செம்மொழி மாநாடு என்ன கிழித்தது

திரும்பவும் கலைஞரின் குடும்பமே செழித்தது      (செம்மொழி)

வெட்டியாய் முந்நூற்று எண்பது கோடியைக்

கொட்டிக் கரைத்த குடும்பத் திருவிழா

பொட்டுப் பூச்சியாய் வாழும் தமிழனை

முட்டாள் ஆக்கி முடித்தபெருவிழா (செம்மொழி)

மகனொரு பக்கம் மாநாட்டைத் திறந்தார்

மகளோ தானே எல்லாமாய்ப் பறந்தார்

மனைவியர் மருமக்கள் பேத்தியர் இருந்தார்

மற்றுள்ள சொந்தங்கள் முன்வரிசை நிறைந்தார்                               (செம்மொழி)

பாட்டால் புகழப் பாவலர் ஒருபுறம்

பல்லக்குத் தூக்கும் பேச்சாளர் மறுபுறம்

கேட்டுக் கேட்டு மு.க. மனம்மிகக் குளிரும்

கேட்டநம் வயிறோ தீப்பற்றிக் கருகும்

(செம்மொழி)

விருந்திட்ட இடத்தைக் கூட்டம் பிய்த்தது

வெளிஆய்வு அரங்கை ஈக்கள் மொய்த்தது

இருந்த தமிழ்நிலை நெஞ்சினைத் தைத்தது

"எழும்' இந்த இனம் என்றஎண்ணம் பொய்த்தது     (செம்மொழி)

பள்ளியில் நம்தமிழ் கட்டாயமி ல்லை

அறமன்றப் படிகளைத் தமிழ்தொட்ட தில்லை

கல்வியில் உயர்நிலை தமிழ் எட்டவில்லை

கரைத்த பணத்துக்கு முழுப்பயன் இல்லை                               (செம்மொழி)

பேருக்கு ஈழத் தமிழர்க்காய் அழுகை

பெருங்கேடன் தில்லிக்கே கைகட்டித் தொழுகை

யாருக்கும் பெருநன்மை கூட்டாத கூட்டம்

யாருடைய ஆட்சிதான் தமிழ்த்துயர் ஓட்டும்?                                    (செம்மொழி)

Pin It