சில தினங்களுக்கு முன் ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் அவர்கள் அரசியலுக்கு வர வேண்டும் என்பதை வலியுறுத்தி சென்னையில் கூட்டம் நடைபெற்றது. இதில் 4000க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டதாக கூறப்படுகின்றது. இது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கின்றது. தமிழக மக்கள் மத்தியில் நேர்மையான அதிகாரி என்று பெயர் எடுத்த சகாயம் அவர்கள் வரும் சட்டமன்றத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக நிற்க வேண்டும் என மக்கள் விரும்புவது போன்ற ஒரு தோற்றத்தை இந்த நிகழ்ச்சி ஏற்படுத்தி இருக்கின்றது. இது பற்றி சகாயம் வாய் திறக்காமல் இருப்பதில் இருந்தே சகாயம் மக்களின் நாடியை தெரிந்துகொள்ள இப்படி ஒரு ஏற்பாட்டை செய்கின்றாரோ என எண்ணத் தோன்றுகின்றது.
தனது 23 ஆண்டு கால அரசுப் பணியில் 24 முறை பணிமாற்றம் செய்யப்பட்டவர் என்பதில் இருந்தே அவரது நேர்மையைத் தெரிந்து கொள்ளலாம். ஆனால் இந்த நேர்மை மட்டுமே, ‘லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்து’ என்ற அவரது கொள்கை மட்டுமே அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வாக இருக்க முடியுமா? அவர் எந்த அரசு பதவி வகித்தாலும் அந்தத் துறையில் நடைபெற்ற ஊழலை வெளிக் கொணர்ந்தார், ஊழல்வாதிகளை தட்டிக் கேட்டார் என்பது மட்டுமே ஒரு அவர் ஒரு சிறந்த அரசியல்வாதியாக வருவதற்கு அனைத்துத் தகுதியும் உடையவர் என்று நாம் அங்கீகரிக்கப் போதுமானதா? நிச்சயமாக இல்லை என்பதே உண்மை.
அன்னா கசாரே ஏன் எப்போதும் ஊழலைப் பற்றி மட்டுமே பேசுகின்றார், இந்திய சமூகத்தின் முக்கிய பிரச்சினையாக உள்ள சாதி, தீண்டாமை, உலகமயமாக்கல் போன்றவற்றை பற்றிய அவரது பார்வை என்ன என்று நாம் கேட்டபோது அனைவரும் சண்டைக்கு வந்தார்கள். அவர் ஊழலைப் பற்றி பேசும்போது நீங்கள் ஏன் சாதியைப் பற்றியோ, தீண்டாமையைப் பற்றியோ, உலகமயமாக்கல் பற்றியோ அவர் பேசவில்லை என்று கேட்கின்றீர்கள். இட்லி கடையில் போய் ஏன் புரோட்டா இல்லை என்று கேட்டால் எப்படி, புரோட்டா வேண்டும் என்றால் நீங்கள் புரோட்டா கடையில்தானே போய் கேட்க வேண்டும் என்று கிண்டல் அடித்தார்கள். அதே போலத்தான் "சகாயம் பல்வேறு ஊழல் முறைகேடுகளை அம்பலப்படுத்தினார். அதனால் அவர் முதலமைச்சராக வந்தால் அரசுத்துறையில் நடைபெறும் அனைத்து வகையான ஊழல் முறைகேடுகளுக்கும் முடிவுகட்டி ஒரு நல்ல ஆட்சியைத் தருவார். எனவே நாங்கள் சகாயம் அரசியலுக்கு வரவேண்டும் என்று விரும்புகின்றோம்" என்று சொல்கின்றார்கள்.
கேட்பதற்கு ஏதோ நியாயமான கேள்விபோலத் தோன்றும். ஆனால் இந்தக் கேள்விக்குள் ஒழிந்திருக்கும் அரசியல் அறியாமையைப் புரிந்து கொண்டால் நாமும் அப்படி கேள்வி கேட்பவர்களின் உண்மையான நோக்கத்தைப் புரிந்துகொள்வோம். அன்னா கசாரே ஏன் சாதி, தீண்டாமை, உலகமயமாக்கல் போன்றவற்றைப் பற்றி வாய்திறக்க மறுக்கின்றார் என நாம் கேட்டபோது, நம்மைப் பார்த்துச் சிரித்தவர்கள் அன்னாவின் அணியில் இருந்த அன்னா உட்பட பல பேர் இட ஒதுக்கீட்டுக்கு எதிரானவர்கள் என்பதும், உலகவங்கியில் இருந்து மகசாசே விருது வாங்கியவர்கள் என்பதும், ஆர்.எஸ்.எஸ் மற்றும் என்.ஜி.ஓ க்களின் பின்புலம் கொண்டவர்கள் என்பதும் அம்பலமாகி நாடே சிரித்தது.
ஒரு தமிழ் ஆசிரியர் தமிழைப் பற்றி மட்டுமே வகுப்பில் பேசுவார், அவர் ஓவியத்தைப் பற்றியோ, ஒரு நல்ல இசையைப் பற்றியோ வகுப்பில் பேசமாட்டார். ஒரு மருத்துவர் நோய்களின் தன்மை பற்றி மட்டுமே பேசுவார், அவர் அரசியல் பேசமாட்டார் என நினைத்தால், எதிர்பார்த்தால் குற்றம் நம்முடைய அரசியல் புரிதலின்மைதான். அறிவு என்பது அனைத்தும் சேர்ந்ததுதான். அதைப் பிரித்து, பிரித்துப் பார்ப்பது என்பது பின்நவீனத்துவவாதிகளின் பார்வை. இன்று நம்முடைய நடுத்தர அறிவுஜீவிகள் பல பேர் இந்தப் பார்வையைத்தான் கொண்டிருக்கின்றார்கள்.
சகாயத்திடம் இருக்கும் ஊழல் எதிர்ப்பு என்ற ஒன்றே போதும், அவர் அரசியலுக்கு வருவதற்குத் தகுதியானவர் என்று சொல்வதுகூட ஒரு பின்நவீனத்துவ பார்வைதான். இருப்பதிலேயே மலிவான, மட்டமான அரசியல் பார்வை இது. தன்னுடைய 23 ஆண்டு கால அரசுப் பணியில் ஊழலைத் தவிர மற்ற சமூகப் பிரச்சினைகளில் அவரது பார்வை எப்படி இருந்தது எனப் பார்க்க வேண்டும். ஊழலை எதிர்க்கும் சகாயம் அந்த ஊழலுக்கு அடிப்படையாக இருக்கும் உலகமயமாக்கல், தனியார்மயமாக்கல், தாராளமயமாக்கல் போன்றவற்றைப் பற்றியோ, அதை இருகரம் கூப்பி வரவேற்கும் இந்த அரசைப் பற்றியோ எப்போதாவது வாய் திறந்து இருக்கின்றாரா? அப்படி அவர் வாய் திறக்காத பட்சத்தில் அவர் அதை ஆதரிக்கின்றார் என நாம் ஏன் எடுத்துக் கொள்ளக்கூடாது? ஒரு வேளை அவர் அதை எதிர்த்திருந்தால் இந்நேரம் தன்னுடைய பதவியைத் தூக்கி எறிந்துவிட்டு அரசியல் களத்தில் குதித்திருப்பார்.
சகாயத்தைப் பொருத்தவரைச் சட்டத்தின்படியே அரசுத் துறையில் நடக்கும் ஊழல்களுக்குத் தீர்வு காண முடியும் என நம்புபவர். அதன் மூலம் ஒட்டுமொத்த அரசு இயந்திரத்தையும் ஊழலற்றதாக மாற்றியமைக்க நினைப்பவர். சுடுகாட்டில் படுத்துத் தூங்கும் நிலைக்கு இந்த அரசு அவரை தள்ளியபோதும் இந்த அரசு கட்டமைப்புக்கு எதிராக வாய் பேசாதவர். அவர் அரசு பதவியில் இருந்த இந்த 23 ஆண்டுகளில் தமிழகத்தில் பல சாதிக் கலவரங்களும், சாதி ஆணவக் கொலைகளும், மிகப்பெரிய அளவிற்கு அரசியல்வாதிகளின் ஊழல்களும் நடைபெற்று இருக்கின்றன. சகாயம் சமூக அவலங்களுக்கு எதிராக குரல் கொடுப்பவர் எனில் இது போன்ற பிரச்சினைகளுக்கும் குரல் கொடுத்திருக்க வேண்டும். ஆனால் அவர் இதுபோன்ற பிரச்சினைகள் நடைபெறும்போது அதற்கு மெளன சாட்சியாகவே இருந்தார்!.
நமக்குச் சகாயத்தின் நேர்மைமீது ஒரு துளி சந்தேகமும் இல்லை. நிச்சயம் அழுகி நாறிக் கொண்டிருக்கும் இந்த அரசுக் கட்டமைப்பில் சகாயம் போன்றவர்கள் ‘லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்து’ என்று பிரகடனப்படுத்துவது பாராட்டுக்குரியதுதான். ஆனால் பிரச்சினை வெறும் ஊழல் மட்டும் அல்ல; அதைத் தாண்டி பிரமாண்டமானது. அது உலகமயமாக்கலாக, தனியார்மயமாக்கலாக, தாராளமயமாக்கலாக வியாபித்து நீள்கின்றது. சமூகத்தின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு சொல்லும் அரசியல் அறிவு சகாயத்திற்குக் கிடையாது என்பதுதான் நாம் முன்வைக்கும் குற்றச்சாட்டு. அப்படி முன்வைத்தாலும் அது நீதிமன்றங்களுக்குள் நம்மை அடைத்து வைக்கும் தீர்வாகத்தான் இருக்கும்.
இப்போது நமக்குத் தேவை அரசியலில் புனிதர்கள் அல்ல; அரசியலில் புரட்சியாளர்கள். இப்போது மக்கள் எதிர்பார்க்கும் மாற்றம் என்பது அழுகி நாறிப்போன இந்த அரசுக் கட்டமைப்பை அப்படியே தக்க வைத்துக்கொண்டு அதற்குள் தீர்வை தேடச் சொல்லித் தரும் நேர்மை விரும்பிகள் அல்ல; இந்த அரசுக் கட்டமைப்பை மாற்றும் நெஞ்சுரம் படைத்த மனிதர்கள். கேஜ்ரிவாலைப்போல எந்தச் சித்தாந்தத்திற்கும் தாலி கட்டிக் கொள்ளாத, சில்லரை சீர்திருத்தங்கள் செய்து மக்களின் கோபத்தை தனிக்கும் என்.ஜி.ஒ வழிபட்ட கொள்கைகளை நடைமுறைப்படுத்த விரும்பும் முதலாளித்துவ அறிவுஜீவிகள் நமக்குத் தேவையில்லை.
ஆனால் சகாயம் போன்றவர்கள் இன்று மக்களால் விரும்பப்படுவதற்குக் காரணம் எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்ற மனநிலைக்கு மக்கள் தள்ளப்பட்டிருப்பதுதான். பெரும்பாலான நடுத்தர வர்க்க மக்கள் இந்தக் கட்டமைப்பிற்குள்ளேயே மிக எளிமையான வழியில் மாற்றத்தை எதிர்பார்க்கின்றனர். அந்த மாற்றம் இப்போது அவர்கள் அனுபவித்து வரும் முதலாளித்துவ மகிழ்ச்சிகளுக்கு வேட்டு வைக்காததாக இருக்க வேண்டும் என்று அவர்கள் எதிர்பார்க்கின்றார்கள். அதைச் செய்யவல்ல ஒருவராகவே அவர்கள் சகாயத்தைப் பார்க்கின்றார்கள்.
கடைசியாக, நமக்குத் தெரிந்த தோழர் ஒருவருடன் பேசிக் கொண்டிருந்தபோது கேட்டேன் “தோழர், நாட்டில் இவ்வளவு சாதிக் கலவரங்கள் நடைபெறுகின்றதே, சாதி ஆணவக் கொலைகள் நடைபெறுகின்றதே , மதவெறியர்கள் தமக்கு எதிரானவர்களை எல்லாம் கொல்கின்றார்களே, மக்கள் தினம் பட்டினியால் சாகின்றார்களே இதற்குத் தீர்வே கிடையாதா” என்று. அதற்கு அவர் சொன்னார் “எல்லாம் புரட்சி நடந்து முடிந்தால் சரியாகிவிடும். அதுவரை இது எல்லாம் நடந்து கொண்டுதான் இருக்கும் நம்மால் வேடிக்கை பார்ப்பதைத் தவிர ஒன்றும் செய்ய முடியாது என்று”. அப்போதுதான் நினைத்தேன் ஏன் மக்கள் புரட்சியாளர்களைப் பார்த்து பயந்து ஓடுகின்றார்கள் என்று. இது போன்றவர்களை நம்பித்தான் இன்று பல புரட்சிகர கட்சிகள் தமிழ்நாட்டில் உள்ளது. அதனால் மக்கள் சகாயத்தை நோக்கி மட்டும் அல்ல ரஜினி, விஜய் என யாரைத் தேடிப் போனாலும் நாம் ஆச்சரியப்பட முடியாது!
- செ.கார்கி
அரசின் நலத்திட்டங்களை மக்களுக்கு கொண்டுசேர்ப்பதி ல் எந்த அளவுக்கு முனைப்போடு செயல்படுகிறார் அதில் எவ்வளவு நேர்மையாய் இருக்கிறார் என்றுதான் பார்க்க வேண்டுமே தவிர அவர் ஒட்டுமொத்த பிரச்சனைகளில் அவர் நிலைப்பாடு என்ன என கேள்வி எழுப்புவது நியாமற்றது . அவர் அரசு ஊழியர் தானே தவிர அரசியல்வாதி அல்ல .
ஆகவே ,சகாயம் ஐ எ எஸ் ,சமூக பிரச்சனைகளில் அல்லது அரசின் இதர நிலைபாடுகளில் கருத்து தெரிவிக்கவில்லை என்பது அபத்தம் . ஒருவேளை அவர் தன்னை முழுவதுமாக பொது வாழ்க்கையில் அர்பணித்து கொண்டபிறகு அவர் கருத்து தெரிவிக்கவில்லை அல்லது அதன்மீது உரிய சரியான பார்வை இல்லை என்றால் விமர்சிக்கலாம் . சகாயமும் அன்னா ஹசாரேவும் ஒரே அளவுகோலில் வைக்க பட வேண்டியவர்கள் அல்ல .
சகாயம் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கைகொண்டவ ராக இருப்பதால்தான் சட்டத்தின் மூலமாக அரசு எந்திரங்களை சரியாக செயல்படுத்தவும் , நிர்வாகத்தை சீர்செய்யவும் முடியும் என்று செயல்பட்டுக்கொண ்டிருக்கிறார். பொதுவாக, மக்களின் விருப்பம் அடுத்தவர் நேர்மையாக இருக்கவேண்டும் என்று ஆசைப்படுவார்கள் ஆனால், அந்த நேர்மை தனக்கு பாதகமாக இருக்குமானால், அவர்மீதே பொய்க்குற்றம் சாட்டுவதும், அவர் காலத்திற்கு ஏற்ற மனிதர் இல்லை, அவரிடம் திறமை இல்லை, அவரிடம் கொள்கையில்லை, கோட்பாடு இல்லை என்று எளிதாக குற்றம் சாட்டி அவரை தரம் தாழ்த்தி ஒதுக்கிவிடுவர். நல்லவர்கள் நாட்டுக்கு தேவையில்லை காலத்திற்கு ஏற்ப அரசியல் செய்ய தெரிந்தவர்கள் தான் நாடாளும் தலைமைக்கு தகுதியானவர்கள் என்று சொல்வது வேடிக்கையாக உள்ளது. கல்வி அறிவு, நேர்மை, துணிவு, எளிமை, ஊழலுக்கு எதிராக குறள் கொடுப்பவர் என்று மட்டும் அவரை அடையாளப்படுத்தி விடமுடியாது, சமூக அக்கறையும், பொறுப்பும் மிகுதியாகக் கொண்ட ஒரு சிறந்த மனிதர் என்பதை அவர் வகித்த அந்தந்தத் துறையின் பதவிக்காலங்களில ் செய்து காட்டியிருக்கிற ார். வறுமையே லஞ்சத்திற்கும், ஊழலுக்கும் அடிப்படை என்ற புரிதல் அவரிடம் உள்ளது. எத்தனை எத்தனையோ நல்லவர்கள் இன்றைய அரசியலுக்கு வரவே அஞ்சுகிறார்கள். இன்னும் சரியாக சொல்வதானால், ஜனநாயக நாட்டில் அரசாங்கத்தின் தவறுகளை சுட்டிக்காட்டவே அஞ்சி ஒதுங்குகிறார்கள ். இந்த நிலையில் துணிவும், நேர்மையும் கொண்ட சகாயம் போன்ற ஒருவர் தலைமை ஏற்க வேண்டும் என்று இளைஞர்கள் விரும்புவது குற்றமா? இதுவரை நான் அரசியலுக்கு வருகிறேன் என்று அவர் எதுவும் கூறவில்லை என்ற போதிலும் விவாதங்கள் வீரியம் பெற்றுக்கொண்டிர ுக்கிறது. இதற்கு அவர் பதில் சொல்லாமல் இருப்பதால் அவர் மக்களின் நாடி பார்க்கிறார் என்கிறார்கள். மக்களின் மனநிலையை அறியாமல், அரசியலின் ஆழம் தெரியாமல் காலை வைப்பது என்பதுதான் அறியாமையாகும். ஒரு சிறந்த நிர்வாகி என்பவர் ஆழம் பார்க்காமல் ஆசையில் களம் இறங்கினால் தான் தவறே ஒழிய, அமைதியாக இருப்பதும், இளைஞர்களுக்கு எழுச்சியூட்டுவத ும் தவறில்லை. ஒரு வேலை அவர் அரசியலுக்கு வந்தாலும் அதிகார பலமும், பண பலமும் கொண்ட அரசியல்வாதிகளிட ம் கரை சேர்வது கடினம் என்றாலும் குளிருக்கு பயந்து குளிக்காமல் இருக்கமுடியுமா? சகாயம் IAS காலத்தின் அவசியம் என்றுதான் தோன்றுகிறது. முயற்சிப்பவர்கள ை முடக்கவேண்டாம், முடிந்தவரை உற்சாகப்படுத்து வோம்.
சகாயம் நேர்மையானவர்தாம ். ஆனால், நாட்டின் மற்ற பிரச்சினைகள் பற்றியோ, அவர் எந்தப் பிரச்சினைகளுக்க ாகப் போராடுகிறாரோ அதன் ஊற்றுக்கண் பற்றியோ இதுவரை அவர் வாய் திறந்திருக்கிறா ரா? இல்லை. எனவே, அவரை நாம் முதலமைச்சராக்கக ் கூடாது என்கிறார் கட்டுரையாளர்.
சரி, அனைத்தையும் ஒப்புக் கொள்கிறேன். அப்படி இந்தத் திறமையில்லாத, புரட்சிகரச் சிந்தனையில்லாத, வெறும் நேர்மை என்கிற ஒரு தகுதியை மட்டுமே கொண்ட இந்த சகாயம் அரசியலுக்கு வர வேண்டா என்றால், இவருக்குப் பதிலாக, மேற்படி அத்தனை தகுதிகளும் கொண்ட வேறு யார் இங்கே இருக்கிறார்கள்?
அரசியலில் நல்லவர்கள் இல்லை அல்லது அரசியலில் ஏற்கெனவே இருக்கிற நல்லவர்களை மக்களுக்குப் பிடிக்கவில்லை எனும்பொழுது மக்கள் தங்களுக்குப் பிடித்த ஒருவர் பின்னால் போனால் அதையும் ஏன் வேண்டா என்கிறீர்கள்? ஏதாவது ஒரு வகையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுவிட்டுப ் போகட்டுமே! தி.மு.க விட்டால் அ.தி.மு.க, அ.தி.மு.க விட்டால் .தி.மு.க எனும் இந்த நச்சுச் சுழற்சியிலிருந் து எப்படியாவது மக்கள் விடுபடட்டுமே! அதை ஏன் வேண்டா என்கிறீர்கள்?
எவ்வளவுதான் தலைகீழாக நின்று தண்ணீர் குடித்தாலும் இப்பொழுது இருக்கிற மனிதர்களை வைத்துதான் நாம் மாற்றங்களைக் கொண்டு வந்தாக வேண்டும். ஏற்கெனவே இருக்கிறவர்களைய ும் குற்றம் சொல்லி, புதிதாக வருபவர்களிடமும் குறை கண்டுபிடித்துக் கொண்டு, ஆகவே இவர்கள் யாருமே வேண்டா, எல்லாத் தகுதிகளும் ஒருங்கே கொண்ட இறைத்தூதன் ஒருவன் வரட்டும் எனக் காத்திருந்தால் எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் அந்தக் காத்திருப்பு முடிவுக்கு வராது. மனிதர்கள் குறைபாடுகள் உள்ளவர்கள்தாம். இந்தக் குறைபாடுள்ள மனிதர்களிலிருந் தே ஒரு நல்லவரைத் தேர்ந்தெடுப்பது என்பதுதான் நடைமுறைக்கு ஒத்து வரும். மாறாக, எந்த விதக் குறையுமில்லாத, எல்லாத் தகுதிகளும் உடையவருக்காகக் காத்துக் கொண்டே இருந்தால் மீண்டும் மீண்டும் நாட்டை அதுவரை இதே கொள்ளைக்காரர்கள ிடமும் இன துரோகிகளிடமுமே ஒப்படைத்து விட்டுக் கொஞ்சம் கொஞ்சமாக அழிய வேண்டியதுதான். அப்படிப்பட்ட இறைத்தூதன் வரும் வரை நாம் உயிரோடிருக்க மாட்டோம்!
ஊழலுக்கு எதிரான முயற்சிகளை நாம் வரவேற்க வேண்டும். ஆனால் ஊழலின் ஆணி வேர் இந்த அரசியல் சமூக அமைப்பிலே இருக்கிறது, ஆகவே அதை நாம் மாற்ற வேண்டும் என்பவர்கள், பிரச்சனையின் அடிப்படையை சரியாக எழுப்புகிறார்கள ். ஒவ்வொரு பிரச்சனையும், கருத்துக்களும் அங்கு நிலவும் அரசியல், பொருளாதார அமைப்பை அடித்தளமாகக் கொண்டு எழுகின்றன, ஒரு சிலருடைய அறிவுக் கூர்மையில் மட்டும் உதிப்பதில்லை. ஆனால் சிந்தனையாளர்கள் இந்தச் சூழலையும் கடந்து பிரச்சனைக்குத் தீர்வு காண் முற்படுகிறார்கள ்.
இன்றைய பிரச்சனைகளுக்கு த் தீர்வு காண வேண்டுமென்றால், இன்றைய அமைப்பு மாற்றப்பட வேண்டும் என்பது அறிவியல். ஆனால் பிரச்சனைகளோடு போராடுவதன் மூலம் மக்களை அந்த முடிவுக்கு நாம் கொண்டு செல்ல வேண்டும், ஓரத்தில் ஒதுங்கி நின்று தத்துவம் பேசுவதால் அல்ல. செயல்முறையும், அறிவியலும் (கருத்ததியலும்த ்து) ஒன்றோடு ஒன்று இணைந்ததாகும். ஒன்றால் மற்றொன்று செழுமைப் படுகிறது. கருத்தியல் திட்டமிட்ட செயல்முறைக்கும் , செயல்பாடுகள், கருத்தியலை மேலும் திருத்தவும், வளர்க்கவும் பயன்படுகின்றன.
இன்றைய அமைப்பை மாற்ற வேண்டும் என்பது நமது கடந்த கால அனுபவம் காட்டும் படிப்பினையாகும் . சில கட்சிகளையே, தனி நபர்களையோ மாற்றிப் பயனில்லை, என்பது தெள்ளத் தெளிவான உண்மையாகும்.
RSS feed for comments to this post