இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் இருக்கும் பாக் ஜலசந்தி கடற்பகுதியில் 285 ஏக்கர் நிலப் பரப்பி லான ஒரு சிறிய தீவு கச்சத்தீவு. எந்தவித உயிரினங் களும், குடியிருப்புகளும் இல்லாமல் சிறிய கற்குன்றங் களாலான இந்தத் தீவுப் பகுதி இந்தியாவின் கடற் கரைக்கு 10 மைல் தூரத்திலும், ஸ்ரீலங்காவின் கடற் கரைக்கு 8 மைல் தூரத்தில் அமைந்துள்ளது. இன்றைய நிலைமையில் ‘கச்சத்தீவை இந்தியா இலங்கைக்குத் தாரை வார்த்துவிட்டது; அதனால் பாதிக்கப்பட்டவர்கள் தமிழக மீனவர்கள்’ எனும் சர்ச்சை மிகப் பெரிய தாக் கத்தை ஏற்படுத்தி, இப்பிரச்சனை ஒரு வழக்காக உச்ச நீதிமன்றத்தில் உள்ளது.

1974ஆம் ஆண்டும், பின் 1976லும் இந்திய, இலங்கைக்கிடையில் ஏற்பட்ட ஒப்பந்தங்களின் அடிப் படையில் கச்சத்தீவு இந்தியாவால் இலங்கைக்குத் தாரைவார்க்கப்பட்டுவிட்டது எனவும், கச்சத்தீவை மறுபடியும் இந்தியா எடுத்துக்கொள்ளும் வகையில் மேலே சொல்லப்பட்ட இரண்டு ஒப்பந்தங்களையும் ரத்துச் செய்து; ஆணைபிறப்பிக்க வேண்டும் எனவும் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளது.

இலங்கையின் பழங்கால பூகோள வரைபடங்கள் எதிலும் ‘கச்சத்தீவு’ எனும் ஒரு தீவுப் பகுதி இருக்காது. 1920ஆம் ஆண்டு அன்றைய ஆங்கில ஆட்சியின் சென்னை ராஜதானி மற்றும் சிலோன் அரசின் உயர் அதிகாரிகள் கலந்துகொண்ட ஒரு கூட்டத்தில், முதன்முத லாக பாக். ஜலசந்தி மற்றும் மன்னார்வளைகுடா பகுதி களை அளந்து இரண்டு ராஜதானிப் பிரதேசங்களுக் கும் இடையில் உள்ள எல்லை நிர்ணயம் செய்யப்பட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.

1921 அக்டோபர் 24ஆம் தேதி கொழும்பு நகரில் இதுபற்றி விவாதிக்கக், கூடிய கூட்டத்தில்தான் முதன் முதலாக அன்றைய இலங்கை அரசின் உயர் அதிகாரி களின் தலைவர் ஹார்ஸ்பர்க், வரைந்து காட்டிய இரு நாடுகளுக்கிடையிலான எல்லைக்கோட்டில் கச்சத்தீவு இலங்கைக்குள் உள்ளடங்கிய வகையில் இருந்தது. அதை ஏற்றுக்கொள்ள மறுத்த இந்திய அதிகாரிகள், இராமநாதபுரம் அரசரின் ஆளுகையின்கீழ்வரும் ஒரு தீவு கச்சத்தீவு என வாதிட்டு, அதற்கான அத்தாட்சி பத்திரங்களையும் காட்டினார்கள். அன்றைய சிலோன் அரசின் உயரதிகாரிகள் அதை அப்படியே ஏற்றுக் கொண்டு மௌனமாகிவிட்டனர் என்பது அந்தக் கூட்டத் தின் குறிப்புகளில் பதிவாகியுள்ளது.

அடுத்து, 1966ஆம் ஆண்டு மே மாதத்தில், இது பற்றி ஒரு பேட்டியில் அன்றைய இலங்கை அரசின் மந்திரி சபைச் செயலாளர் பி.பி. பெய்ரிஸ் கூறியது மிகவும் முக்கியமானது. “நான் துணை சட்ட வரைவாளர், (டெபுடி லீகல் டிராஃப்ட்ஸ்மேன்) வேலையில் இருந்தபோது, ஜாஃப்னாவின் வடக்கு மாவட்டங்களின் எல்லைக் கோட்டினை ஆராயும் சந்தர்ப்பம் ஏற்பட்டது. அது சம் பந்தப்பட்ட கோப்புகளை படித்த போது, விக்டோரியா மகாராணி காலத்தில் ஒரு பிரகடனத்தில், கச்சத்தீவு ஜாஃப்னாவின் வடக்குப் பகுதிக்குட்பட்ட தீவு அல்ல என்றும், அது இராமநாதபுரம் ராஜாவுக்குச் சொந்தம் எனவும் ஆங்கில அரசால் பிரகடனம் செய்யப்பட்டி ருந்தது” எனக் கூறினார்.

இதை நிரூபிக்கும் வகையில், 1977-ஆம் ஆண்டிற்கு முன் இலங்கையில் நடந்த தேர்தல்களில் எந்தத் தொகுதியிலும் கச்சத்தீவு இடம்பெற்றிருக்கவில்லை. ஆனால், 1974ஆம் ஆண்டில் இந்தியா கச்சத்தீவை இலங்கைக்குத் தாரைவார்த்தபின், 1977-ஆம் ஆண்டில் இலங்கையில் நடந்த தேர்தலில் ஜாஃப்னா மாவட் டத்தின் கய்த்ஸ் பாராளுமன்றத் தொகுதியில் ஒரு இடமாக அது இடம்பெறத் தொடங்கியது.

சரித்திரத்தைப் புரட்டினால், 69 கடற்கரை கிராமங் களையும் பாக். ஜலசந்தியின் 11 சிறிய தீவுகளையும் உள்ளடக்கி இராமநாதபுரம் சமஸ்தானம் அன்றைய மதுரை நாயக்க மன்னர்களால், 1605-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது புரியும். இந்த 11 சிறிய தீவுகளில் ஒன்றுதான் கச்சத்தீவு. ராமனாதபுரம் ராஜா கூத்தன் சேதுபதி 1622 முதல் 1635 வரை ஆட்சியிலிருந்தார். அவர் காலத்துத் தாமிரச் செப்பேடு ஒன்றில் அவரது ஆளுகைக்குக்கீழ் இருந்த இந்த தீவுகளின் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன். இராமநாதபுரம் இராஜாவின் ராஜாங்க கணக்குப் பேரேடுகளில் கச்சத்தீவிலிருந்து குத்தகை வருமானம் வந்தது குறிக்கப்பட்டுள்ளது.

1767-ஆம் ஆண்டில் டச்சு கம்பனி ஒன்று இராம நாதபுரம் ராஜாவிடமிருந்து கச்சத்தீவை குத்தகைக்கு எடுத்த கணக்கும் உள்ளது. 1802ஆம் ஆண்டு (ஆங்கி லேயர் காலத்தில்) இந்தியாவின் எல்லாப் பகுதிகளும் சர்வே செய்யப்ப்ட்ட கணக்குகளும் வரைபடங்களும் இன்றும் உள்ளன. அதில் கச்சத்தீவு இராமநாதபுரம் ஜமீனுக்குச் சொந்தமானது எனக் குறிக்கப்பட்டுள்ளது.

1822-இல் ஆங்கிலேயர்களின் கிழக்கு இந்தியக் கம்பெனி இராமநாதபுரம் ராஜா சேதுபதியிடமிருந்து கச்சத்தீவைக் குத்தகைக்கு எடுத்தது. 1845ஆம் ஆண்டில் அன்றைய சிலோன் கவர்னர் ஒரு கடிதத்தில் கச்சத் தீவு இராமநாதபுரம் சேதுபதிக்குச் சொந்தமானது எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதை எல்லாம் விட மேலாக, 1905ஆம் ஆண்டில் இராமநாதபுர ஜமீன் சீனிக்குப்பன் படையாட்சி கச்சத் தீவில் புனித அந்தோணியாரின் ஆலயத்தைக் (மீனவர் களின் தெய்வம் அந்தோணியார்) கட்டியுள்ளார். கச்சத்தீவு பகுதியில் மீன் பிடிக்கும் மீனவர்கள் ஓய் வெடுக்கவும், வலைகளை உலர்த்தவும், தொழுகை செய்யவும் இந்த ஆலயப் பகுதி அவசியம் என்பது சீனிக் குப்பனின் எண்ணம்.

1913ஆம் ஆண்டில் கச்சத்தீவுப் பகுதியில் 15 வருடங்களுக்குக் கடல் சங்குகளை சேகரிக்கும் உரி மையை இராமநாதபுரம் ராஜாவிடமிருந்து ஆங்கிலோ இந்திய அரசின் செயலர் குத்தகை எடுத்துள்ளார். அந்தப் பதிவுப் பத்திரம் இன்றளவும் காப்பகத்தில் உள்ளது. இந்தக் குத்தகை 1936 வ்ரை புதுப்பிக்கப்பட்டுள்ளது.

ஆக இந்த எல்லா ஆதாரங்களையும் வைத்துப் பார்த்தால், அன்றைய இந்தியா மற்றும் சிலோன் நாடு களை ஆட்சி புரிந்த ஆங்கிலேயர்கள், கச்சத்தீவு இந்தி யாவின் ஒரு பகுதியே என ஒப்புக்கொண்டு ஆட்சி புரிந்தது விளங்கும்.

இந்தியா சுதந்திரமடைந்த பின்னர் இராமநாதபுரம் ராஜாவின் ஆளுகையிலிருந்த ஜமீன் பகுதிகள் இன் றைய இராமநாதபுரம் மாவட்டமாகி, தமிழ்நாட்டின் ஒரு பகுதி என்றாகியது.

ஆக, கச்சத்தீவு எந்தக் காலத்திலும் இலங்கைக்குச் சொந்தமாக இருந்ததில்லை என்பதற்குச் சட்ட வழக்கு களின் மிக முக்கியமான சாட்சியமாகக் கருதப்படும் தாஸ்தாவேஜு எனப்படும் ‘டாக்குமென்ட்ரி எவிடன்ஸ்’ உள்ளது என்பது திண்ணம்.

பாரதத்தின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியும், இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சிரிமாவோ பண்டார நாயகாவும் அன்றைய காலக்கட்டத்தில் சோவியத் ரஷ்யாவின் கூட்டாளிகள்.

இரு நாடுகளுக்கிடையிலும் நல்லெண்ணத்தை மேலும் அதிகரிக்கும் நோக்கத்தில், அன்றைய இந்திரா காந்தி அரசு 1974ஆம் ஆண்டு ஜூன் ம்hதம் 26-ஆம் தேதி புதுதில்லியில் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு கச்சத்தீவை இலங்கைக்குத் தாரைவார்த்தது. அன்றைய சூழ்நிலையில் பிற்காலத்தில் மீன்வளங்க்ள் இந்தியக் கடலோரத்தில் வற்றிப்போய், கச்சத்தீவுப் பகுதியின் மீன்வளம் தென்னிந்திய மீனவர்களுக்கு வாழ்வாதார மாக விளங்கும் என இந்திய அதிகாரிகள் எதிர்பார்க்க வில்லை.

உலகெங்கிலும் இரண்டு நாடுகளுக்கு இடையே எல்லை நிர்ணயம் செய்யப்படும் போது-இடையே நதியோ கடல் பகுதியோ இருந்தால் அதன் மையப் பகுதியில் எல்லைக்கோடு உருவாக்கப்படும். இப்போதும் கூட இரண்டு கிராமங்களின் எல்லை பிரிக்கப்படும் போது, நடுவில் ஒரு நதி ஓடினால் நதியின் மையப் பகுதியில் கிராமங்களின் எல்லைக்கோடு வரையப் படுவது நம் மாநிலத்தில் பின்பற்றப்படும் சர்வே முறை. ஆனால் 1974ஆம் ஆண்டு இந்திய அரசின் மித மிஞ்சிய நல்லெண்ணத்தாலும், இலங்கை அரசுப் பிரதிநிதிகளின் சூட்சுமமான சாதுர்யத்தாலும் இந்த முறை தவிர்க்கப்பட்டது.

‘இந்திய மீனவர்களும், சுற்றுலாப் பயணிகளும், இப்போது கச்சத்தீவுக்கு சென்று வருவது போல் சென்று வரலாம். இதற்குத் தனியாக இலங்கை அரசின் விசா தேவை இல்லை’ என ஒப்பந்தத்தின் ஒரு விதி கூறுகிறது.

அதாவது, இந்திய மீனவர்கள் கச்சத்தீவுக்கு மீன் பிடிக்கச் செல்லலாம் என்று விதியில் கூறப்படவில்லை. அதை அன்றைய இந்திய அரசின் உயரதிகாரிகள் கவனிக்கவில்லை. ஆனால், இலங்கை அதிகாரிகள் மிக சாதுர்யமாக அந்த ஒப்பந்த விதியை உருவாக்கி இந்தியப் பிரதமரிடம் கையெழுத்துப் பெற்றுவிட்டனர்.

1976ஆம் ஆண்டு மார்ச் மாதம் 23-ஆம் தேதி மற்றொரு ஒப்பந்தம் இந்திய-இலங்கை அரசுகளுக் கிடையில் கையெழுத்தாகியது.

அதன்படி, ‘இந்திய மீனவர்களும், அவர்களது மீன்பிடி ஓடங்களும் இலங்கையின் கடல் பகுதிக்குள் மீன் பிடிக்கக்கூடாது. அதுபோலவே இலங்கை மீன வர்களும் அவர்களது படகுகளும் இந்திய எல்லைக் குள் மீன் பிடிக்கக்கூடாது’ என்று கூறப்பட்டது.

இதுபோன்ற ஒரு ஒப்பந்தம், இந்தியா தனது அண்டை நாடுகளுடன் சுமூகமான நட்புறவுடன் நடந்து கொள்ளு வதற்கு அடிப்படை என மத்திய அரசால் அப்போது பாராளுமன்றத்தில் பெருமையுடன் பறைசாற்றப்பட்டது.

அன்றைய ஜனசங்கக் கட்சியின் பாராளுமன்றத் தலைவர் அடல் பிகாரி வாஜ்பாய், ‘இது ஒப்பந்தம் அல்ல-பணிந்து போதல்’ எனப் பேசினார். அவரது வேண்டு கோளின்படி, அன்றைய தமிழ்நாட்டின் ஜனசங்கத் தலைவர் ஜனா கிருஷ்ணமூர்த்தி சென்னை உயர்நீதி மன்றத்தில் கச்சத்தீவு இலங்கைக்குத் தாரை வார்க்கப் பட்டது அரசியல் சட்டத்திற்கு எதிரானது என ஒரு வழக்குத் தொடர்ந்தார். அது சம்பந்தப்பட்ட எல்லா ஆவணங்களும் மாநில அரசிடம் இருந்து மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டு விட்டதால், நீதிமன்றம் கேட்ட போது தங்களிடம் அது சம்பந்தமான ஆவணங்கள் இல்லை என மாநில அரசு தெரிவித்துவிட்டது. அதனால், வழக்கு தள்ளுபடியாகிவிட்டது.

ஆகவே, இன்றைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு இலங்கைக்குச் சொந்தமான கச்சத்தீவை அவர்களிடம் ஒப்படைத்தோம் என உச்சநீதிமன்றத்தில் கூறியிருப்பது உண்மைக்குப் புறம்பானது. அன்றைய அரசு எடுத்த நடவடிக்கையினால்தான் கச்சத்தீவு இலங்கைக்குத் தாரைவார்க்கப்பட்டது என்பதுதான் உண்மை.

கட்டுரையாளர் : என்.முருகன், ஐ.ஏ.எஸ். அதிகாரி (ஓய்வு)

(நன்றி : “தினமணி”, 24-9-13)

Pin It