்கப்பட்ட மக்கள் விடுதலை முன்னணி என 4 அமைப்புகளின் பெயர்கள்
அச்சிடப்பட்டும் தாங்கள் த நா மா லெ க வெளியிட்டது என கூறுவதன் நோக்கம் என்ன?
2. இதில் பல பிரச்சினைகள் முன்வைக்கப் பட்டு தீர்க்க முடியுமா என கேட்டுள்ளார்கள் அதில் உண்மைத்தன்மை வர்க்க அடிப்படையில் ஆராயாமல் மேலோட்டமாக கூறியுள்ளார்கள் என்கிறீர்கள் உங்கள் வாதப்படி வர்க்க அடிப்படையில் பிரச்சினைகளை தொகுத்துக் கொண்டபின் இந்த முதலாளிய ஆட்சி அமைப்பிலேயே நீங்கள் தீர்க்க முடியும் என்கிறீர்களா? அவர்கள் முடியாது என்கிறார்கள் சரி.. நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் ? தீர்க்க முடியும் என்றா சொல்கிறீர்கள்?
3. இந்தியா முழுதும் தொழிலாளர்கள் போராடுகிறார்கள் அதனால் இந்திய அரசு என்பது மக்களுக்கான அரசு என்கிறீர்களா? இந்தியா முழுதும் தொழிலாளர்கள் ஒன்றிணைந்து போராட தேசியம் தடையாக இல்லையா ? பொது வேலை நிறுத்த போராட்டங்கள் பாட்டாளி வர்க்க ஒற்றுமைக்கான வேலையை செய்கிறதா ? இந்தியாவில் தேசிய முரண்பாடு இல்லையா ? அதே தொழிலாளர் வர்க்கம் தத்தமது தேசிய இன நலன் என வரும்போது என்ன நிலைப்பாட்டை எடுக்கிறது என்பது தாங்கள் அறியாததா? நீங்கள் சொல்லும் இந்திய தொழிலாளி வர்க்கம் ஈழ தொழிலாளி வர்க்கம் கொத்துக் குண்டுகளால் கொல்லப்பட்டபோது 'இதே நீங்கள் சொல்லும் இந்தியா முழுதும் ஏன் கொதித்து எழுந்து போராடவில்லை? எதனால் தமிழக மக்கள் மட்டும் தனித்துவிடப்பட் டார்கள் ? அன்று எங்கே சென்றது இந்திய தொழிலாளர் வர்க்க ஒற்றுமை? தேசியத்திலிருந் துதான் சர்வதேசியம் என்பது துவங்க முடியும் என்று கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை தெளிவு படுத்தினாலும் கூட உங்களை வழிநடத்துவது எது? மார்க்சியமா? அல்லது முதலாளிய சித்தாந்தமா? இந்தியா என்பதை 1947 க்கு முன் வரலாற்றில் எப்போதாவது உங்களால் காட்டமுடியுமா ? அரசியல் அடிப்படையில் பலவந்தமாக வல்லபபாயால் கட்டப்பட்ட இந்திய ஆட்சி அமைப்பு மக்களின் இயல்பான ஜனநாயக உணர்வுகளுக்கு மதிப்பளித்து ஏற்படுத்தப் பட்ட ஆட்சி அமைப்பா? இங்கு நடப்பது ஜனநாயக ஆட்சிதானா?
4. தமிழக பாட்டாளிகள் பிற தேசிய இன பாட்டாளிகளுடன் இணைந்து போராட தடை ஏதும் இல்லை. கட்டுரையாளர் கூறும் த நா மா லெ க வின் கட்சித்திட்டமே அதற்க்கு சாட்சி. இந்தியா முழுதும் உள்ள அனைத்து தேசிய இன புரட்சிகர/ தேசிய / ஜனநாயக இயக்கங்களுடனும் உறுதியான நட்புடன் இனைந்து செயல்பட உள்ளது குறித்து அது தெளிவுபடுத்துகி றது. தமிழ் தேசியம் பேசினாலே அது பிற தேசிய இன உழைக்கும் மக்களுடன் பகைமை பாராட்டுவது என்ற பொருள் இல்லை. மார்க்சியர்கள் இந்திய மண் குறித்த வரலாற்று ஆய்வை மார்க்சிய அடிப்படையில் மேற்கொள்ளவே இல்லை . தேசம் தேசிய இனம் பற்றிய தெளிவு இந்திய புரட்சியாலர்களி டையே இல்லை. மார்க்சியம் தேசம் தேசிய இனம் பற்றி தெளிவுபடுத்தியு ள்ளது. அரசின் நிர்வாக எல்லையாக உள்ள கட்டமைப்பையே தேசம் என்பது ஒரு ஏகாதிபத்திய வாதமே ! பலாத்கார நடவடிக்கைமூலம் பல்வேறு மொழிபேசும் மக்களை ஒன்றிணைத்து அகண்ட இந்திய தேசம் என சொல்வது ஏகாதிபத்தியமே ஆகும். தரகு முதல்லாளிகளும் பார்ப்பன சக்திகளும் உருவாக்கிய இந்திய தேசத்தை ஒப்புக்கொண்டு இந்திய புரட்சியை முன்னெடுக்கும் கட்சிகள் என்னதான் வாய் வலிக்க புரட்சி குறித்து பேசினாலும் அது ஒரு ஏகாதிபத்திய வாதமேயாகும் !
5. இப்படி நீங்கள் கேட்டுள்ள அனைத்து கேள்விகளுக்கும் விடை அளிக்கமுடியும். இறுதியாக லெனின் கூறிய மேற்கோளை எடுத்துக் காட்டி உள்ளீர்களே ' அவர் அரசு என கூறுவது மக்களின் விருப்பப் பூர்வமாக அமைந்த அரசு பற்றி ! இந்திய அரசு இங்கு என்ன விருப்பப் பூர்வமாக அமைந்த அரசா என்ன? ராணுவ நடவடிக்கையால் இணைத்துவிட்டு அதே ராணுவ பலத்தால் பாதுகாக்கப் படும் அப்பட்டமான ஏகாதிபத்திய அரசு இந்திய அரசு ! மணிப்பூர் இதற்கு சாட்சி ! மிக விரிவாக இந்த சிறு வெளியீட்டை ஆய்வு செய்துள்ளீர்கள் ! இதனை வெளியிட்டவர்களே கவனிக்கவேண்டிய விசயங்களை எல்லாம் பட்டியலிட்டிருந ்தீர்கள் ! ஆரோக்யமான விவாதங்கள் ..... ஆக்கப்பூர்வ விவாதங்கள் தொடரட்டும் ..... வாழ்த்துகள் !
என்னுடைய அரசியலை மறைத்து விட்டு என்று தாங்கள் எதை கருதுகிறீர்கள் என்பதை தெளிவாக கூறினால் அதற்கு உரிய விளக்கம் தர தயாராக இருக்கிறேன்.
மற்ற கேள்விகள் குறித்து,
1. முதல் கேள்வி இந்த சிறு வெளியீட்டை யார் வெளியிட்டது என்பது குறித்து, உங்கள் பதிவிற்கு முன்னதாக இரண்டு தோழர்களும் இதே கேள்வியை எழுப்பியிருக்கி றார்கள்?
இந்த வெளியீட்டில் நீங்கள் குறிப்பிட்டது போல, புரட்சிகர இளைஞர் முன்னணி, புரட்சிகர தொழிலாளர் முன்னணி, புரட்சிகர விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர் முன்னணி, ஒடுக்கப்பட்ட மக்கள் விடுதலை முன்னணி அமைப்புகளின் பெயரை தாங்கி தான் வந்துள்ளது. இவை அனைத்தும் த.நா.ம.லெ.க.வின ் துணை அமைப்புகள். இந்த நான்கு அமைப்புகளில் ஏதேனும் ஒரு அமைப்பு மட்டும் இந்த வெளியீட்டை கொண்டு வந்திருந்தால் அதன் பெயரையும் மற்றும் அதன் தலைமை அமைப்பான த.நா.ம.லெ.க பெயரையும் குறிப்பிட்டு விமர்சனம் செய்திருப்பேன். த.நா.ம.லெ.க.வின ் அனைத்து துணை அமைப்புகள் சார்பில் இவை கொண்டு வரப்பட்டுள்ளது, எனவே நான்கு அமைப்புகளின் பெயரை குறிப்பிட்டு எழுதுவதை காட்டிலும் அவர்களுக்கு அரசியல் வழிகாட்டியாக செயல்படும் த.நா.ம.லெ.க பெயரை குறிப்பது சரியாக இருக்கும் என்ற அடிப்படையிலேயே இங்கு அந்த பெயர் குறிப்பிடப்பட்ட ுள்ளது. த.நா.ம.லெ.க குறித்தும் அதன் அணிகள் குறித்தும் அறிமுகம் உள்ளவர்களுக்கு இதை பற்றி குழப்பம் வந்திருக்காது, அதை பற்றி அறிமுகம் இல்லாதவர்களுக்க ு, இந்த குழப்பம் ஏற்பட்டிருக்கும ்.
அந்த நான்கு அமைப்புகளின் பெயரையும் குறிப்பிட்டு, த.நா.ம.லெ.க வின் அரசியலை எடுத்து செல்லும் அணிகள் என்று குறிப்பிட்டிருந ்தால் சரியாக இருந்திருக்கும் என்று நினைக்கின்றேன்.
2. உங்கள் வாதப்படி வர்க்க அடிப்படையில் பிரச்சினைகளை தொகுத்துக் கொண்டபின் இந்த முதலாளிய ஆட்சி அமைப்பிலேயே நீங்கள் தீர்க்க முடியும் என்கிறீர்களா? அவர்கள் முடியாது என்கிறார்கள் சரி.. நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் ? தீர்க்க முடியும் என்றா சொல்கிறீர்கள்?
என்னுடைய பதிவில் ஒரு பாதியை மட்டும் போட்டு விட்டு அடுத்த பாதியை மறந்து (மறைத்து) விட்டதால் உங்களுக்கு இந்த சந்தேகம் எழுந்துள்ளது என்று நினைக்கின்றேன். அந்த பதிவு. . .
// பாட்டாளி வர்க்கம், விவசாயிகள், அரைபாட்டாளிகள் ஆகியோரின் பிரச்சினைகளை வர்க்க கண்ணோட்டத்தில் ஆராயமால், மேலோட்டமாக, தமிழர்களின் பிரச்சினை என்பதாகவே பேசுகிறது. //
மேலே குறிப்பிட்ட வர்க்கங்களின் பிரச்சனைகளை எந்த ஆட்சி அமைப்பில் தீர்க்க முடியுமோ அதனையே தான் நானும் முன்வைக்கின்றேன்.
3. (அ) இந்தியா முழுவதும் தொழிலாளர்கள் போராடுகிறார்கள் அதனால் இந்திய அரசு என்பது மக்களுக்கான அரசு என்கிறீர்களா?
இதற்கு உங்கள் கேள்வியின் முதல் பாதியிலேயே பதில் உள்ளது. மக்களுக்கான அரசு என்றால் தொழிலாளர்களின் போராட்டம் எதற்கு?
(ஆ) இந்தியா முழுவதும் தொழிலாளர்கள் ஒன்றிணைந்து போராட தேசியம் தடையாக இல்லையா என்று கேட்டுள்ளீர்கள் ? அவ்வாறு இருக்குமானால் அதைக் குறித்து விவரிக்கவும்.
(இ) பொது வேலை நிறுத்தங்கள் பாட்டாளி வர்க்க ஒற்றுமைக்கான வேலையை செய்யும் என்பது தொழிலாளர் போராட்டங்களின் வரலாற்றை மார்க்சிய கண்ணோட்டத்தில் அனுகுபவர்களுக்க ு நன்கு தெரியும்.
(ஈ) இந்தியாவில் தேசிய முரண்பாடு இல்லையா என்று கேட்கிறீர்கள். தேசிய முரண்பாட்டை ஆளும் வர்கக்ங்கள் திட்டமிட்டு தூண்டி வருகின்றன. ஒரு தேசிய இனத்திற்கு சலுகைகள் கொடுப்பதன் மூலம் ஏற்றத்தாழ்வை உருவாக்கி முரண்பாடுகளை உருவாக்குவது, இரண்டு தேசிய இனங்கள் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை கொண்டு தேசிய முரண்பாடுகளை பெரிதாக்குவது என்று பல வழிகளில் ஆளும் வர்க்கங்கள் இந்த முரண்பாடுகளை வளர்த்தெடுக்கிற து. இந்த நிலைமை இந்தியாவில் மட்டுமல்ல. அனைத்து பல்தேசிய நாடுகளிலும் ஆளும் சுரண்டல் வர்க்கங்கள் கடைப்பிடிக்கும் உத்தி. பாட்டாளி வர்க்கமானது, இந்த தேசிய முரண்பாடுகளுக்க ு பலியாகாமல் அனைத்து தேசிய இன பாட்டாளிகளின் ஒற்றுமைக்காக பாடுபவதையே தம்முடைய நோக்கமாக கொண்டிருக்கும்.
(உ) தொழிலாளர்கள் தத்தமது தேசிய நலன் என்று வரும் போது என்று கேள்வி எழுப்புகிறீர்கள ் பாட்டாளி வர்க்கம் தத்தமது தேசிய நலன் என்பதை விட வர்க்க நலனுக்கே முன்னுரிமை தரும் / தர வேண்டும்.
(ஊ) ஈழ மக்கள் கொல்லப்பட்ட போது இந்தியாவில் எந்த தொழிலாளி வர்க்கமும்(தமிழ க தொழிலாளி வர்க்கமும் சேர்த்து) கொதித்தெழ வில்லை என்பது உண்மை தான், இந்தியாவில் இருக்கும் பாட்டாளி வர்க்க கட்சிகள் போதிய பலம் பெறவில்லை என்பதாலும், பாட்டாளி வர்க்கமானது முதலாளி வர்க்கத்திலிருந ்து தனித்து பிரியும் போக்கு இன்னமும் முழு வீச்சாக நடக்கவில்லை என்பதாலும் தான் இந்த நிலை.
(எ) தேசியத்திலிருந் து தான் சர்வதேசியம் என்பது துவங்க முடியும் என்று கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை தெளிவுபடுத்தியிருக்கிறதா???
கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையிலிருந் து . . . .
“ஏனைய தொழிலாளி வர்க்கக் கட்சிகளிடமிருந் து கம்யூனிஸ்டுகளை வேறுபடுத்திக் காட்டுகிறவை பின்வருவன மட்டுமேதான்.
(i).வெவ்வேறு நாடுகளிலும் தேச அளவில் பாட்டாளிகள் நடத்தும் போராட்டங்களில் அவர்கள் தேசிய இனம் கடந்து பாட்டாளி வர்க்கம் அனைத்துக்கும் உரித்தான பொது நலன்களைச் சுட்டிக்காட்டி முன்னிலைக்கு கொண்டு வருகிறார்கள்
(ii). முதலாளித்துவ வர்க்கத்துக்கு எதிரான தொழிலாளி வர்க்கப் போராட்டம் கடந்து செல்ல வேண்டியிருக்கும ் வெவ்வேறு வளர்ச்சிக் கட்டங்களிலும் அவர்கள் எப்போதும் எங்கும் இயக்கம் அனைத்துக்குமான நலன்களை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள்.
ஆகவே நடைமுறையில் கம்யூனிஸ்டுகள் எல்லா நாடுகளிலும் தொழிலாளி வர்க்கக் கட்சிகளது மிகவும் முன்னேறிய மிகவும் வைராக்கியமான பகுதியால், ஏனைய எல்லோரையும் முன்னோக்கி உந்தித் தள்ளும் பகுதியாய் இருக்கிறார்கள். தத்துவார்த்ததில ் அவர்கள் பாட்டாளி வர்க்க இயக்கத்தின் வழி நடப்பையும் நிலைமைகளையும் பொதுவான இறுதி விளைவுகளையும் தெளிவாய்ப் புரிந்துகொள்ளும ் அனுகூலத்தைப் பாட்டாளி வர்க்கத்தின் பெருந்திரளினருக ்கு இல்லாத அனுகூலத்தைப் பெற்றிருக்கிறார்கள்.
கம்யூனிஸ்டுகளுடைய உடனடி நோக்கம் ஏனைய எல்லாப் பாட்டளி வர்க்கக் கட்சிகளது உடனடி நோக்கம் என்னவோ அதுவே தான் பாட்டாளிகளை ஒரு வர்க்கமாய் உருப்பெறச் செய்வதும் முதலாளித்துவ மேலாதிக்கத்தை வீழ்த்துவதும் பாட்டாளி வர்க்கம் அரசியல் ஆட்சியதிகாரம் வென்று கொள்வதுதான்”.
“தொழிலாளர் பிரச்சினையுடன்” ஒப்பிடும்போது தேசிய இனப் பிரச்சினைக்கு உரியது இரண்டாம் இடமே என்பதில் மார்க்சுக்கு எவ்வித சந்தேகமும் இல்லை. ஆனால் அவரது தத்துவம் தேசிய இன இயக்கங்களைப் புறக்கணித்ததே கிடையாது.
தொழிலாளி வர்க்கத்தின் வெற்றி மட்டுமே எல்லாத் தேசிய இனங்களின் பரிபூரண விடுதலையைக் கொண்டு வர முடியும் என்பதை அவர் அறிந்திருந்த காரணத்தால் தேசிய இன இயக்கங்கள் நிரந்தரமானவை என்று அவர் கருதவில்லை. (மார்க்சு குறித்து லெனின் எழுதியது)
(ஏ) இந்தியாவில் உள்ள அனைத்து தேசிய இனங்களும் தாமாக விரும்பி சேர்ந்தவை அல்ல, அவை பிரிட்டிஷாராலும ் அதன் பிறகு இந்திய முதலாளி வர்க்கதின் பிரதி்நிதியான காங்கிரசாலும் ஒன்று சேர்க்கப்பட்டவை தான். உலகின் அனைத்து பல்தேசிய நாடுகளும் இத்தகையனவே. ஸ்டாலினின் “மார்க்சியமும் தேசிய இனப் பிரச்சனையும்” என்ற நூலை வாசித்தால் கிழக்கு ஐரோப்பாவில் எப்படி பல்தேசிய அரசுகள் உருவாகின என்பதை தெளிவுப்படுத்துகிறார்.
4. (அ) அனைத்து தேசிய இனங்களும் இணைந்து ஒரே கட்சியாக செயல்படுவதை த.நா.ம.லெ.க ஏற்றுக் கொள்கிறதா?
(ஆ) அரசின் நிர்வாக எல்லையாக உள்ள கட்டமைப்பையே தேசம் என்று வரையறுப்பது யார் என்பதை தெளிவுப்படுத்தவ ும். ஏகாதிபத்தியத்து க்கு எதிராக காலனி நாடுகளின் போராட்டங்கள் குறித்து பேசும் போது அதனை தேச விடுதலைப் போராட்டம் என்றே பொதுவாக குறிக்கப்படுகிற து. ஆனால், ஸ்டாலினின் வரையறுப்பின் அடிப்படையை மறுத்து அல்ல, ஏகாதிபத்தியத்து க்கு எதிரான காலனி நாட்டை (பல தேசிய இனங்களை கொண்ட) அவ்வாறு குறிக்கப்படுவது உண்டு. சீன தேச விடுதலை போராட்டம் என்றும், இந்திய தேச விடுதலை போராட்டம் என்றும் குறிக்கப்படுகிற து. அதே சமயத்தில் சீனாவில் அதிலுள்ள தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையை சீன கம்யூனிஸ்ட் கட்சி அங்கீகரித்தது. இங்கு இந்திய தேச விடுதலைப் போராட்டம் என்று மூன்றாம் அகிலமானது காலனி ஆதிக்கத்திற்கு எதிரான போராட்டத்தை குறிப்பிட்டது. ஆனால் இந்தியாவில் உள்ள பல தேசிய இனங்களின் உரிமையை மறுத்து அல்ல, பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தை எதிர்த்து நடத்தும் போராட்டத்தை அவ்வாறு குறித்தது.
5. (அ) அனைத்து கேள்விகளுக்கும் விடை அளிக்க முடியும் என்றால் அதனை செய்வது தான் ஒரு மார்க்சியவாதியி ன் கடமை, அதை செய்வது இந்த சமூகத்திற்கு பயன் தரும் என்றால் நிச்சயம் அதனை நீங்கள் செய்ய வேண்டும். அதற்குரிய சரியான பதிலை மார்க்சிய கண்ணோட்டத்தில் தர தயாராக இருக்கிறேன்.
(ஆ) என்னுடைய இறுதி மேற்கோளில் உள்ள அரசு என்பது விருப்ப பூர்வமான அரசு குறித்தானது அல்ல, ரு.ச.ஜ.தொ.க. மத்தியக் கமிட்டி மற்றும் கட்சி ஊழியர்களின் 1913கோடைக்கால கூட்டத்தில் இது குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்ட து.
இதே கருத்தை வலியுறுத்தி 1917 ஏப்ரல் 24 ஆம் தேதி லெனின் தலைமையில் நடந்த போலஷ்விக் கட்சியின் ஏழாவது மாநாட்டில் தேசிய பிரச்சனை குறித்தான தீர்மானம் இவ்வாறு கூறியது:
"ரசியாவில் இருக்கும் சகல தேசிய இனங்களையும் சேர்ந்த தொழிலாளருக்கும் பொதுவான பாட்டாளி வர்க்க அமைப்பு இருக்க வேண்டும். இது தொழிலாளி வர்க்கத்தின் நலன்களுக்கு அத்தியாவசியமாகு ம். . . .. பல்வேறு தேசிய இனங்களை சேர்ந்த தொழிலாளர்களுடைய இத்தகைய பொதுவான வர்க்க அமைப்புகளால் மட்டும் தான், சர்வதேச மூலதனத்தை எதிர்த்தும், முதலாளித்துவ தேசியத்தை எதிர்த்தும் வெற்றிகரமாக போராட்டத்தை நடத்துவதில் பாட்டாளி வர்க்கத்துக்கு உதவி செய்ய முடியும், அப்போதுதான் பாட்டாளி வர்க்கம் இந்தப் போராட்டத்தை நடத்துவதென்பதைய ே சாத்தியமாக்கும் "
ஆரோக்கியமான அரசியல் விவாதம் நடத்தும் உங்கள் அணுகுமுறை சிறப்பான அம்சம் ... வாழ்த்துகள்.
1. உங்கள் அரசியலை மறைத்துக் கொண்டு என நான் சொல்வது நீங்கள் தமிழ் தேசிய அரசியலை விமர்சனம் செய்கிறீர்கள் ஆனால் அதனை இந்திய தேசிய அரசியல் பார்வையில் இருந்து பார்ப்பதால் உங்கள் அரசியலில் உள்ளீடாக இந்தியப் பார்வை ஒளிந்து கிடக்கிறது என்பதிலிருந்து அவ்வாறு நான் கூறியுள்ளேன் ....
2. இதனால் த. ந ம லெ கவின் அரசியலையும் ஒருபோதும் சரியான முறையில் மதிப்பீடு செய்யவோ ... விமர்சனம் செய்யவோ இயலாமல் போக வாய்ப்பை அளிக்கிறது.
3. வெளியிட்ட அமைப்புகளின் பெயரை குறிப்பிடாமல் கட்சியின் பெயரை குறிப்பிடும்போத ு தேவையற்ற குழப்பம் வாசகருக்கு உருவாகிறது ! ஒரு அமைப்பு பெயரை குறிப்பிட்டாலும ் கூட போதும். அதை விடுத்து அதில் அச்சிடாத பெயரை கூறுவது .... கட்சியின் பார்வைக்கும்/ ஒரு மக்கள் திரள் அமைப்பின் பார்வைக்கும் உள்ள வேறுபாட்டைக் காணாத உங்கள் பார்வையை தான் அவ்வாறு குறிப்பிடுவது தவறு என சுட்டிக் காட்டினேன்.
4. பாட்டாளி வர்க்கம்/ விவசாயிகள் வர்க்கம்/ அரைபாட்டாளிகள் ஆகியோரின் பிரச்சினைகளை வர்க்கக் கண்ணோட்டத்தில் ஆராயாமல் தமிழர்களின் பிரச்சினை என்பதாக பார்ப்பதாக உள்ளது என தாங்கள் கூறும் விமரிசனம் சரியே. நீங்கள் கூறுவது போல அனைத்து சிக்கல்களும் வர்க்கப் பார்வையில் ஆய்வு செய்யப் படவேண்டும் என்பது சரியே. அதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் தமிழகத்தில் டெல்லியின் அடிமை எடுபிடி/ பொம்மை அரசு தான் இருக்கிறது என்ற காரணத்தை விளக்குவதை நோக்கமாகக் கொண்டு அவ வெளியீடு கொண்டு வரப்பட்டதால்/ இந்த தேர்தல் எந்த மாற்றத்தையும் கொண்டு வராது என்பதை உணர்த்துவதை நோக்கமாகக் கொண்டதால் தமிழகம் சார்ந்த சிக்கல்களாக தொகுக்கப் பட்டுள்ளன.
5. இந்தியா முழுதும் தொழிலாளர்கள் போராட உண்மையிலேயே இந்தியா என்ற அமைப்பு பல தடைகளைக் கொண்டுள்ளது ! முதலாவதாக மார்க்சியம் இந்தியா போன்ற பல்தேசிய அரசு சமூகத்தில் எவ்வாறு வெற்றி அடைய முடியும் ? எப்படி தொழிலாளி வர்க்கத்தை திரட்டுவது? இந்திய அளவிலா? தேசிய இன அடிப்படை அளவிலா? இந்தக் கேள்விக்கு விடை காணாமல் நாம் இந்தியா முழுதும் தொழிலாளர்களை திரட்டி சாதிப்பதா? தேசிய இன அடிப்படையில் தொழிலாளிகளை திரட்டி சாதிப்பதா? என்ற சிக்கலை ஒரு முடிவிர்க்குக் கொண்டுவர முடியாது !
6. எனவே, இரண்டாவதாக இந்தியாவில் கடந்த 95 ஆண்டுகளாக கம்யூனிஸ்டுகள் ஒரு ஜனநாயகப் புரட்சியை திட்டமாகக் கொண்டிருந்தும் அவர்களால் இன்றுவரை அதில் வெற்றி பெற முடியவில்லை என்பது மட்டுமல்ல ஒரு தீர்மானகரமான கட்சியாகக் கூட இந்திய அளவில் உருவாக முடியவில்லை .... காரணம்? மார்க்சியர்கள் தேசிய இன பிரச்சினை பற்றி ஒரு மார்க்சீய ஆய்வை இந்திய மண்ணில் மேற்கொள்ளவே இல்லை.
! 7. வெள்ளைக் காரன் காலத்தில் சென்னை, மும்பை, கொல்கத்தா மாகாணங்கள் இணைக்கப் பட்ட இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி கட்டப் பட்டிருந்தது எனவே இந்திய தேசிய கம்யூனிஸ்ட் கட்சியும் கட்டப் பட்டது ! ஒட்டு மொத்த இந்தியா முழுமைக்கும் கம்யூனிஸ்டு கட்சி கட்டப் பட்டதின் மார்க்சீய ஆய்வு முடிவு என்ன? ஒன்றும் கிடையாது! எனவே தான் 1940 களில் மொழிவழி மாநில கோரிக்கைகள் எழுந்தபோது கம்யுனிஸ்டு கட்சி அதன் பின்னர்தான் விழித்துக் கொண்டு அடடா.... இந்தியாவில் தேசிய இன சிக்கல் இருக்கிறதே இதை எப்படி பார்ப்பது, என்று ஆய்வு செய்தது ....... அப்பதான் நீங்க சுட்டிக்காட்டும ் ஸ்டாலினின் '' மார்க்சியமும் தேசிய இன பிரச்சினையும் '' அவர்கள் கண்ணிலும் பட்டது ! அவர் இன்னும் ஒரு படி மேலே சென்று '' இன்று உங்களுக்கு இந்தியா பார்ப்பதற்கு ஒரு தேசம் போல காணப்படுகிறது ...... ஆனால் புரட்சி எழுச்சியின்போது அங்கு பல தேசிய இனங்களும் தமது சொந்த மொழி/ வரலாறுகளோடு அரசியல் அரங்கிற்குள் தோன்றும் என சொல்லியிருந்ததை கம்யூனிஸ்டு கட்சி கவனத்தில் கொண்டது !
8. ஆக, இந்தியாவில் 17 தேசிய இனங்கள் இருப்பதாகவும் இவற்றின் அரசியல்/ பண்பாட்டியல் /கலாச்சார / மொழி உரிமைகளை பாதுகாக்க அவற்றின் சுயநிர்ணய உரிமை மிக முக்கியமான ஜனநாயக உரிமை எனக்கூறி தனது கட்சி திட்டத்தில் அதனை சேர்த்துக் கொண்டது. அதன் பின் உடைந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இக் கோரிக்கையை தனது கட்சி திட்டத்தில் வைத்திருந்தது ! ஆனால் சுய நிர்ணய உரிமை என்பது விடுதலைக்கு வழிவகுக்குமானால ் இந்தியா என ஒன்றே இல்லாமல் போகும் என் வியாக்கியானம் கூறி இரு கட்சிகளுமே தமது திட்டத்தில் இருந்து பின் இக் கோரிக்கையை நீக்கிவிட்ட்டன. ஆக ஒரு ஜனநாயக புரட்சியை நடத்துவதின் இலக்கில் இருந்து தேசிய இனங்களின் சுய நிர்ணய உரிமை கோட்பாட்டை பாராமல் " இந்திய ஒற்றுமையை பாதுகாப்பது " என்ற கவலையில் இருந்து தமது கட்சி திட்டத்திலேயே தேசிய இனங்களின் உயிராதாரமான ஜனநாயக கோரிக்கைக்கு சவக்குழி வெட்டின கம்யூனிஸ்டு கட்சிகள் !
இவர்கள் இனி மக்களுக்கு எந்த பொது உடமையை போதிப்பது?
9. எனவேதான் மார்க்சிஸ்டு கட்சியில் இருந்து பிரிந்து உருவான இ. போ.க (மா.லெ) இயக்கம் மீண்டும் தேசிய இனங்களின் வாழ்வாதார உரிமையான '' சுய நிர்ணய உரிமையை தனது கட்சி திட்டத்தில் சேர்த்துக் கொண்டது '' ஆனாலும் சிக்கல் தீரவில்லை ! ஆம் ....யார் ? யாருக்கு சுய நிர்ணய உரிமை தருவது? இதற்கான மார்க்சிய தத்துவ விளக்கம் தான் என்ன? இந்தியா போன்ற பல் தேசிய அரசு சமூகமான ருசியாவில் தேசிய இனப் பிரச்சினை லெனினால் எவ்வாறு தீர்க்கப்பட்டது ? எனப் பார்க்கவேண்டியவ ர்கள் ஆனோம் !
ஒடுக்கும் தேசிய இன பாட்டாளி வகுப்பு கட்சி அங்கே பலமாக கட்டப் பட்டு அது ஒடுக்கப் படும் பிற பாட்டாளி வர்க்க கட்சிகளை இணைத்துக்கொண்டு ஒரு சுயநிர்ணய அடிப்படையில் தேசிய இனங்கள் எப்போது வேண்டுமானாலும் பிரிந்து செல்லலாம் என்ற அடிப்படையில் லெனினால் ( ஒடுக்கும் தேசிய இனத்தில் உள்ள பாட்டாளி வகுப்பு கட்சியால் ) உத்திரவாதம் அளிக்கப்பட்டு தேசிய இன சிக்கல் வெற்றிகரமாக தீர்க்கப் பட்டது.
இந்தியாவில்? யார் நம்மை ஒடுக்குவது? இந்தியா முழுதும் தரகு முதலாளிகளின் மூலதனம் இருக்கிறது ! இவர்களுக்கு அகன்ற இந்திய சந்தை தேவைப்படுகிறது ! பார்ப்பனிய சக்திகளின் சனாதன சாதி ஆதிக்க அமைப்பு இந்தியா முழுதும் வேரூன்றியுள்ளது .....அங்கெல்லாம ் பார்ப்பனியம் தான்தான் உயர்ந்தவன் என தலைமை இடத்தில் உட்கார்ந்துள்ளத ு. பார்ப்பனியத்திற ்கு தேசிய இன வரலாறு குறித்த அக்கறை இல்லை. நாடற்ற ஒரு நாடோடி கூட்டம் இந்தியா என்ற போர்வையில் ஒரு அரசு கட்டுமானமாகவே இங்கு 2000 ஆண்டுக்கால போராட்டத்திற்கு பின் வசதியாக அமர்ந்து கொண்டது !
10. அதே போல இங்கு முதலாளிகளின் தோற்றமும் ஐரோப்பிய நாடுகளைப்போல பட்டறைத்தொழில் அல்லது கைவினைத்தொழில் மூலம் வந்தவர்களல்ல ! மாறாக வெள்ளைக்காரனோடு யார் தரகு வேலை பார்த்து கூடி தொழில் செய்தார்களோ அவர்கள்தான் இந்திய தொழில் துறையில் முதலாளிகள் என உருவானார்கள் . எனவே இயல்பிலேயே இந்திய முதலாளி வர்க்கம் தரகு தன்மை கொண்டதாகவும், தொழில் துறையிலிருந்து உருவாகாமல் அன்னியர்க்கு அடிமை சேவகம் செய்யும் வர்க்கங்களில் இருந்தே உருவானதாகவும், எல்லாவற்றிற்கும ் மேலாக பார்ப்பன/ பனியா/ மார்வாடி , குஜராத்தி, சேட்டு போன்ற உயர்சாதி இருபிரவியாளர்கள ில் இருந்தே இங்கு முதலாளியம் தோன்றியது. எனவே இவர்கள் புரட்சி குணாம்சம் அற்றவார்கலாக/ பிற்போக்கு சமூகத்தை பாதுகாக்கிரவர்க லாக இருக்கிறார்கள்.
இந்தியா முழுதும் பல்வேறு தேசிய இன இலக்கியங்களில் உள்ள இலக்கியங்களை எல்லாம் இந்தி இலக்கியம் என பட்டியலிட்டுக் காட்டி 1947 க்கு முன்/ முன் எப்போதுமே வரலாற்றில் இல்லாத இந்திய தேசத்தை பார்ப்பன சாதியாதிக்க தலைமை சக்திகளும்/ இந்திய தரகு முதலாளிய சக்திகளும் திட்டமிட்டு இந்தியா என்ற பொய்யான ஆதிக்க தேசத்தை கட்டி எழுப்பியுள்ளனர் .
11. இந்தியாவில் ஜனநாயக புரட்சியை வெற்றிகரமாக நடத்தவேண்டும் என்றால்
இங்கு ஒடுக்குமுறை மட்டுமே ஒவ்வொரு தேசிய இனத்தின் மீதும் இருக்கிறது என்பதை ஒருவர் காண வேண்டும். இன்றுவரை இந்தி மட்டுமே இந்தியாவின் ஆட்சிமொழி. தமிழ் உட்பட பிற தேசிய இன மொழிகள் வட்டார மொழி தகுதி மட்டுமே பெற்றவை. இந்த நாட்டில் உழைக்கும் மக்கள் சூத்திர மக்கள் ( இழிபிறவிகள் ) உழைக்காத கூட்டம் தேவரின் பிள்ளைகள் ( கடவுளின் பிள்ளைகள் ) என்ற கொடும் அரக்க தத்துவம் பட்டப் பகலில் ஆட்சி நடத்துகிறது ! ஆக ..... உருவாகி நிலைத்த தேசிய இனங்கள் , உருவாகி வரும் தேசிய இனங்கள், ஆட்சி மொழி உரிமைக்காக , தேசிய தகுதிக்காக போராடும் தேசிய இனங்கள் என பல ஏற்ற தாழ்வான பன்முக வளர்சியுடைய பல தேசிய இனங்கள் கொண்ட நாடு இந்தியா !
12.இங்கு ஒட்டு மொத்தப் புரட்சி ஒட்டு மொத்த தொழிலாளி வர்க்க எழுச்சி என்பது சாத்தியமில்லை.. .. என்பது உங்களுக்கு இப்போது விளங்கி இருக்கும் ! இந்தியா முழுதும்ஒ லாரி உரிமையாளர்கள் சங்கம் வலுவாக இருக்கிறது போராடி உள்ளது ! இந்திய கம்யூனிஸ்ட் / மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொழிலாளிகளை / விவசாயிகளை திரட்டி வைத்துள்ளதே ஒரே கோரிக்கை வைத்து போராடசொல்லுங்கள ேன் பார்ப்போம் ! நாங்களா தடுக்கிறோம் ? இல்லையே .... நாம் காணவேண்டியது ....இங்கு ஒவ்வொரு தேசிய இனத்திற்கும் அதற்கே உரிய வரலாறும்/ மொழியும்/ கலாச்சாரமும்/ தொழில் நுட்பமும் கொண்டுள்ளன ! இவை அனைத்தும் இந்தியா என்ற போர்வையில் இந்திய கலாசாரம் என காட்டி மட்டுப்படுத்திவ ிட அகன்ற இந்திய தேசக் கனவுகளோடு அலைகிறார்கள் . !
13. இந்தியாவில் ஜனநாயக புரட்சி வெற்றி பெற வேண்டுமானால் ஒவ்வொரு தேசிய இனங்களும் தத்தமது தேசிய அரசை அமைத்துக் கொண்டு தமது வரலாறு/ மொழி. பண்பாட்டை / கலைகளை மீட்பதா? அல்லது இந்திய வரலாறு / இந்தி மொழி ஆதிக்கத்தை ( கூடுதலாக ஆங்கிலத்தையும்த ான் ) ஏற்றுக்கொண்டு அழிவதா ? அல்லது தமக்கான தேசிய அரசிற்காக அணிதிரல்வதா என்பதில்தான் இங்கு மார்க்சியத்தின் வெற்றி அமைந்துள்ளது ! அதாவது ஜனநாயக புரட்சி நடைபெற்ற அனைத்து நாடுகளிலும் ஒரு தேசிய அரசு அமைவது தவிர்க்க இயலா மார்க்சிய விதி ! ஆம் ... தேசத்தின் உருவாக்கமும் ஜனநாயகப் புரட்சியும் பிரிக்கமுடியாது என்பதுதான் மார்க்சியம் நமக்கும் கற்றுத் தரும் பாடம்.
14. இந்தியாவில் ஜனநாயக புரட்சி இரு சாத்தியப் பாடுகளை மட்டுமே கொண்டுள்ளது. இங்கு சாதி/ இன / வர்க்க ஒடுக்குமுறையை ஆளும் வர்க்கம் இந்தியா என்ற போர்வையில் நடத்துகிறது ! உழைக்கும் தேசிய இன மக்கள் இந்தியா என்ற ஆதிக்க தேசத்தின் கீழ் அடிமைகளாக/ மாநில அரசு என்ற பெயரில் / பொம்மை அரசிலும் கீழாக எவ்வித உரிமைகளும் அற்று வைக்கப் பட்டுள்ளார்கள். அவர்களின் பண்பாடு இழிவானதாக ஒதுக்கப்பட்டு எங்கும் பார்ப்பன/ மேலை நாகரீக நுகர்வுப் பண்பாடே உயர்வானதாக புகுத்த்தப் படுகிறது! சொந்த தாய் மொழியில் படிப்பது இழிவானதாக சொந்த மக்களாலேயே கருதப்படும் மன நிலைக்கு தள்ளப்படுகின்றன ர். தமது வரலாற்றை மீட்க பார்ப்பனிய சாதி ஆதிக்க இந்திய சமூக அமைப்பு இங்கு தகர்க்கப்பட்டு ஒவ்வொரு தேசிய இனங்களும் தத்தமது தேசிய அரசுகளை அமைத்துக் கொள்வதின் ஊடாகவே இங்கு ஜனநாயக புரட்சி நிறைவுபெறும்.
15.தேசத்தின் உருவாக்கமும் ஜனநாயக புரட்சியும் பிரிக்க முடியாததாகும். இந்திய வரலாற்றை மார்க்சியர்கள் ஆய்விர்க்கே எடுக்காததால் இன்று வரை அவர்கள் அகில இந்திய புரட்சிபற்றிப் பேசுகிறார்கள் ! புரட்சிக்கு பின் எந்த மொழி அடிப்படையில் ஆட்சி அமையும்? யார் எதிரி? ஆளும் வகுப்பு எது? யாரை எதிர்த்து புரட்சி நடக்கும் ? இந்திய கம்யுனிஸ்ட்/ மார்க்சிஸ்ட் கம்யுனிஸ்ட் அல்லது இந்திய புரட்சி பேசும் எந்த தொழராவது பதில் சொல்ல இயலுமா?
16. ஆளும் வகுப்பு இங்கு யார்?
இந்திய ஆளும் வகுப்புதான் ... இங்கு ஆளும் வகுப்பாக இருக்கிறது ! இங்கு இரு அரசியல் தான்! ஒன்று இந்தியாவை பாதுகாக்கும் அரசியல் ! இன்னொன்று தத்தமது தேசிய அரசு உரிமைக்காக, மொழி உரிமைக்காக, பண்பாட்டு, அரசியல், வரலாற்று பாதுகாப்பிற்காக மீட்பிற்காக போராடும் அரசியல் ! முதலாவதில் பிற்போக்கு ஆளும் கும்பல்களின் அகன்ற இந்திய தேசம் எனும் நயவஞ்சக நோக்கம் உள்ளடங்கி உள்ளது. இரண்டாவதில் அறிவுத்துறையினர ்/ ஒவ்வொரு தேசிய இன பாட்டாளி, விவசாயி, மகளிர், மாணவர், ஒடுக்கப்பட்டவரி ன் நலன் அடங்கி உள்ளது ! நாம் எந்த பாதையை பின்பற்றுவது? என்பதை நாம்தான் முடிவுசெய்ய வேண்டும்.அரசின் நிர்வாக எல்லையில் உள்ளதை நாம் தேசம் என எப்படி ஏற்க முடியும் ? அதன் உண்மையான வரலாற்றை ஆய்வு செய்யாமல்?
17. அடுத்து தேசிய முரண்பாட்டை ஆளும் வகுப்பு தூண்டி விடுவதாக கூறியுள்ளீர்கள் .....
இது இந்தியாவில் மட்டுமல்ல எல்லா பல்தேசிய அரசிலும் ஆளும் வகுப்பின் உத்தி என்கிறீர்கள் ... இருக்கலாம். ஆனால்... இந்திய வரலாறு அப்படிப்பட்ட வரலாறு அல்ல ! இங்கு பார்ப்பனியம் அதன் 2000 ஆண்டுக்கால ஆதிக்கத்தின் வரலாறு கம்யூனிஸ்டு கட்சியால் சரியாக மார்க்சீய ஆய்வடிப்படையில் தொகுக்கப்படவே இல்லை ! எனவேதான் ... இவர்களுக்கு ஒரு ஜனநாயகப் புரட்சி நோக்கமாக இருப்பதைவிட இந்திய ஒற்றுமையை பாதுகாப்பது முதன்மையாகப் போய்விட்டது ! ஆளும் வகுப்பு தேசிய முரண்பாட்டை வளர்த்தெடுக்கிற து என்கிறீர்கள் .... ஆளும் வர்க்கம் கூறுகின்ற " இந்திய ஒற்றுமை'' யை ஒரு கம்யுனிஸ்டு கட்சி என சொல்லிக் கொண்டு இங்கு தேசிய இனங்களின் வாழ்வாதார உரிமை என கட்சியின் உயர் மட்ட குழுவால் ஒப்புக்கொண்ட தீர்மானமாக வைத்திருந்த சுய நிர்ணய உரிமை கோட்பாட்டையே தூக்கி வீசவேண்டிய நோக்கம் என்ன? இந்த இடம் தான் நீங்கள் பரிசீலிக்க வேண்டிய இடம்!
18. பாட்டாளி வர்க்கம் தேசிய நலன் என்பதைவிட வர்க்க நலனுக்கே முன்னுரிமை தர வேண்டும் என்கிறீர்கள் ! ஆம் அதனால் தான் ஆப்கானிஸ்தானில் / ஈராக்கில்/ உலகம் முழுதும் எங்கு உழைக்கும் மக்கள் போராடினாலும் நாம் அவர்களுக்காக இங்கு போராடுகிறோம் ! தேசம் என்பது தமிழ் தேசம் ! எமது சொந்த தேசத்தின் விடுதலைக்காக நிற்கிறோம் ! அனைத்து தேசிய இன விடுதலைக்காகவும ் எங்கெல்லாம் மூலதன ஆதிக்கம் இருக்கிறதோ அங்கெல்லாம் பாட்டாளிகளாக ஒன்ரினைகிறோம் ! எம்மை ஆளும் அரசு ? தமிழக அரசா ? டெல்லி அரசா? எங்களுக்கு ஆளும் வகுப்பாக இருப்பது? டெல்லியில் இருக்கும் தரகு முதலாளிகளின் - பார்ப்பனிய சக்திகளின் ஏகாதிபத்திய இந்திய அரசா? அதன் அடிமை எடுபிடி தமிழக அரசா ? என கேட்கிறோம் ?
19. ஈழ மக்கள் கொன்றழிக்கப் பட்டபோது இந்தியா முழுதும் தொழிலாளி வர்க்கம் ஏன் போராடவில்லை என கேட்டால் தமிழக தொழிலாளி வர்க்கம் மட்டும் போராடியாதா என கேட்கிறீர்கள் ... தோழரே .... ஒரு லட்சம் விவசாயிகளை வைத்து சி.பி. எம் கட்சி மாநாடு நடத்துது ...... ஆனா அந்த ஒரு லட்சம் பேரை ஈழத்தில் நம் மக்கள் கொல்லப்பட்டபோது திரட்டத் தெரியலையா? ஒரு லட்சம் இளைஞ்சர்கள் வேலை கொடு .... கூலி கொடுன்னு திரட்ட திரட்ட திறன் உள்ள சி.பி.எம் கட்சி/ சி.பி.ஐ கட்சி, யாருமே போரை நிறுத்த இந்த மக்கள் சக்தியை பயன்படுத்தவில்ல ை என்பது எதை காட்டுகிறது? இவர்கள் இந்தியா என்ற ஏகாதிபத்திய ஆட்சி அமைப்பையே தேசம் என கருதும் வரை தேசிய இன சிக்கல்களை காணமாட்டார்கள் என்பதைத்தானே ? இவை காட்டுகின்றன? ( தமிழக கட்சிகளும் இதில் விதி விலக்கல்ல.... இந்திய ஆட்சியில் பதவி சுகத்திற்காக அலைபவர்கள் தான் இவர்கள் )
20. இந்திய தேச பார்வையில் இருந்து மட்டுமே பிரச்சினைகளை பார்க்கும் வரை தமிழக அரசிலை புரிந்துகொள்வது சற்று சிரமம்தான் .
21. கம்யுனிஸ்ட் கட்சி அறிக்கையில் தேசியத்தில் இருந்துதான் சர்வதேசியம் என இல்லை என்றீர்கள். தொழிலாளர் பிரச்சினையுடன் ஒப்பிடும்பொழுது தேசிய இன பிரச்சினைக்கு உரியது இரண்டாம் இடமே என்பதில் மார்க்சுக்கு எவ்வித சந்தேகமுமில்லை எனவும் கூறியிருந்தீர்க ள். நான் கூற வருவதன் நோக்கம் " பாட்டாளி வர்க்கம் அரசியல் அதிகாரத்தை பெற இந்திய சமூகத்தில் தேசிய இன சிக்கல் மார்க்சிய அடிப்படையில் அணுகப் படுவதில்லை என்பதால்தான் .... நீங்கள் கூறுவது போல கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையில் நான் கூறியது இல்லை என சுட்டிக்காட்டி உள்ளீர்கள். நீங்கள் கூறுவது முற்றிலும் சரி. அதில் இல்லாததை நான் கூறியது தவறு. நான் கூற வந்த நோக்கம் இதுதான்.
22. உலகின் அனைத்து பல்தேசிய நாடுகளும் இத்தகையனவே ... எனக் கூறி பிரிட்டிசாராலும ்/ காங்கிரசாலும் ஒன்று சேர்க்கப் பட்டவை என்றீர்கள். ஆனால், நான் கூற வருவது .... இந்தியா என்பது திட்டமிட்டும் ஆதிக்கமாக கடந்த 100 ஆண்டுகளில் உருவாக்கிவிட்டு " பாரத தேசம் பழம்பெரும் தேசம் நீர் அதன் புதல்வர் இன் இன் நினைவு அகற்றாதீர் " என கதை அளக்கிரார்களே ..... பிற நாடுகளில் இப்படியா நிலைமை இருக்கிறது ! என் மண்ணை என் அனுமதி இல்லாமல் எதனால் எடுக்கிறாய்? என கேட்டால் ..... என் மொழி ஏன் ஆட்சியில் இல்லை எனக் கேட்டால் உங்களுக்கு நான் பிரிவினைவாதியாக தெரிகிறேனே ? எப்படி ? பலாத்காரமாக நிலங்களை கைப்பற்றி ஆட்சி அமைத்த இந்தியா ஒரு ஏகாதி பத்திய அரசு !
23. த நா மா லெ க அனைத்து தேசிய இனங்களும் இணைந்து ஒரே கட்சியாக செயல்படுவதை ஏற்றுக் கொள்கிறதா ? என கேட்டிருந்தீர்க ள் ....
ஒரு கம்யூனிஸ்ட் கட்சி ஒடுக்கும் தேசிய இனத்தில் கட்டப்படும்போது அதற்க்கு இரு கடமைகள் இருக்கின்றன 1. தனது தேச பாட்டாளிகளை ஒடுக்கு முறையில் இருந்து விடுவிக்கவேண்டு ம். 2. தன்னை சுற்றி உள்ள ஒடுக்கப் படும் தேசிய இன பாட்டாளிகளை விடுவிக்கவேண்டு ம்
சரி. இந்தியாவில் இந்திய தேசம் எல்லா தேசிய இனங்களின் அரசுரிமையையும் பறித்து ஏகாதிபத்திய
அரசாக இருக்கிறது.
ஒடுக்குமுறை இருக்கிறது. ருசியா( மா ருஷ்ய தேசிய இனம் ஒடுக்கியதுபோல ) போல ஒரு தேசிய இனமாக ஒடுக்கவில்லை. இங்கு எல்லா தேசிய இனங்களின் அரசுரிமையையும் மறுத்து இந்தியா என்ற பெயரில் ஒடுக்குமுறை இருக்கிறது. ஒரு தேசிய இனமாக ஒடுக்கவில்லை.
இந்தி மொழி நம்மை ஒடுக்குகிறது ... இந்தி பேசும் தேசிய இனம் உள்ளதா ? இல்லை... இருப்பதாக காட்டுகிறார்கள் .
எனவே / எல்லா தேசிய இனங்களும் இணைந்து ஒரே கட்சியாக செயல்பட முடியாது.
ஒடுக்கப்படும் தேசிய இனங்களின் பாட்டாளி வகுப்பின் விடுதலை பிற ஒடுக்கப் படும் தேசிய இனங்களின் விடுதலைக்கு வழிவகுக்காது என்பதால் இந்தியா போன்ற நாடுகளில் தனி தனி தேச விடுதலை புரட்சியே இலக்காகக் கொள்ளமுடியும்.
கணினி மொழியை நான் புரிந்துகொள்ள சில காலம் ஆகும் ..... எனவே உங்கள் எல்லாக் கேள்விகளுக்கும் என்னால் முழுமையாக பதில் அளிக்க முடியாமல் சில குறைபாடு இருக்கலாம். நீங்கள் கூறும் பதிலைப் பொறுத்து நானும் கூகுல் மொழிமாற்றியை கற்றுக்கொண்டு பொருத்தமான பதிலை அளிப்பேன். அளிக்கிறேன். தொடர்ந்து விவாதியுங்கள்.. .. ஆரோக்கியமான அரசியல் விவாதம் .... தொடரட்டும்..... வாழ்த்துகள் .... நன்றி.
என்னுடைய கட்டுரைக்கும் அதன் பின்பான பதிலுரைக்கும் மீண்டும் நீண்ட முன்வைப்பை வைத்துள்ளீர்கள் . மிக்க மகிழ்ச்சி.
விமர்சனத்திற்கு எடுத்துக் கொண்ட வெளியீடு மற்றும் அதன் மீதான இந்த திறனாய்வு கட்டுரை ஆகியவற்றை ஒட்டியே நம்முடைய விவாதம் இருந்தால் சிறப்பாக இருக்கும். அந்த தளத்தை விட்டு விலகுவதானது ஆழமான அரசியல் விவாதத்திற்கு இட்டுச் செல்லாமல் தாறுமாறான ஓட்டத்திற்கு இட்டு செல்லும் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். அதன் அடிப்படையில் இந்த விவாதத்திற்கு பொருத்தமானது என்று கருதுகிறவற்றுக் கு மட்டும் பதிலளிக்கலாம் என எண்ணுகின்றேன். இ.பொ.க. மற்றும் இ.பொ.க(மா) குறித்து பல இடங்களில் விமர்சனம் செய்துள்ளீர்கள் . அது இங்கு விவாதப் பொருளாக இருக்காததால் அது குறித்து பெரும்பாலும் எந்த பதிலையும் தரவில்லை.
ஒருவேளை உங்களுடைய விமர்சனத்தில் முக்கியமானது என்று நீங்கள் கருதும் ஒன்று விடுப்பட்டிருந் தால் சுட்டிக்காட்டின ால் அடுத்த பதிவில் பதில் தருகிறேன். விவாதத்தை நம்முடைய கருப்பொருளினை ஒட்டியே நடத்துமாறும் கேட்டுக் கொள்கிறேன்.
1. என்னுடைய அரசியல் என்று நீங்கள் குறிப்பிட்டுள்ள தானது உங்களின் அகநிலைவாதத்தினை வெளிப்படுத்துகி றது. என்னுடைய அனைத்து கருத்துக்களும் மார்க்சிய கண்ணோட்டத்திலிர ுந்து பாட்டாளி வர்க்க அரசியலின் அடிப்படையிலே முன் வைக்கின்றேன். மார்க்சியக் கண்ணோட்டத்தின் அடிப்படையிலேயே இந்தியாவில் உள்ள பாட்டாளி வர்க்கத்தின் தலைமையில் அரசியலதிகாரத்தை கைப்பற்றி சோசலிசத்தை படைக்க முடியும் என்பதை முன் வைக்கிறேன்.
இந்திய தேசிய அரசியல் பார்வையிலிருந்த ு பார்ப்பதாக கூறியுள்ளீர்கள் . இந்தியா என்பது பல தேசிய இனங்களை உள்ளடக்கிய பல்தேசிய அரசு என்பதே என்னுடைய நிலைப்பாடாகும், இதற்கு நீங்கள் எந்த பெயர் சூட்டிக் கொண்டாலும் சரி. அது உங்கள் விருப்பம். பாட்டாளி வர்க்க நலனுக்கான அரசியல் எதுவோ அதுவே எனது அரசியல் நிலைப்பாடு என்பதை மீண்டும் நினைவூட்டுகின்ற ேன். எந்த பாட்டாளி வர்க்கம் என்று அடுத்து உங்களுக்கு கேள்வி எழும், நம்மை ஒடுக்கி வருகின்ற அரசின் கீழ் வாழ்கின்ற பாட்டாளி வர்க்கம் என்பதே இதன் பொருள்.
2. முதல் கேள்வியிலேயே உங்கள் அகநிலைவாதம் எவ்வாறு தவறாக கற்பிதம் செய்து கொள்கிறது என்பதை சுட்டிக் காட்டியிருக்கின ்றேன். அதுவே இந்த கேள்விக்கும் பொருந்தும். த.நா.ம.லெ.க.வின ் அரசியல் மீது செய்துள்ள விமர்சனத்திற்கு மார்க்சிய கண்ணோட்டத்தில் எந்த பதிலையும் தராமல் மாற்றுக் கேள்விகளையே நீங்கள் அதிகம் முன்வைக்கின்றீர ்கள். என்னுடைய கட்டுரையில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள ுக்கு இதுவரை நேரடியாக பதில் எதுவும் தரவில்லை. (ஒரு சிலவற்றைத் தவிர, அதற்கும் நான் மறுப்பு தெரிவித்துள்ளேன ் என்பது குறிப்பிடத்தக்க து).
த.நா.ம.லெ.க.வின ் வெளியீடு மீதான என்னுடைய விமர்சனம் பாட்டாளி வர்க்க அரசியலின் அடிப்படையிலேயே என்பதை ஏற்கனவே குறிப்பிட்டுள்ள ேன். ஒரு வேளை த.நா.ம.லெ.க.வின ் வெளியீடு பாட்டாளி வர்க்க அரசியலை தான் தாங்கி உள்ளது என்று நீங்கள் கருதுவீர்களேயான ால், இந்த கட்டுரையின் விமர்சனத்திற்கு பதிலளிக்கவும்.
3. விமர்சனத்திற்கு எடுத்துக் கொண்ட வெளியீடு யார் வெளியிட்டது என்பது குறித்து, வாசகர்களுக்கு குழப்பம் ஏற்படும் என்ற கருத்து ஒருவிதத்தில் பார்த்தால் ஏற்றுக் கொள்ள கூடியது தான். நான் ஏற்கனவே (முந்தைய பதிலில்) குறிப்பிட்டுள்ள படி த.நா.ம.லெ.க.வை பற்றி அறிமுகம் உள்ளவர்களுக்கு இந்த குழப்பம் வந்திருக்காது. அதனை பற்றி அறிமுகம் இல்லாதவர்களுக்க ு இந்த குழப்பம் வந்திருக்கும். அதன் துணை அமைப்புகளின் பெயரையும், த.நா.ம.லெ.க.வின ் அரசியல் அணிகள் என்றும் குறிப்பிட்டிருந ்தால் சரியாக இருக்கும் என்றும் முந்தைய பதிவில் குறிப்பிட்டிருந ்தேன். இதில் வாசகருக்கு ஏதேனும் குழப்பம் ஏற்பட்டிருந்தால ் அதற்கு நானே பொறுப்பு.
தோழர்.மணிவண்ணன் அவர்கள் கூறியப்படி ஏதேனும் ஒரு அமைப்பை மட்டும் குறிப்பிட்டிருந ்தாலும் அதுவும் விமர்சனத்திற்கு ள்ளாகியிருக்கும ். எனவே மேற்கண்ட நிலைப்பாடே சரியானது.
கட்சியின் அரசியலை மக்களிடம் கொண்டு செல்வதே மக்கள் திரள் அமைப்பின் வேலை. ஆனால் மக்கள் திரள் அமைப்பின் செயல்பாடுகளும் சரி, கட்சியின் செயல்பாடுகளும் சரி ஏதேனும் ஒரு வர்க்கத்தை பிரதிநிதித்துவப டுத்துகின்றன. த.நா.ம.லெ.க.வின ் துணை அமைப்புகள் வெளியிட்டுள்ள இந்த வெளியீட்டில் அப்பட்டமாக குட்டி முதலாளித்துவ தேசியவாதப் போக்கு வெளிப்பட்டு அம்பலமாகி உள்ளது. குறிப்பிட்ட சூழலில் குறிப்பான பிரச்சனைக்கு நெளிவு சுளிவுடன் மக்கள் திரள் அமைப்புகள் செயல்பட வேண்டும் என்பது உண்மையே. ஆனால், அது தான் சார்ந்துள்ள பாட்டாளி வர்க்க நலனை அடிப்படையாக கொண்டு பாட்டாளி வர்க்கத்தின் நலனுக்கு எந்த வழிமுறை உகந்ததோ அதன் அடிப்படையில் செயல்படும். மக்கள் திரள் பாதையில் நெளிவு சுளிவு என்ற போர்வையில் அப்பட்டமான தேசியவாதப் போக்கை இந்த வெளியீடு தாங்கி வருவதை தான் இங்கு சுட்டிக் காட்டி வருகின்றேன்.
4. நான்காம் பத்தியில் நீங்கள் முன்வைத்திருக்க ும் விமர்சனத்திற்கு அதே பத்தியிலேயே பதில் உள்ளது. இங்கு அரசு என்பது என்ன என்பதை மார்க்சிய கண்ணோட்டத்தில் புரிந்துக் கொண்டால் உங்களுக்கு இந்த சந்தேகமே எழுந்திருக்காது . அரசு என்பது ஒடுக்குமுறை கருவி. அது ஆளும் வர்க்கத்தை பிரதிநிதித்துவப ்படுத்தும் ஒரு அமைப்பு. ஆளும் முதலாளித்துவ வர்க்கத்தினை கட்டிக் காப்பதே இந்திய அரசு. இந்திய அரசின் ஒரு பகுதிக்கான பிரதிநிதியே தமிழக அரசு. இந்திய அரசு என்பது இந்தியாவில் உள்ள முதலாளி வர்க்கம் மற்றும் எஞ்சிய நிலவுடைமை வர்க்கத்தின் நலனை காக்கும் ஓர் உறுப்பு.
தமிழக சட்டமன்ற தேர்தல் என்பது இந்திய ஆளும் வர்க்கங்களுக்கு (அனைத்து தேசிய இனங்களையும் சேர்ந்த) சேவகம் செய்வதற்காக, இந்திய அரசின் மேற்பார்வையில், குறிப்பிட்ட சில துறைகளை மட்டும் மேற்பார்வையிடும ் குறிப்பிட்ட பகுதிக்கான ஆட்சியை கைப்பற்றுவதற்கா ன தேர்தலாகும். இந்த தேர்தல் மூலம் உழைக்கும் மக்களின் நலன்கள் எதுவும் தீர்க்க முடியாது. மாற்று அரசியல் என்ற போர்வையில் மாற்று முதலாளித்துவ அரசியல் கட்சிகள் தான் இங்கு மாறி வருகின்றன. எந்தக் கட்சிகள் ஆட்சிக்கு வந்தாலும் அவை இந்திய ஆளும் வர்க்கங்களுக்கு சேவை செய்யும் நோக்கத்தோடே செயல்படுகின்றது . இந்த சட்டமன்ற தேர்தலும் ஆளும் சுரண்டல் வர்க்கங்களின் நலன்களை பிரதிநிதித்துவப ்படுதால் தான் நாம் வர்க்க அடிப்படையில் இதனை ஆய்வு செய்ய வேண்டும் என்கிறோம். நீங்களே ஒப்புக் கொண்டுள்ளபடி த.நா.ம.லெ.க வின் வெளியீட்டில் பாட்டாளி வர்க்க கண்ணோட்டம் இல்லை என்பதும் தேசியவாதப் போக்கு மிகுந்துள்ளது என்பதும் தெளிவாகிறது. தேர்தல் மூலம் அனைத்து பிரச்சைனைகளையும ் தீர்த்து விடலாம் என்று ஏமாற்றி வருகின்ற போலி ஜனநாயகவாதிகளான முதாளித்துவ கட்சிகளின் அறிக்கைகளை போன்றே த.நா.ம.லெ.க வின் இந்த வெளியீடும் உள்ளது என்று குறிப்பிட்டுள்ள ேன்.
நீங்கள் கூறியப்படி இந்த தேர்தல் ஏன் எந்த மாற்றத்தையும் கொண்டு வராது என்பதனை வர்க்க கண்ணோட்டத்தில் தெளிவுப்படுத்தவ ில்லை. பிரச்சனைகளை மேலோட்டமாக சுட்டிக் காட்டுவதும், தமிழர்களின் பிரச்சனைகள் என்று பொதுவாக குறிப்பிடுவதும் , பழைய பிற்போக்குதனமான கலாச்சாரத்தை பிரதிநிதித்துவப டுத்துவதுமாக இந்த வெளியீடு உள்ளது.
5. இந்தியா முழுவதும் தொழிலாளர்கள் போராட பல தடைகள் இருப்பதாக கூறியுள்ளீர்கள் , ஆனால் என்ன தடை என்பதை தெளிவுப்படுத்தவ ில்லை. தொழிலாளி வர்க்கம் இந்திய அளவில் போராட்டக் களங்களில் எவ்வாறு ஒருங்கிணைந்து வருகின்றது என்பதை முந்தைய பதிலில் விளக்கப்படுத்தி யுள்ளேன். வரும் ஜூலை மாதம் 11 ஆம் தேதி ரயில்வே தொழிலாளர்கள் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 13 லட்சம் தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கெடுக்கிறார் கள் என்பதும் குறிப்பிடத்தக்க து. தொழிலாளி வர்க்கத்தை திரட்டுவதற்கு வர்க்க கண்ணோட்டத்தின் அடிப்படையிலேயே திரட்டபட வேண்டும். ஏற்கனவே என்னுடைய முந்தைய பதிலில் இது குறித்து லெனின் என்ன சொல்கிறார் என்பதனை சுட்டிக் காட்டியிருந்தேன ். அதனை மீண்டும் தங்களுக்கு நினவூட்டுகிறேன்.
ஒரு குறிப்பிட்ட அரசில் இருக்கின்ற எல்லா தேசிய இனங்களின் தொழிலாளர்களையும ், அரசியல், தொழிற்சங்க, கூட்டுறவு, கல்வித்துறை, இதரவை போன்ற ஒன்றுபட்ட பாட்டாளி வர்க்க ஸ்தாபனங்களில் இணைக்க வேண்டும் என்று தொழிலாளி வர்க்க நலன்கள் வற்புறுத்துகின்றன.
(தேசிய இனப்பிரச்சனையும ் பாட்டாளி வர்க்க சர்வதேசியவாதமும ்)
6. சுயநிர்ணய உரிமை என்பது என்ன? ஒருவர் கொடுத்து மற்றவர் பெறுவதா. இல்லை நிச்சயமாக இல்லை. சுயநிர்ணயம் என்பது ஒவ்வொரு தேசிய இனமும் தன்னுடைய தலைவிதியை தானே நிர்ணயித்துக் கொள்ளும் உரிமையாகும். இது யாராலும் அளிக்கப்பட்டு பெறுவதல்ல. திரு.செம்ஸ்கோவ் ஸ்கி அவர்களுக்கு லெனின் இது குறித்து என்ன பதில் தருகிறார் என்று பார்ப்போம்.
சுயநிர்ணய உரிமை என்றால், எனது அன்புமிக்க கலைப்புவாதத் திருவாளரே, ஒரு மத்திய பாராளுமன்றத்தில ் பிரச்சனைக்குத் தீர்வு காண வேண்டும் என்று அர்த்தம் இல்லை, பிரிந்து போகும் சிறுபான்மையினரு டைய பாராளுமன்றத்தில ் அல்லது சபையில் அல்லது அவர்களுக்கிடையி ல் நடத்தப்படும் பொதுமக்கள் வாக்கெடுப்பில் தீர்வு காண வேண்டும் என்பது தான் அர்த்தம்.
(தேசிய இனப்பிரச்சனையும ் பாட்டாளி வர்க்க சர்வதேசியவாதமும ் - தே.இ.பா.வ.ச)
7. ரசியாவில் பாட்டாளி வர்க்க கட்சியானது “ரசிய சமூக ஜனநாயகத் தொழிலாளர் கட்சி” என்ற பெயரில் பல்வேறு மார்க்சீயக் குழுக்கள் ஒன்றிணைந்து உருவாக்கப்பட்டத ு. போலந்து சமூக ஜனநாயகவாதிகளும் , பண்ட் அமைப்பினரும் (யூத தேசிய இனத்தை பிரதிநிதித்துவப ்படுத்தும் வகையில் - ஆனால் பண்ட் அமைப்பை யூத தேசிய இன தொழிலாளர்களின் பிரதிநிதியாக கட்சி ஏற்றுக் கொள்ளவில்லை) மட்டுமே தேசிய இன அடிப்படையில் பிரதிநிதிகளாக கலந்துக் கொண்டனர். “நீங்கள் குறிப்பிட்டுள்ள து போன்று ஒடுக்கும் தேசிய இன பாட்டாளி வர்க்க கட்சி அங்கே பலமாக கட்டப்பட்டு ஒடுக்கப்படும் தேசிய இனப் பாட்டாளிகளை சுயநிர்ணய அடிப்படையில் இணைத்துக் கொண்டது” எனக் கூறுவதானது உள்நோக்கத்துடன் வரலாற்றை திரிப்பதாகும். மகா ருசிய தேசிய இனமானது ஒடுக்கும் தேசிய இனமாகவும், மற்ற தேசிய இனங்கள் ஒடுக்கப்படும் தேசிய இனமாகவும் இருந்ததால், எந்த ஒரு தேசிய இனமும் பலவந்தமாக இணைத்து வைத்திருப்பதற்க ு பதிலாக அனைத்து தேசிய இனங்களும் மனப்பூர்வமான ஐக்கியத்தின் அடிப்படையில் ஒன்றிணைய வேண்டும் எனவும் லெனின் வலியுறுத்தினார் . அதனடிப்படையில் எந்த ஒரு தேசிய இனமும் மற்ற தேசிய இனங்களோடு இணைந்து நிற்பதா அல்லது தனித்த அரசாக பிரிந்து செல்வதா என்பதை சம்பந்தப்பட்ட தேசிய இனமே தீர்மானிக்கும் வகையில் இரண்டாவது காங்கிரசில் 9 வது செயல் திட்டம் வகுக்கப்பட்டது (முதல் செயல்திட்டம் அல்ல என்பது கவனிக்கத்தக்கது!)
ஒவ்வொரு தேசிய இனத்திற்கும் சொந்த தேசிய அரசை அமைத்துக் கொள்ளும் உரிமை (சுயநிர்ணய உரிமை) உண்டு எனவும், முதலாளித்துவத்த ின் கீழ் அது மிகமிக குறைவான சாத்தியம் கொண்டது என்றும், சோசலிசத்தின் கீழ் மட்டுமே சாத்தியம் என்றும் விளக்கினார். சோசலிசம் மட்டுமே அனைத்து ஒடுக்குமுறைகளைய ும் ஒழித்துக் கட்டி முரணற்ற ஜனநாயகத்தை நிறுவும் எனவும் விளக்கினார். எனவே, ரசியாவில் ஒடுக்கும் தேசிய இனப் பாட்டாளி வர்க்கம் பலமாக கட்டப்பட்டு, பின்னர், ஒடுக்கப்படும் தேசிய இனப்பாட்டாளி வர்க்கத்திற்கு சுயநிர்ணய உத்திரவாதத்தை அளித்து தான் கட்சியை கட்டியது என்று கூறுவது வரலாற்றை திரிப்பது ஆகும்.
8. இந்தியாவில் யார் நம்மை ஒடுக்குவது என்று கேட்டுள்ளீர்கள் . இதற்கு முன்னால் நாம் யார் என்பதை தெளிவாக்கி கொண்டால் நம்மை ஒடுக்குவது யார் என்பதை நாம் வரையறுப்பது எளிதாகி விடும். இதற்கு லெனின் “நமது வேலைத்திட்டத்தி ல் தேசிய பிரச்சனை (1903 ஆகஸ்டு)” என்னும் கட்டுரையில் (போலந்தில் உள்ள) போலிஷ் சோசலிசக் கட்சிக்கு பதிலளிக்கையில் இவ்வாறு கூறுகிறார்.
"தேசியப் பிரச்சினையில் எல்லாவற்றையும் “நாம்” (போலிஷ்காரர்கள் ) “அவர்கள்” (ஜெர்மானியர்கள் ,ருசியர்கள் இதரவை) என்ற எதிர்நிலை சொல்லித் தீர்த்து விடுகிறது என்று போ.சோ.க கருதுகிறது. ஆனால் சமூக ஜனநாயகவாதி “நாம்” (பாட்டாளி வர்க்கம்) “அவர்கள்” (முதலாளிகள்) என்ற எதிர்நிலைக்கு முதலிடம் கொடுக்கிறார்.
உங்கள் பின்னூட்டத்தில் போலிஷ் சோசலிசக் கட்சியின் அனுகுமுறை எத்தகையதாக உள்ளதோ அதே போன்று தான் உள்ளது, மார்க்சியவாதிகள ின் அனுகுமுறை இல்லை என்பது தெட்டத் தெளிவாகிறது. இந்த விளக்கமானது இந்த இடத்திற்கு மட்டுமல்லாமல், தேசிய இன அடிப்படையில் நீங்கள் பகுத்தாயும் அனைத்து இடங்களுக்கும் பொருந்தும்
9. நீங்கள் குறிப்பிட்டுள்ள து போன்று வர்க்க ஒடுக்குமுறையும் , சாதிய ஒடுக்குமுறையும் இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மக்களுக்கும் பொதுவாக இருக்கும் போது, ஒடுக்குமுறையை நிகழ்த்துபவர்கள ் தேசிய இனம் கடந்து ஒன்றிணைந்து நிற்கும்போது உழைக்கும் மக்கள் மட்டும் பிளவுப்பட்டு நிற்க வேண்டும் என்பது மார்க்சியத்திற் கு விரோதமானது.
ஏடறிந்த வரலாறு எல்லாம் வர்க்கப் போராட்டத்தின் வரலாறாக இருக்கும் போது இங்கு வரலாற்றை வர்க்க அடிப்படையில் பார்க்காமல் தேசிய இனத்தின் அடிப்படையில் பார்க்க வேண்டும் என்பது குட்டி முதலாளித்துவ தேசியவாதத்திற்க ு அடிப்பணிவதாகும் . அதற்காக இங்கு தேசிய இன ஒடுக்குமுறை குறித்து பாட்டாளி வர்க்கம் அக்கறை கொள்ளக் கூடாது என்பதல்ல. ஒடுக்கப்படும் தேசிய இனப் பாட்டாளிகளின் மீதான இரட்டை ஒடுக்குமுறையை (வர்க்க ஒடுக்குமுறை மற்றும் தேசிய இன ஒடுக்குமுறை) வர்க்க பகுத்தாய்வின் மூலம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இங்கு தேசிய இன வரலாறு குறித்தான அவசியம் எழுவது ஏன், இந்திய ஆளும் வர்க்கங்களால் அனைத்து தேசிய இன பாட்டாளிகளும் ஒடுக்கப்படுவது வர்க்க அடிப்படையில் தானே தவிர, தேசிய இன அடிப்படையில் அல்ல. ஏனெனில் இந்தியாவில் உள்ள அனைத்து தேசிய இன முதலாளிகளும் ஒன்றிணைந்து ஆளும் வர்க்கங்களாக அமைந்து அனைத்து தேசிய இன உழைக்கும் மக்களையும் சுரண்டி வருகின்றனர். ஆளும் வர்க்கங்கள் தேசிய இனம் கடந்து ஒன்றிணைந்து செயல்படும் வேளையில் உழைக்கும் மக்களை தேசிய இன ரீதியில் பிரிப்பது என்பது தேசியவாதத்தை தூக்கி நிறுத்துவதாகும்.
என்னுடைய பதிலில் ஏற்கனவே சுட்டிக் காட்டியுள்ளதை மீண்டும் நினைவூட்டுகின்றேன்
“தொழிலாளர் பிரச்சினையுடன்” ஒப்பிடும்போது தேசிய இனப் பிரச்சினைக்கு உரியது இரண்டாம் இடமே என்பதில் மார்க்சுக்கு எவ்வித சந்தேகமும் இல்லை. ஆனால் அவரது தத்துவம் தேசிய இன இயக்கங்களைப் புறக்கணித்ததே கிடையாது.
தொழிலாளி வர்க்கத்தின் வெற்றி மட்டுமே எல்லாத் தேசிய இனங்களின் பரிபூரண விடுதலையைக் கொண்டு வர முடியும் என்பதை அவர் அறிந்திருந்த காரணத்தால் தேசிய இன இயக்கங்கள் நிரந்தரமானவை என்று அவர் கருதவில்லை. (மார்க்சு குறித்து லெனின் எழுதியது)
10. ஏகாதிபத்தியத்தி ன் தோற்றத்திற்கு பின்பு பின் தங்கிய நாடுகளில் முதலாளித்துவத்த ின் வளர்ச்சியானது உள்ளிருந்து வளராமல் ஏகாதிபத்திய நாடுகளின் உதவியோடு வளர்ந்தது. இது இந்தியாவிற்கு மட்டுமல்ல. அனைத்து நாடுகளுக்கும் பொருந்தும். 1871 பாரீஸ் கம்யூன் புரட்சிக்கு பின்பு முதலாளி வர்க்கம் தன்னுடைய புரட்சிக் குணத்தை இழந்து விட்டது. அது பழைய சமூக அமைப்பை வீழ்த்தி அதன் பொருளுற்பத்தி முறையை முற்றாக துடைத்தெறிந்து முதலாளித்துவத்த ை நிறுவும் செயலை மாற்றியமைத்தது. புரட்சிகர முறையில் முதலாளித்துவ ஜனநாயக புரட்சியை நடத்தினால் முதலாளித்துவத்த ோடு தோன்றும் பாட்டாளி வர்க்கம் புரட்சிகர தன்மையைப் பெற்று தனக்கு எதிராக நிற்கும் என்பதை முதலாளி வர்க்கம் அனுபவ பூர்வமாக உணர்ந்ததனால், முதலாளி வர்க்கமானது பிற்போக்கு நிலவுடைமை வர்க்கத்துடனும் , ஏகாதிபத்தியத்து டனும் சமரசம் செய்து கொள்கிறது. இது இந்தியாவிற்கு மட்டுமல்ல, ரசியா மற்றும் சீனாவிற்கும் பொருந்தக் கூடியதே.
11. ஒடுக்குமுறை அனைத்து தேசிய இனங்களின் மீது உள்ளதாக கூறும் அதே வேளையில் அதனை வர்க்க அடிப்படையில் பகுத்தாயாமல் மேலோட்டமாக மட்டுமே கூறியுள்ளீர்கள் . அதனைத் தொடர்ந்து மொழி ஒடுக்குமுறை, சாதிய ஒடுக்குமுறை அனைத்தும் அனைத்து தேசிய இனங்களை சார்ந்த உழைக்கும் மக்கள் மீது நிகழ்த்தப்படுவத ாக கூறுவது ஒருவிதத்தில் சரிதான். ஆளும் வர்க்கமானது சில தேசிய இனங்களுக்கு சலுகைகள் அளிப்பதன் மூலம் ஏற்றதாழ்வை உண்டாக்கி தேசிய இனங்களுக்கிடையே பகைமையை தூண்டுகிறது. தேசியவாதிகள் இந்த ஆளும்வர்க்கத்தி ன் சூழ்ச்சிக்கு பலியாகி இனவாதத்தை முன்னெடுக்கின்ற னர். தங்களின் பாதையும் அத்தகையதாகவே இருக்கிறது.
இவ்வாறு நீங்கள் முன்வைக்கும் அத்துணை ஒடுக்குமுறைகளும ் இந்திய அரசின் கீழ் உள்ள அனைத்து தேசிய இன உழைக்கும் மக்களுக்கும் பொதுவானதாக உள்ளதாக தங்களின் பதிவிலேயே மேலோட்டமாக குறிப்பிட்டுள்ள ீர்கள். ஆனால் ஒடுக்குமுறையின் பிரதான வடிவமான வர்க்க ஒடுக்குமுறை குறித்து எந்த வித விவரிப்பையும் காணமுடியவில்லை என்பது ஆச்சரியப்படதக்க தல்ல. ஏனெனில் தங்களின் அனுகுமுறை முழுவதும் குட்டிமுதலாளித் துவ தேசியவாதக் கண்ணோட்டத்தை அடிப்படையாக கொண்டுள்ளதால், வர்க்க அடிப்படையில் பிரச்சனைய ஆராய்வதைக் காட்டிலும் தேசிய இன அடிப்படையில் பிரச்சனையை ஆராய்வதை முதன்மையானதாக கொண்டுள்ளீர்கள்.
12. இந்தியாவில் உள்ள அனைத்து தேசிய இன மக்களின் மீதான ஒடுக்குமுறையை மேலோட்டமாக சொல்லிக் கொண்டே வரும் வேளையில் "இங்கு ஒட்டு மொத்தப் புரட்சி ஒட்டு மொத்த தொழிலாளி வர்க்க எழுச்சி என்பது சாத்தியமில்லை.. .. என்பது உங்களுக்கு இப்போது விளங்கி இருக்கும் !” என்று தாங்கள் கூறுவது ஆச்சரியமளிக்கிற து. எந்த வித விளக்கமும் கூறாமல் இப்போது புரிகிறதா என்றும் உங்களுக்கு விளக்கி விட்டேன் என்றும் மந்திரவித்தை செய்பவர் போல கூறுவது ஆச்சரியமாக உள்ளது. இதற்கு முன்னர் நீங்கள் அளித்த 11 விளக்கங்களில் உங்களின் வாதத்திற்கு எந்த விதத்தில் உங்களின் முடிவு வலு சேர்த்துள்ளது என்பதை சுட்டிக்காட்டாம ல், மேலோட்டமாக பிரச்சனைகளை ஆராய்ந்து வந்து, 12 வது விளக்கத்தில் இப்போது புரிகிறதா என்று வினவுவது ஆச்சரியமளிக்க கூடியதாக உள்ளது.
இந்திய அளவில் தொழிலாள வர்க்கம் அணிதிரண்டு போராடி வருவது குறித்து கடந்த பதிலிலேயே கூறியிருந்தேன். ஆனால் சி.பி.ஐ, சி.பி.எம் இன் அனுகுமுறைகளை மட்டும் முன்வைத்து கேள்வி எழுப்புவது என்பது திரிபுவாதத்திடம ் போய் மீண்டும் மீண்டும் புரட்சிகரமாக போராட வேண்டும் என்று எதிர்பார்ப்பது போல உள்ளது.
ஒவ்வொரு தேசிய இனத்திற்கு உரிய கலாச்சாரம் என்று நீங்கள் குறிப்பிடுகிறீர ்கள். ஆனால், லெனின் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்.
தேசிய இனக் கலாச்சாரம் என்னும் கோசம் முதலாளித்துவ (அடிக்கடி கறுப்பு நூற்றுவர், சமயக்குருமார்கள ் ஆகியோரதுங்கூட) ஏமாற்றாகும். நம்முடைய கோசம்; ஜனநாயகத்தின், உலகத்தொழிலாளி வர்க்க இயக்கத்தின் சர்வதேசியக் கலாச்சாரம். (தே.இ.பா.வ.ச)
பாட்டாளி வர்க்கத்துக்கு பணிபுரிய விரும்புவோர் எல்லாத் தேசிய இனங்களையும் சேர்ந்த தொழிலாளர்களையும ் ஒன்றுபடச் செய்ய வேண்டும், முதலாளித்துவ தேசியவாதத்தை –“சொந்தமானது” ஆயினும், அன்னியமானது ஆயினும்- எதிர்த்துச் சிறிதும் பிறழாமல் போராட வேண்டும். தேசிய இனக் கலாச்சாரம் என்ற கோசத்தை ஆதரிப்போர் இருக்க வேண்டிய இடம் குட்டிமுதலாளித் துவப் பகுதியோர் மத்தியிலே அன்றி, மார்க்சியவாதிகள ் மத்தியில் அல்ல. (தே.இ.பா.வ.ச)
13. இந்தியாவில் ஜனநாயகப் புரட்சி (சோசலிசப் புரட்சி என்பது எனது நிலைப்பாடு) வெற்றி அடைய வேண்டுமென்றால் ஒவ்வொரு தேசிய இனமும் தமது சொந்த தேசிய அரசை அமைத்துக் கொள்ள வேண்டும் என்ற தங்களின் அப்பட்டமான தேசியவாத போக்கை வெளிப்படுத்துகி றது. அடுத்ததாக ஜனநாயகப் புரட்சி நடைப்பெற்ற அனைத்து நாடுகளிலும் ஒரு தேசிய அரசு அமைவது தவிர்க்க இயலாத மார்க்சிய விதி என்று கூறுவதன் மூலம் உங்களின் தேசியவாதத்திற்க ு ஆதரவாக வரலாற்றை மோசமாக திரிக்கும் போக்கு அப்பட்டமாக வெளிப்பட்டுள்ளத ு. 1917 பிப்ரவரியில் ரசியாவில் நடந்த ஜனநாயகப் புரட்சியும், 1949-ல் சீனாவில் நடந்த புதிய ஜனநாயகப் புரட்சியும் தேசிய அரசு அமைவதில் நடைபெறவில்லை என்பது உலகறிந்த விசயம். இந்த வரலாற்று உணமைகளை சோற்றில் முழு பூசணிக்காயை மறைப்பது போல் தாங்கள் மறைக்க முயலுவதானது முதலாளித்துவ தேசியவாதத்தின் மீதான உங்களின் பற்றுதலை அப்பட்டமாக தோலுரித்துக் காட்டுகிறது.
தேசத்தின் உருவாக்கமும் ஜனநாயகப்புரட்சி யும் பிரிக்க முடியாதது என்பது கார்முகிலின் கற்பனாவாதமே, தவிர, மார்க்சியம் அல்ல.
14. புரட்சிக்கு பின்பு எந்த மொழி அடிப்படையில் ஆட்சி அமையும்?
ரசியாவிலும், சீனாவிலும் புரட்சிக்கு பின்பு எந்த நடைமுறை பின்பற்றப்பட்டத ோ அந்த நடைமுறை அல்லது அதற்கு மேம்பட்ட பாட்டாளி வர்க்கத்தின், அனைத்து உழைக்கும் மக்களின் நலனை பிரதிபலிக்கும் திட்டம் எதுவோ அதனை அடிப்படையாக கொண்டிருக்கும்.
எதிரி யார் என்பது யாரை எதிர்த்துப் புரட்சி நடக்கும் என்பது குறித்தும் நீண்ட விவாதங்களில் பல இடங்களில் சுட்டிக்காட்டியுள்ளேன்.
15. இங்கு இரு அரசியல் தான் உள்ளது என்று நீங்கள் குறிப்பிடுவது முதலாளித்துவ தேசியவாத அடிப்படையில் பகுப்பாய்வை நடத்துகின்றீர்க ள். ஆனால் மார்க்சிய கண்ணோட்டத்தில் வர்க்க பகுப்பாய்வின் படி, இந்திய ஆளும் வர்க்கங்களின் சுரண்டலை பாதுகாக்கும் அரசியலும், அதற்கு எதிராக பாட்டாளி வர்க்கத்தின் தலைமையில் உழைக்கும் மக்களின் நலனை பாதுகாக்கும், முதலாளித்துவத்த ை வீழ்த்தி அரசியலதிகாரத்தை கைப்பற்றும் பட்டாளி வர்க்க அரசியலும் என இரண்டு போக்குகள் உள்ளது. இதன் மூலம் தங்களின் பகுப்பாய்வு எவ்வாறு வர்க்க குணாம்சத்தை தூர விலக்கிவிட்டு இனவாதப் போக்கை கைக்கொள்கிறது என்பது தெட்டத் தெளிவாக விளங்குகிறது
16. பாட்டாளி வர்க்கம் தேசிய இனப் பிரச்சனையை விட வர்க்க நலனுக்கே முன்னுரிமை தருகிறது என்று நான் குறிப்பிட்டது ஒர் அரசின் கீழ் இருக்கும் உழைக்கும் மக்களின் வர்க்க மற்றும் தேசிய அடிப்படைகளை கொண்டே தவிர, வெவ்வேறு அரசுகளின் கீழ் இருக்கும் உழைக்கும் மக்களை குறிப்பது அல்ல. தேசத்தின் விடுதலை என்பது பாட்டாளி வர்க்கத்தின் நோக்கம் அல்ல. அரசியல் அதிகாரத்தை பாட்டாளி வர்க்கம் கைப்பற்றுவதே பாட்டாளிவர்க்கத ்தின் அரசியல்.
17. ஈழ மக்கள் கொல்லப்பட்ட போது இந்தியா முழுவதும் தொழிலாளி வர்க்கம் போராடவில்லை என்று நீங்கள் முதல் பதிவில் குறிப்பிட்டதற்க ு, தமிழகத்திலும் தொழிலாளி வர்க்கம் போராடவில்லை என்றும் ஏன் என்பது குறித்தும் விளக்கினேன். ஆனால் என்னுடைய பதிலை விமர்சனம் செய்வதாக எடுத்துக் கொண்டு அதனைப் பற்றி வாய் திறக்காமல் வேறு ஏதேதோ பேசி விட்டு சென்றுள்ளீர்கள்.
18. பாட்டாளி வர்க்க கட்சியானது இந்தியாவில் உள்ள தேசிய இன இயக்கங்களை பற்றிக் கவனம் கொள்ள வேண்டிய அதே நேரத்தில் எந்தவொரு தேசிய இனமும் தாம் விரும்பும் அரசை அமைத்துக் கொள்வதற்கான திட்டத்தை கொண்டிருக்க வேண்டும் என்பதே மார்க்சிய நிலைப்பாடு. அதற்காக தேசிய இன அடிப்படையில் தொழிலாளர்களையும ் உழைக்கும் மக்களையும் பிளவுபடுத்தும் வகையில் தேசியவாத கோசத்தை முன்வைப்பதானது மார்க்சியத்திற் கு விரோதமானதாகும்.
19. இந்தியாவில் உள்ள அனைத்து வளங்களையும் இந்திய முதலாளிகளும் பன்னாட்டு முதலாளிகளும் தங்களின் கொள்ளை இலாபத்திற்காக சுரண்டி வருகின்றன. இது அனைத்து நாடுகளுக்கும் பொருந்தக் கூடியதுதான். பெரும்பான்மை உழைக்கும் மக்களின் நலனை உத்திரவாதப்படுத ்த வேண்டுமானால் ஆளும் சுரண்டல் வர்க்கத்தை ஆட்சிக் கட்டிலிலிருந்து அகற்றி பாட்டாளி வர்க்க அரசை நிறுவி சோசலிச உற்பத்தி முறையை நிறுவுவதே இதற்கு தீர்வாகும். நீங்கள் குறிப்பிடும் வரலாற்று திரிபு என்பது உழைக்கும் வர்க்கங்களுக்கு எதிராக அனைத்து நாடுகளிலும் ஆளும் வர்க்கங்கள் செய்வது தான். இந்திய ஆளும் வர்க்கங்களும், அதிகார வர்க்கங்களும் அவர்களுக்கு சாதகமாக வரலாற்றை திரிக்கின்றன. இதற்கு தீர்வு பாட்டாளி வர்க்க தலைமையில் அரசியலதிகாரம் நிறுவப்படுவது ஒன்றுதான்.
20. பாட்டாளி வர்க்க அரசியலை வர்க்க கண்ணோட்டத்தில் அனுகாமல் தேசிய இனக் கண்ணோட்டத்தில் அனுகுவதால் தான் ஒடுக்கப்படும் தேசிய இனப்பாட்டாளி வர்க்கமும் மற்றொரு ஒடுக்கப்படும் தேசிய பாட்டாளிவர்க்கம ும் ஒன்று சேராது என்ற கற்பனாவாதத்தில் மூழ்கியுள்ளீர்க ள். ஆனால் நடைமுறை என்னவாக உள்ளது என்பதை கடந்த பதிலில் கூறியிருந்தேன். இந்திய அளவில் தொழிலாளி வர்க்கமானது ஒருங்கிணைந்து வருவதோடு ஒன்றுபட்டு போராடி வருகிறது என்பதனையும் சுட்டிக்காட்டியிருந்தேன ்.
ஓர் அரசின் கீழ் உள்ள பகைமைத் தன்மையுள்ள ஒடுக்கும் தேசிய இனமும், ஒடுக்கப்படும் தேசிய இனமும் ஒன்றிணைந்து பாட்டாளி வர்க்க புரட்சியை நடத்துவது சாத்தியமாக இருக்கும் போது, பகைமைத் தன்மையற்ற தேசிய இன பாட்டாளிகள் ஒன்றிணைவதில் எந்த தடையும் இருக்க முடியாது என்பது சாதாரண பாமரனுக்கும் கூட புரியும். ஆனால் மார்க்சிய போர்வையில் ஒளிந்திருக்கும் இனவாதிகளுக்கு இது என்றுமே ஏற்றுக் கொள்ள முடியாததாக தான் இருக்கும்.
"ஆனா என்று சொல்லுகிறவன் ஆவன்னா என்று சொல்லித் தீர வேண்டும்" - தேசியவாதத்தின் கருத்து நிலையை மேற்கொண்டவன் தன்னுடைய தேசிய இனத்தைச் சுற்றி, தன்னுடைய தேசியத் தொழிலாளி வர்க்க இயக்கத்தைச் சுற்றி, ஓர் சீனத்துச் சுவர் எழுப்பிக் கொள்ளும் விருப்பத்துக்கு இயல்பாகவே வந்து சேருகிறான். இதற்கு அர்த்தம் ஒவ்வொரு நகரத்திலும், ஒவ்வொரு சிறு ஊரிலும் கிராமத்திலும் தனித்தனிச் சுவர்கள் கட்டுவதாகும் என்பதைப் பற்றிக் கூட அவன் தர்மசங்கடப்படுவ தில்லை. தன்னுடைய பிளவுப்படுத்தும ் துண்டுப்போடும் செயல்தந்திரத்தா ல் எல்லாத் தேசிய இனங்களையும், எல்லா மானிட இனங்களையும், எல்லா மொழிகளையும் சேர்ந்த பாட்டாளி வர்க்கத்தினர்கள ையும் அணிதிரட்டி ஒற்றுமை சேர்க்கும் மகத்தான அறைக்கூவலைச் சுத்த பூஜ்யமாக்கி வருகிறான் என்பதைப் பற்றியும் கூட, அவன் தர்மசங்கடப்படுவ தில்லை. (லெனின் நூல் திரட்டு, தொகுதி - 7)
இறுதியாக, தங்களுடைய விமர்சங்கள் என்னுடைய கட்டுரையின் மீதும், திறனாய்வுக்காக எடுத்துக் கொள்ளப்பட்ட த.நா.ம.லெ.க.வின ் வெளியீட்டை ஒட்டியும் இருந்தால் ஆரோக்கியமாகவும் பயனுள்ளதாகவும் இருக்கும் என கருதின்றேன். அப்படியான தங்களின் கருத்துக்களை மட்டுமே எதிர் நோக்குகிறேன்.
" விமர்சனத்திற்கு எடுத்துக் கொண்ட வெளியீடு மற்றும் அதன் மீதான இந்த திறனாய்வு கட்டுரை ஆகியவற்றை ஒட்டியே நம்முடைய விவாதம் இருந்தால் சிறப்பாக இருக்கும். அந்த தளத்தை விட்டு விலகுவதானது ஆழமான அரசியல் விவாதத்திற்கு இட்டுச் செல்லாமல் தாறுமாறான ஓட்டத்திற்கு இட்டு செல்லும் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்"
என இறுதியாக அளித்த பதிலில் தாங்கள் கூறியுள்ளீர்கள் ! உண்மையில் ஆழமான அரசியல் விவாதத்திற்கு இட்டுச் செல்ல இந்த கருத்துக்கள் பேசப்பட்டே ஆகவேண்டும்... தலைப்பிலேயே நீங்கள் விமரிசிக்கிறீர் கள்.... தலைப்பை ஒட்டிய விவாதம் மட்டும்தான் நாம் செய்ய முடியும்... உங்கள் தலைப்பையே நான் தவறு என நிறுவாமல் நமது விவாதம் முடிவிற்கும் வர வாய்ப்பில்லை தோழர்.
1). ஆம் தோழர். உங்கள் கட்டுரைக்கான தலைப்பே விவாதிக்கப் பட வேண்டும்.... ": குட்டி முதலாளிய தேசிய வாதம் " என்கிறீர்கள்.. அதனால்தான் நீங்கள் தெளிவாக உங்கள் தலைப்பில் இருந்தே பேசுகிறீர்கள். உங்கள் தலைப்பே ஆய்வுசெய்யப் படவேண்டும். தேசிய அரசு என பேசினாலே அது " குட்டிமுதலாளிய தேசியவாதமாக" உங்களுக்கு தெரிகிறது.
தலைவர் லெனினிடம் ரஷ்யாவில் சுயநிர்ணய உரிமை அளிப்பதால் தனி தனி தேசங்களாக சிதறிவிடும் என சிலர் கேள்வி எழுப்பினார்கள். .. அதற்கு பதில் அளித்த தலைவர் லெனின் " இதற்காக நாம் அஞ்ச வேண்டியதில்லை. சுதந்திரக் குடியரசுகளின் எண்ணிக்கை எத்தனை ஆனாலும் நாம் அஞ்சவில்லை. அரசு எல்லைகள் எப்படி வரைய பட்டிருக்கின்றன என்பது நமக்கு முக்கியமில்லை. ஆனால் எல்லா தேசங்களையும் சேர்ந்த உழைக்கும் மக்கள் முதலாளிகளுக்கு எதிரான போராட்டத்தில் தேசிய இன வேறுபாடின்றி தொடர்ந்து கூட்டாக இருப்பதுதான் நமக்கு முக்கியமானது." என தெளிவுபடுத்துகி றார். ( தொகுதி நூல் 26 - பக்கம் 344: லெனின் )
" அரசியல் ரீதியில் பிரிந்து போகும் சுதந்திரம் எல்லைக்கோடுகளை வரைவதை குறிக்கிறது " - லெனின் (தேசிய கொள்கையும் பாட்டாளி வர்க்க சர்வதேசிய வாதமும் நூல் பக்கம்- 199 )
மேலும் தாங்கள் தற்போது பதிவிட்ட என் 1 இல்
"இந்தியா என்பது பல தேசிய இனங்களை உள்ளடக்கிய பல்தேசிய அரசு என்பதே என்னுடைய நிலைப்பாடாகும்" என தங்கள் நிலைப்பாட்டை கூறியுள்ளீர்கள் மகிழ்ச்சி.... இதிலிருந்துதான் நாம் விவாதத்தைக் கூட தொடர முடியும்.
தேசத்தின் உருவாக்கத்திற்க ும் ஜனநாயகப் புரட்சிக்கும் இடையிலான உறவு பிரிக்க முடியாதது என்பது எங்கள் தோழர் கார்முகில் அவர்களின் கண்டுபிடிப்பு கற்பனாவாதம், அது மார்க்ஸீயமல்ல என்கிறீர்கள்... .
அப்படியானால் உங்கள் சோஷலிஸப் புரட்சி கோட்பாட்டுப் படி
அ). நீங்கள் ஜனநாயக புரட்சி முடிக்கப் படாத இந்திய சமூகத்தில் அடுத்து சோஷலிஸப் புரட்சி வேலைத்திட்டத்தி ன் அடிப்படையில் பாட்டாளி வர்க்க இயக்கம் தனது பணிகளை கொள்ளவேண்டும் என்றாகிறது .... அவ்வாறு பார்க்கும் போது உங்களுக்கு " தேசத்தின் உருவாக்கத்திற்க ும் ஜனநாயகப் புரட்சிக்கும் இடையிலான உறவு பிரிக்கமுடியாது என்பது " கற்பனாவாதமாக தெரிகிறது.
ஆ). அல்லது தாங்கள் ஜனநாயகப் புரட்சி நடைபெற்ற நாடுகளில் " முதலாளித்துவம் நிலப் பிரபுத்துவத்தை எவ்வாறு வெற்றி கொண்டது" என்ற வரலாற்று சான்றுகளில் " இக் கோட்பாடு தவறு என " நிறுவவேண்டும். ஆனால் இக்கோட்பாட்டை மார்க்சிய அடிப்படியில் தங்களுக்கு சுட்டிக் காட்டுகிறேன்.
முதலாளித்துவத்த ின் விரிவான விரைவான வளர்ச்சிக்கு நிலப்பிரபுத்துவ ம் தடையாக நிற்கிறது. எனவே வரலாற்றில் முதலாளித்துவம் நிலப்பிரபுத்துவ தடையை தகர்த்தெறிந்து தேசிய அரசை அமைக்கிறது.
இதை மார்க்சிய ஆசான்கள் தெளிவு படுத்துகிறார்கள ்.... தேசிய அரசு என்பது முதலாளித்துவ அரசுதான்.
நிலப்பிரபுத்துவ ம் மீது முதலாளிய சமூகம் வெற்றி கொள்ளும் போதே " தேசிய அரசு வரலாற்றில் அமைகிறது"
தேசிய அரசு என்பது தேசிய இயக்கம் இன்றி சாத்தியமில்லை.
ஆதி பழங்குடி சமூகத்தின் அழிவில் அடிமை உடமை சமூக அமைப்பு உருவாகிறது.
அடிமை உடமை சமூக அமைப்பின் அழிவில் நிலவுடமை சமூக அமைப்பு அமைகிறது.
நிலவுடமை சமூக அமைப்பின் அழிவில் முதலாளித்துவ தேசிய அரசு அமைகிறது.
பாரிஸ் கம்யூன் எழுச்சிக்கு பிறகு முதலாளித்துவம் விவசாயிகளுடன் இணைந்து நிலப் பிரபுத்துவத்தை வீழ்த்தி " தேசிய அரசை அமைப்பதில்லை" என்ற அனுபவத்தை பெற்றுக் கொள்கிறது.
எனவே நிலப் பிரபுத்துவ சக்திகளுடன் சமரசமான வகையில் சென்றே முதலாத்துவ அரசை நடத்துவது என முதலாளிகள் உலக அளவில் முடிவிற்கு வருகிறார்கள்.
எனவேதான் இன்று இந்திய சமூகத்தில் முதலாளிய தொழிற்சாலைகள் ஒருபுறம் :
மறுபுறம் பல்லாயிரம் ஏக்கர் நிலத்திற்கு சொந்தக்காரர்கள் மற்றும் நிலவுடைமை கந்து வட்டி கொடுமை என இருப்பது தாங்கள் அறிந்ததுதான்.
முற்றாக நிலவுடமை சமூக அமைப்பு இங்கு தகர்க்கப் படவில்லை. முழு முதலாளிய வளர்ச்சியும் வந்து சேரவில்லை. எனவே பாட்டாளி வர்க்கம் இங்கு முதலாளிய சமூகம் செய்யவேண்டிய ஜனநாயகப் புரட்சியை தான் செய்யவேண்டும் என்பதை தனது கடமையாக கொள்கிறது. (சோஷலிஸ்ப் புரட்சிதான் என்பதற்கான காரணிகளை தாங்கள் விளக்குங்கள் )
முதலாளிகள் இந்த ஜனநாயகப் புரட்சிக்கு தலைமை தங்கினால் " ஜனநாயகப் புரட்சி" அவர்களின் நோக்கம் - பாராளுமன்ற அரசு - ஏகாதிபத்தியம் என செல்லும் !
நிலப்பிரபுத்துவ சமூக அமைப்பை வீழ்த்தும் கடமையை பாட்டாளி வர்க்கம் செய்யும்போது " புதிய ஜனநாயக புரட்சி " ஆகிறது. பாட்டாளி வர்க்கம் ஜனநாயகப் புரட்சியை முடித்தவுடன் இடையீடின்றி அது சோசலிசம் கம்யூனிச சமூகம் என முன்னேறுகிறது !
நிலப் பிரபுத்துவம் முற்றாக வீழ்த்தப் படாத எல்லா நாடுகளிலும் ஜனநாயகப் புரட்சி தவிர்க்க இயலா வரலாற்று விதியாகும்.... இதைக் கடக்காமல்.... சோசலிசம் கம்யூனிசம் நோக்கி பாட்டாளி வர்க்கம் முன்னேற முடியாது.
தேசிய இயக்கத்தின் மூலமே ஒரு நாட்டில் முதலாளிய சமூகம் நிலப்பிரபுத்துவ த்தை வீழ்த்துகிறது.
" தேசிய இயக்கம் என்பது சாராம்சத்தில் முதலாளித்துவ இயக்கமே ஆகும்" என்கிறார் ஸ்டாலின் ( மார்க்சியமும் தேசிய இன பிரச்சினையும் - ஸ்டாலின் 1981 தமிழ் பாதிப்பு நூல் )
" உலகம் முழுதும் முதலாளித்துவமான து இறுதி வெற்றி கொள்ளும் காலகட்டம் தேசிய இயக்கங்களுடன் இணைந்துள்ளது" என்கிறார். லெனின் ( தேசிய கொள்கையும் பாட்டாளி வர்க்க சர்வதேசிய வாதமும் நூல் - பக்கம் 73 )
" ஒவ்வொரு தேசிய இயக்கத்தின் போக்கும் நவீன முதலாளித்துவத்த ின் தேவைகள் மிக நன்றாக பூர்த்தி செய்யப் பட வாய்ப்புள்ள தேசிய அரசுகள் அமைப்பதற்கான வழியிலானது .மிக மிக தீர்க்கமான பொருளாதார காரணிகள் இந்த இலக்கை நோக்கி இட்டுச்செல்கின் றன. " { மேற்படி நூல் பக்கம் 73 }
" உலக வரலாற்றில் தேசிய அரசு என்பது ஒரு போது விதியாக இருக்கிறது " லெனின் (ஆங்கில தொகுப்பு நூல் 41 பக்கம் 314)
"எல்லா முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சிகளிலும் சுயேச்சையான தேசிய அரசு அமைக்கப்படும் போக்கு காணப்படுகிறது " லெனின். ( தேசிய கொள்கையும் பாட்டாளி வர்க்க சர்வதேசிய வாதமும் நூல் - பக்கம் 159 )
நிலப்பிரபுத்துவ த்திற்கு எதிரான முதலாளித்துவ தேசிய இயக்கங்கள் மேற்கு ஐரோப்பாவில் தேசிய ஒருமை கொண்ட ஒற்றை தேசிய அரசுகளை அமைத்தன.
அவை அங்கு தங்கு தடையற்ற விரிவான முதலாளிய வளர்ச்சிக்கு வகை செய்தன.
ஆனால் உலகம் முழுதும் நிகழ்ச்சிகள் இதே முறையில் நடக்கவில்லை. நிலப்பிரபுத்துவ ம் இன்னமும் வீழ்த்தப் படாத, முதலாளியம் பலவீனமாக உள்ள பொருளாதார ரீதியாக பின்தங்கியுள்ள/ முதலாளித்துவத்த ின் முழு வளர்ச்சிக்கும் முன்னதாகவே சில பெரிய தேசிய இனங்களும் / ஏகாதிபத்தியங்கள ுக்கு பொருளாதார ரீதியில் ஒருங்கிணைந்து தேசங்களாக உருப்பெறாத பலவீனமான தேசிய இனங்களை பலாத்காரமாக வென்று பின்தங்கிய பல் தேசிய அரசுகளையும் காலனிய அரசுகளையும் உருவாக்கின.
இவ்வாறு பலாத்காரமாக உருவாக்கப் பட்ட பல் தேசிய அரசுகளில் ஒடுக்கப் படும் தேசிய இனங்களின் மக்கள் தமது சொந்த நிலப் பிரபுத்துவ சக்திகளை மட்டுமல்லாது வல்லாதிக்கம் செலுத்தும் ஒடுக்கும் தேசிய இன அரசும் வர்க்கங்களையும் எதிர்க்க வேண்டி இருக்கிறது.
இந்திய சமூகம் பலாத்காரமாக தேசிய இனங்களின் தேசிய விழிப்பற்ற நிலையை வைத்து பலாத்கார நடவடிக்கை மூலமாக இணைக்கப் பட்ட ஏகாதிபத்திய தேசம். .... இங்கு பிரிவினை என பேசுவதே தேச விரோதம் என ( அப்படி பேசுவதே தேச பற்றில்லாதது என கூக்குரலிடுவது. ) ஏகாதிபத்திய வாதமாகும்.
இங்கு தேசிய இயக்கம் ஒடுக்கப் படும் தேசிய இனங்களில் இருந்தே துவங்க முடியும்.
ஒடுக்குமுறை இந்திய வல்லாதிக்க சக்திகளால் நிகழ்த்தப் படுகிறது. ஒவ்வொரு தேசிய இனங்களும் அதன் தேசிய அரசுரிமை மறுக்கப் பட்ட அடிமை தேசிய இனமாக வைக்கப் பட்டுள்ளது.
" இந்திய ஒரு பல்தேசிய அரசு" ... பெயர் பொருத்தமாகத்தான ் இருக்கிறது .... ஆனால் இது மக்களின் விருப்பப் பூர்வமாக அமைந்த அரசா ? மேலிருந்து திணிக்கப்பட்ட அரசா ? இது குறித்த மார்க்சிய ஆய்வை நாம் செய்துவிட்டோமா? வெறுமனே பல்தேசிய அரசு என நாம் ( மார்க்சியர்கள் ) எப்படி கூற முடியும்? மார்க்சிய ஆய்வு முடிவு இதில் நமக்கு வேண்டுமே ?
மேலும் , பாட்டாளி வர்க்கம் அரசு எல்லைகள் இரு வகைகளில் அமைவதை மட்டுமே ஜனநாயகப் பூர்வமானதாக ஏற்றுக் கொள்கிறது... அ). தேசிய இன அடிப்படையில் மொழி உணர்வு அடிப்படையில் அமைந்த தேசிய அரசு எல்லைகள்... இத்தகைய அரசு எல்லைகளை எங்கெல்ஸ் " இயற்கையானது " என்கிறார். ஆ.) '' ஜனநாயக முறையிலானது'' என லெனின் கூறினார் ( தேசிய கொள்கையும் பாட்டாளி வர்க்க சர்வதேசிய வாதமும் நூல் - பக்கம் 200-1 )
2. ) இவ்விரு வகை ஜனநாயக சமூகத்தை தவிர்த்து வல்லாதிக்கத்தின ் மூலம் அமைந்த அரசு எல்லைகளை ஆசான்கள்பொருட்ப டுத்தியதில்லை. மாறாக , " குறிப்பிட்ட அரசின் வரலாற்றில் இம்மாறுதல்கள் நிகழ்ந்தாலும் பூர்ஷுவாக்களால் தனி அரசுகளின் எல்லைகள் எவ்வாறு மாற்றப் பட்டாலும் " லெனின். ( தேசிய கொள்கையும் பாட்டாளி வர்க்க சர்வதேசிய வாதமும் நூல் - பக்கம் 132) பாட்டாளி வர்க்கத்தின் ஒற்றுமை நீடிப்பது பற்றிதான் அவர் கூறுகிறார்.
3.) " சுதந்திரமான தேசிய அரசில் மட்டுமே பண்ட உற்பத்தியின் மிகவும் முழுமையான வளர்ச்சிக்கும் மிக சுதந்திரமான, விரிவான, வேகமான முதலாளித்துவ வளர்ச்சிக்கும் தேவையான நிலைமைகள் ஏற்படுத்தப்பட்ட ிருக்கின்றன "
" முற்போக்கான நாகரீகமுற்ற மனித சமுதாயம் முழுவதன் உதாரணமும்/ பால்கன் நாடுகள்/ ஆசியா, ஆகியவற்றின் உதாரணமும் தேசிய அரசு என்பது முதலாளித்துவத்த ின் விதியும், பொது வழக்கும் ஆகும் என்பதை காட்டுகின்றன... ............ இவ்வியக்கங்களின ் போக்கு ஆசியாவில் தேசிய அரசுகள் உருவாவதற்கு வழிசெய்வதற்கான பாதையை நோக்கி இட்டுச் செல்லும் போக்கு " என்கிறார் லெனின். ( தேசிய கொள்கையும், பாட்டாளி வர்க்க சர்வதேசிய வாதமும்: சில பிரச்சினைகள் - லெனின் கட்டுரைகளின் தொகுப்பு நூல்/ மாஸ்கோ வெளியீடு. 1969 தமிழ் பாதிப்பு. ) ( பக்கம் 73-78)
" உலகம் முழுவதிலும் முதலாளித்துவமான து நிலப்பிரபுத்துவ த்தின் மீது இறுதி வெற்றி கொள்ளும் காலகட்டம் தேசிய இயக்கங்களுடன் இணைந்துள்ளது. ( மேற்படி நூல் பக்கம் - 73)
பலதேசிய அரசு சமூகத்தில் இங்கு தேசிய இயக்கம் எது? அந்நியரை விரட்டியபோது நடந்தது தேசிய இயக்கம் ... நடந்தது தேசிய எழுச்சி ... தேச விடுதலைப்போராட் டத்தில் தேசம் விடுதலை அடைந்துள்ளது என்பது சி.பி. ஐ / சி.பி. எம் - இன் நிலைப்பாடு.... தேசிய இயக்கத்தின் மூலமா? அந்நியர் விரட்டப் பட்டனர்? எல்லா தேசிய இனங்களிலும் அந்நியர் எதிர்ப்பு ஒரே சமயத்தில் நடந்தது....
தேசிய இயக்கம் என்பதற்கு மார்க்சிய விளக்கம் இருக்கிறதே.... முதலாளித்துவம் நிலப்பிரபுபித்த ுவத்தை வெற்றிகொள்ள தேசிய இயக்கத்தை நடத்துகிறது.
" தேசிய இயக்கம் என்பது சாராம்சத்தில் முதலாளித்துவ இயக்கம் ஆகும் " ஸ்டாலின் ( மார்க்சியமும் தேசிய இன பிரச்சினையும் - பக்கம் 30 )
தொடர்ந்து விவாதிப்போம்... . வெளியீட்டில் உள்ள போது அம்சம் தேசிய அரசு தமிழகத்தில் இல்லை இந்திய ஏகாதிபத்திய அரசின் கீழ் வைக்கப் பட்டுள்ள அடிமை அரசிற்கான தேர்தல் என்பதே ! நன்றி.
தோழர் மணிவண்ணன் அவர்களுக்கான இரண்டாவது பதிலில் இந்தக் கட்டுரையினை ஒட்டியே நம்முடைய விவாதம் இருந்தால் சிறப்பாக இருக்கும் என்று கூறியிருந்தேன். அதற்கு தலைப்பையே விமர்சனம் செய்ய வேண்டியிருக்கிற து என்று கூறி புத்திசாலித்தனம ாக(?) கட்டுரையில் வைக்கப்பட்டுள்ள எந்தக்கருத்துக் களையும் தொடாமல் ஒரு பதிவை வெளியிட்டுள்ளீர்கள்.
இந்தக் கட்டுரைக்கு கொடுத்துள்ள தலைப்பானது, இந்தக் கட்டுரையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ள த.நா.ம.லெ.க.வின ் தேசியவாத போக்குகளை அடிப்படையாக கொண்டு தான் கொடுக்கப்பட்டுள ்ளது. இந்த உள்ளடக்கத்தில் இருந்து தான் தலைப்பே உருவாகியிருக்கி றது. ஆனால் உள்ளடக்கத்தில் உள்ள எந்த ஒரு விமர்சனத்தையும் குறித்து வாய் திறக்காமல் சுற்றி சுற்றி வேறு வேறு திசைகளில் பயணிப்பதானது, தாங்கள் திட்டமிட்டு அதனை தொடாமல் செல்வதாக உள்ளது. விமர்சனத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட த.நா.ம.லெ.க.வின ் வெளியீட்டில் எவ்வாறு தேசியவாதப் போக்கு அம்பலப்பட்டு உள்ளது என்பதை தெளிவுப்படுத்தி யுள்ளேன். ஆனால், அதற்கு பதிலளிக்காமல் கார்முகிலின் நூலில் உள்ள லெனினுடைய மேற்கோள்களை ஆங்காங்கே கத்தரித்து எடுத்து அதனை பதிவிட்டுள்ளீர்கள்.
நீங்கள் குறிப்பிட்டுள்ள தோழர்.லெனினுடைய மேற்கோள்கள் அனைத்தையும் மூல நூல்களிலிருந்து நீங்கள் வாசித்தீர்களானா ல், கார்முகில் எப்படி தனக்கு தேவையான மாதிரி இந்த மேற்கோள்களை சுருக்கியும், வெட்டியும், தவறான அர்த்தத்தை கொடுத்தும் மாற்றியிருக்கிற ார் என்பது விளங்கும். இது குறித்து விரைவில் தனியான கட்டுரை ஒன்றை வெளியிடுவேன். அப்பொழுது நீங்கள் குறிப்பிட்டுள்ள கார்முகிலின் நூலிலிருக்கும் மார்க்சிய ஆசான்களின் மேற்கோள்களின் முழுமையையும், அதன் சரியான தன்மையையும் விளக்குவதன் மூலம் உங்களுடைய கேள்விகளுக்கு பதில் கிடைக்கும் என்று நம்புகிறேன்.
எனது நோக்கம் கூட உங்கள் ஒட்டுமொத்த விமரிசனத்தையும் மறுதலித்து அதற்கு பதில் தராமல் செல்வது அல்ல.
நிச்சயம் அவற்றிற்கு பதில் தருகிறேன். " குட்டிமுதலாளிய தேசிய வாதம் " என தாங்கள் கூறும் ஒரு அம்சம் கூட விமரிசனத்திற்கு உள்ளாக்கப் படவேண்டும் என்று இந்த பதிவில் கூறியுள்ளேன். அதனாலேயே உங்கள் பழைய பதிவிற்கு பதில் கொடுத்துவிட்டதா கவோ ... பதில் தராமல் தவிர்க்கவேண்டும ் என்னவோ நான் கருதியதில்லை. நேரம் கருதி ஒரு அம்சம் மட்டும் எடுத்துக் கொண்டுள்ளேன்.
மார்க்சியம் என்பது குறிப்பிட்ட நாட்டில் சரியாக ஆய்வு செய்து பொருத்தப் படும்போது மட்டுமே வெற்றி பெற முடியும்.
" இதில் ஆசான்களின் கருத்துக் காலை வெட்டி ஓட்டவேண்டிய அவசியமில்லை." நீங்கள் கூட உங்கள் கருத்துக்களுக்க ு ஆசான்களிடம் இருந்து மேற்க்கோள் காட்டுகிறீர்கள் . உங்களையும் வெட்டி ஓட்டி காட்டுகிறீர்கள் என்றா சொல்ல முடியும்.
ஜனநாயகப் புரட்சி நடந்த நாடுகளில் தேசம் அமைகிறது. நிலப் பிரபுத்துவம் வீழ்த்தப் பட்ட நாடுகளில் முதலாளித்துவம் நிலப் பிரபுத்துவத்தை வீழ்த்த " தேசிய இயக்கத்தின் மூலமே " அதனை மேற்கொள்கிறது.
தேசிய இயக்கம் 4 பண்புக்கூறுகளை கொண்டுள்ளது. அதில் ஒரு தேசிய அரசை அமைப்பது.... என்பது வரலாற்றில் இருந்து எடுக்கப் படுகிறது.... தேசிய இயக்கம் என்ற விஷயம் பற்றி மார்க்சீய ஆசான்கள் என்ன கூறுகிறார்கள் என அது குறித்த விஷயங்களை தான் " சுருக்கமாக சுட்டிக் காட்டமுடியும்" அதன் உண்மையான பொருளை மாற்றி சொல்லவேண்டிய தேவையோ ... அவசியமோ இல்லை...
ஜனநாயகப் புரட்சி நடத்த வேண்டியவர்கள் அது வரலாற்றில் எவ்வாறு நடந்துள்ளது என தொகுத்துக்கொள்க ிறோம் .... இதில் வெட்டி ஓட்டவேண்டிய அவசியம் என ஏதுமில்லை.... அது குறித்து ஆசான்கள் என்ன கூறியுள்ளார்கள் என பார்க்கிறோம் ... நீங்கள் கூறியது போல மூல நூலை நாம் படிப்பது மேலும் நமது கருத்துக்களை ஆழமாக விளங்கி கொள்ளமுடியும்.
ஆரோக்கியமாக விவாதிப்போம் !
RSS feed for comments to this post