ஏகாந்தத்தின்
கொடுமையையும்
நிசப்தத்தின்
எரிச்சலும்
அனுபவிக்கும் போது
நண்பர்களின்
உன்னதம் தெரிகிறது
கல்லூரிக் கட்டணம்
தாமதமானால்
மகன் மனம்
வருந்துமென
கடனையாவது
வாங்கிக் கொண்டு
முதல் பஸ்ஸைப் பிடித்து
ஓடிவரும் போது
அப்பா புனிதத்தின்
உச்சத்தைத் தொடுகிறார்
அவள் அப்பா
சொன்ன பணக்கார மாப்பிள்ளை
வேண்டாமென்று
ஓலைக் குடிசையானலும்
உன்னோடுதான் - என்று
சொல்லி என்னோடு வாழும்
காதலியாகிய மனைவி
கடவுளாகிறாள்
இவள்
என் மகள் என்று
சொல்லி பெருமைப்பட
வாழும்போது
மகள் தாய்க்கு நிகராகிறாள்
உடல் நிலை குறைந்து
தூக்கிக்கிடக்க
தலமாட்டில் விடிய விடிய
நெஞ்சைத் தடவிக் கொண்டு
பணிவிடை செய்து
கடவுளை வேண்டும் போது
யாதுமாகிறாள்
தாய்
- கணியன் செல்வராஜ்