உக்கிரமேறிய தனிமை
உலகை உருக்கும் வெம்மை
தங்கும் கருவீடு
வரங்களை மறுக்கும்
கொடுந் தவம்
தன்னை அழித்தே
எரியூட்டும் இருப்பு
ஆழி குடித்து
துளி நிரப்ப முடியா
அட்சய தாகம்
பாலை
அவள்
பெண் மட்டுமே
உவர்க்கும் இரவுகள்
நிறங்கள் நெருங்கி நேர்கோடாகி
சிதிலமடையா வெண்ணிற ஒளியின்
பிணைப்பு முறுக்கேறி பிழிய
வழிகிறது இரவு நதியின் பாடலாய்
கோரைப்பற்கள் அணியும்
இரவின் சிரிப்பு பிரபஞ்ச
இடுக்குகளை துளையிட்டு நிரப்ப
அலாவுதீனின் அடிமை பூதமும்
கருமை நிறமேறிய கருவறைகளும்
கதற ஆரம்பிப்பது அநேகமாய்
சதிகள் கூர்தீட்டப்படும் கொடிய
இந்த இரவுப் பொழுதில் தான்
கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- ‘குடிஅரசு’க்கு வயது 100
- இடஒதுக்கீட்டின் எதிரி ஆர்எஸ்எஸ், பாஜக அடிபணிந்தது!
- நிலை தடுமாறும் நீலகிரி
- திருப்பூர் சங்கீதா மீது பொய் வழக்கு - குற்றவாளிகளுக்கு துணைபோகும் காவல் ஆய்வாளர்
- கௌரவ விரிவுரையாளர்கள் வாழ்வு, விடியலைப் பெறுமா?
- “திராவிட புரட்சிக் கவி” பாரதிதாசன்
- பிராகிருத நாடகத்தில் தென்னிந்தியக் குறிப்புகள்
- பிரளயம் தோன்றிடுமே!
- பார்ப்பன பத்திரிகைகளும் சர். ஷண்முகமும்
- பெரியார் முழக்கம் மே 02, 2024 இதழ் மின்னூல் வடிவில்...
அணங்கு - மார்ச் 2007
- விவரங்கள்
- எஸ்.தேன்மொழி
- பிரிவு: அணங்கு - மார்ச் 2007
உவர்க்கும் இரவுகள்
பாலை