நிலமதிரும் ஆட்டம்
ஆடுகிறார்கள் பிள்ளைகள்
புலர்காலை அந்திப்பூக்கள் இயற்றும்
வாசப்பாடல்கள் வீதியெங்கும்
இடையுருவிய குறுவாள்
நடனமிடும் காற்றில்
கட்டுடைத்த இசைப்பெருக்கு
சிதறும் கரங்களும் சிரங்களும்
உன் வாள்நுனி வசமிருந்தன அன்று
வேட்கையற்ற நிலமுறிஞ்சும்
ரத்தம் இம்முறையுனது
பறக்கவியலா மைனாக்களின்
பிசுபிசுத் தொட்டிய சிறகினை
கழுவும் மேகம் சூழடைந்து
பூக்கத் தொடங்கும் வனம்
போர்வையாகும் நீல அழகில்
துளி அழுக்கில்லை
எல்லைத்தாண்டிய கரும்புகை
நேற்று வரைந்ததே தன் கடைசியோவியம்
குப்பிவிஷம் கண்ணி வெடி
களைந்த நாளன்றில்
போர்தீர்க்கும் பந்தயம்
வெல்லும் பிள்ளை பெறுவான்
பரிசாய் குறுவாள் பளபளவென்று
சமயம் வருகையில்
வாள் சோதிக்க
எதிரிகளென எவருமில்லையினி.
கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- ஆரியப் பார்ப்பனியப் பாசிசக் கருத்துகள் பொசுங்கட்டும்!
- குளிரூட்டும் ஆடைகள்
- பெண்களின் சமஉரிமைக்குத் தொடரும் போராட்டம்
- சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாக வேண்டும்
- காலம் காட்டும் மேஜிக்
- மாறுவேடம்
- ஜஸ்டிஸ் பத்திரிகையின் நிர்வாகம்
- பா.ஜ.கவின் வீழ்ச்சியை வழிமொழியும் வட இந்தியா!
- பாலாற்று நீரில் தமிழ்நாட்டின் உரிமையைத் தடுப்போம்!
- பத்தாண்டுகளுக்குப் பின் பேரா. சாய்பாபா விடுதலை