1

அழகான
ஆடை அணிந்திருக்கும்
பெண்களைப் பார்த்திருக்கிறேன்,
அழகை மட்டுமே
ஆடையாய் அணிந்திருப்பவள்
நீ ஒருத்தி மட்டும்தான்...

2

அழகு நிலையத்திற்குச் சென்று
தங்களை அழகுபடுத்திக் கொள்ளும்
பெண்களை பார்த்திருக்கிறேன்,
அழகு நிலையத்தையே
அழகுபடுத்திவிட்டு வருபவள்
நீ ஒருத்தி மட்டும்தான்..


3

அழகு நிலையங்களில் எல்லாம்
கண்ணுக்கு மைதீட்டிவிடுவார்களென்று
கேள்விப்பட்டிருக்கிறேன்,
உனக்கு மட்டும் எப்படி?
கவிதை தீட்டிவிடுகிறார்கள்...

4

நடைபாதையின்
இரண்டு பக்கமும்
பூச்செடிகள் நட்டிவைத்து
பாதையை
அழகுபடுத்தியிருந்தாலும்,
அந்த பாதையை
பேரழகாக்குவதென்னவோ
மருதாணியில் மலர்கள்
வரையப்பட்டிருக்கும்
உன் பாதங்கள்தான்...

- எஸ்.தங்கவேலு

Pin It