எது இருந்தால்
உருவாகும் கவிதை

இது இருந்தால்
உருவாகுமோ கவிதை

அது இருந்தால்தான்
கருவாகும் கவிதை

அது இது எது?

மது இருந்தால்
மணம் பரப்பும் கவிப்பூ

பாட்டில் ருசியுள்ள கவிக்கு
பாட்டில் வாங்க பணமில்லை பாப்பா

நான் கடவுள் அன்று
நான் கடையில் இன்று

குடித்து படைப்பவன் கவிஞன்
படைத்து குடிப்பவன் மாகவி

கட்டிங் போட காசு கொடு பாப்பா!

Pin It