எங்களின் உழைப்பைத் திருடிய முதலாளியே!
எங்களை அடிமையாக்கிய அரசியல்வாதியே!
நான் சொல்கிறேன்...
அனுப்பி வையுங்கள் என் பிள்ளையைப் பள்ளிக்கூடத்துக்கு!
வன்கொடுமைகளுக்கு...
ஆளாகி விட்ட தலித்துகள் நாங்கள்
பஞ்சம் வந்து எங்களின் வாசலைத் தட்டலாம்
அவன் படிப்பதை-
நான் பார்த்தே ஆக வேண்டும்
அனுப்பி வையுங்கள் என் பிள்ளையைப் பள்ளிக் கூடத்துக்கு!
உனது கிழிந்த ஆடைகளுக்கு
ஒட்டுப் போட்டு கொடுப்பேனென உறுதியளிக்கிறேன்
என் ஆடைகளுக்கு
என்னிடமுள்ள ஊசியே கருவியாகும்
அனுப்பி வையுங்கள் என் பிள்ளையைப் பள்ளிக் கூடத்துக்கு!
என் ஆடைகள் கிழிந்து போகட்டும்
நான் கவலையும் துன்பமும் படமாட்டேன்
ஆனால்-
ஆடையின்றி என் பிள்ளை நடமாடக் கூடாது
நகை ஆபரணங்களால் எனக்கென்ன பயன்?
அனுப்பி வையுங்கள் என் பிள்ளையைப் பள்ளிக் கூடத்துக்கு!
இந்தச் சமூகத்திடம்
எதையோ அவன் பெற்றிருக்கிறான்
இந்த மக்களிடம் இந்த மண்ணிடம் பெற்று விட்டதைத் திருப்பித் தருவதற்கு
அவன் படித்தே ஆக வேண்டும்
அவன் வழக்குரைஞர் ஆகலாம்
யாருமே இங்கு மூடர்கள் அல்லர்
அனுப்பி வையுங்கள் என் பிள்ளையைப் பள்ளிக் கூடத்துக்கு!
கவி வாமனின்
மோசமான கவிதை வகளைப் போல்
நீர்த்துப் போக மாட்டான் என் பிள்ளை
'என் பிள்ளைக்குக் கல்வி இல்லையென்றால்....?’
இது உங்கள் மீது ஆணை
அனுப்பி வையுங்கள் என் பிள்ளையைப் பள்ளிக் கூடத்துக்கு'
கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- மக்களை நோக்கி அறிவியல் எனும் ஓர் அறிவியக்கம் உருவாக்கப்பட வேண்டும்
- டிராக்டர்கள் மீண்டும் டெல்லி வந்துள்ளன
- ஆடு முயல் சிங்கம்
- கற்கச் சிறந்த 'நிற்க அதற்குத் தக'
- ஈரோடு அர்பன் பாங்கி தேர்தல்
- கனவு - மார்ச் 2024 இதழ் மின்னூல் வடிவில்...
- இறையாண்மையின் இலக்கணம் புலிகள்
- உடைந்து தொங்கும் மோடி பிம்பம்
- தமிழ்நாட்டின் தனித்துவ அடையாளமான சுயமரியாதை திருமணங்களுக்கு ஆபத்தில்லை!
- ‘தகுதி’ ‘திறமையை’ தோலுரிக்கும் ராகுல் காந்தி
கவிதாசரண் - ஆகஸ்டு 2007
- விவரங்கள்
- வாமன் கர்தெக்
- பிரிவு: கவிதாசரண் - ஆகஸ்டு 2007