விதைபருவம் கடந்து வந்த
இயல்பற்ற மழையில் காலணியுறையை
கையில் சுழற்றியபடி நடந்து வரும்
சிறுவன் இன்பா தரையில் சில தீவுகளை
உருவாக்குகிறான். மழையைப் பற்றியதொரு
எதிர்மறை  பிம்பத்தை உருவாக்கியபடியே
அவனது உடுப்புகளை கழற்றி உலர்த்தினாள்
அதன் நுனியிலிருந்து சொட்டிய மழையில்
அறையில் வளரும் மெல்லிய வனங்கள்
முதன் முதலாய் நனைகின்றன.

- சி.அதிரதன்

Pin It