பசி வந்தபோது
என் தாத்தாவிடம்
நிலம் இருந்தது

பசி வந்த போது
என் அப்பாவிடம்
நெல் இருந்தது

பசி வருகிறபோது
என்னிடம்
ரேசன் அரிசி இருக்கிறது

இனி...

பசி வரும்போது
என் மகனிடம் இருக்கும்...
ஆயுதம்.

- கண்மணிராசா

Pin It