நூல் அறிமுகம்

பண்டைத் தமிழ்ச் சமூகத்தில் கல்வி

சேவியர் தனிநாயகம் அடிகளார், தமிழில் : மனோகர் பக்: -88 ரூ.50 | மாற்று, சென்னை \ -106.

சிந்து சமவெளி காலந்தொடங்கி இன்று வரை தமிழ்க்கல்வி குறித்து ஒரு உரையாடல் தேவைப்படுகின்ற காலம் இது. இந்தச் சூழலில் பேரா. தனிநாயகம் அடிகள் tணீனீவீறீ நீuறீtuக்ஷீமீ இதழில் எழுதிய சில கட்டுரைகள் தமிழாக்கமாக வந்திருக்கும் இந்நூல் இந்தத் தேவையை நிறைவு செய்கிறது. இந் நூலில் பழந்தமிழ் இலக்கியமும், பண்டைய இந்தியக் கல்வியும், பழந்தமிழ்ச் சமூகத்தின் கல்வியாளர்கள், பழந்தமிழ், புலவர் மற்றும் கல்வியாளர்கள், பழந்தமிழகத்தில் சமண பௌத்த கல்வி ஆகிய கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன.

துரத்தப்படும் மனிதர்கள் | ம. இராதாகிருஷ்ணன், மக்கள் கண்காணிப்பகம், மதுரை \ -2 | பக்: -210 | ரூ.175-

சகல பகுதியினராலும் புறக்கணிக்கப்பட்ட கல் ஒட்டர்கள், குறவர்கள், மலைக்குறவர்கள் ஆகியோர்களைப் பற்றிப் பேசுகிறது இந்நூல். இவர்கள் சமூக பலமோ, பொருளாதாரபலமோ, எண்ணிக்கையின் பலமோ இல்லாதவர்கள். இவர்களை தமிழ் நாடு மற்றும் அண்டை மாநில குற்றப்பிரிவு காவல்துறையினர் தம்மால் குற்றவாளிகளைப் பிடிக்கா முடியாத வழக்குகளில் இவர்களைச் சிக்க வைப்பது வாடிக்கையாக இருக்கிறது. இதனால் குழந்தைகள், முதியோர்கள், பெண்கள் என்று எல்லாத் தரப்பினரும் அனுபவிக்கும் சித்திரவதைகளை எழுத்தில் வடிக்க முடியாத அளவிற்கு உள்ளது. இவர்களோடு சேர்ந்து போராடிய ம. இராதாகிருஷ்ணன் எழுதியிருக்கும் இந்நூல் நமக்கு புது உலகத்தையும், புதிய பிரச்சனைகளையும் அறிமுகப்படுத்துகிறது.

கோவில் நுழைவு உரிமை: | பி. சிதம்பரம்பிள்ளை | சாளரம், சென்னை - 41 | பக்: 144 | ரூ.70

மதத்தை நிறுவன மயமாக்குவதில் முக்கிய பங்கு வகிப்பது கோவில்கள்தான். இந்தக் கோவில்களின் நடவடிக்கைகளை வரலாற்றின் ஆதாரங்களோடு சொல்லுகின்ற முதல் தமிழ் நூலாக இந்த நூல் இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். கோவில்களை இந்து அறநிலையத் துறையிடம் ஆங்கிலேய ஆட்சி ஒப்படைத்தது பற்றி சுவையான வரலாற்றைக் கூறுகிறது இந்நூல். மேலும் இந்நூலில் உள்ள கட்டுரைகள் 1929-ஆம் ஆண்டில் பெரியார் நடத்தி வந்த ஸிமீஸ்ஷீறீt இதழில் வெளிவந்துள்ளன. இந்நூலுக்கு பெரியார் எழுதிய முன்னுரை மிக முக்கியமானது. இந்நூல் வரலாற்று ரீதியாகவும் சட்டரீதியாகவும் விரிவாக ஆலயப்பிரவேச உரிமையைப் பற்றிப் பேசுகிறது.

வேதமும் விஞ்ஞானமும் -எஸ்.டி.விவேகி, அங்குசம், சென்னை- 19, பக்: 224, ரூ.110

எஸ்.டி.விவேகி என்ற புனைப் பெயர் கொண்ட இவர் இந்நூல் ஆசிரியர் தந்தை பெரியாரின் சமகாலத்தவர். தந்தை பெரியாருக்குப் பிறகு திராவிடர் கழக மேடைகளில் அதிகமாகப் பேசியவர், பிறப்பால் இஸ்லாமிய ராக இருந்தாலும், மசூதிக்குப் போகாமல் வெளிப்படையாக நாத்திகம் பேசியவர். மேலும் குரான், பைபிள், இந்து புராணங்கள் ஆகியவைகளை ஆராய்ந்து இந்நூலை எழுதியுள்ளார். 1978-ல் அங்கப்பா அறிவகம் வெளியிட்ட இந்நூலை மறுபதிப்பாக அங்குசம் வெளியிட்டுள்ளது.

பிறந்தியாள் -பானுபாரதி, கருப்புப் பிரதிகள், சென்னை- 5. பக்: - 80 , ரூ.50

இலங்கையில் போர் உக்கிரம் பெறத் தொடங்கிய சூழலில் எழுதத் தொடங்கிய இந்நூல் ஆசிரியர் இருபது ஆண்டுகளில் எழுதிய கவிதைகளின் தொகுப்பே இந்நூல். இவரின் பாடு பொருள்கள் அரச வன்முறை, ராμவ வன்முறை ஆகியவைகள் இருந்தாலும், சில கவிதைகள் பெண் என்ற ஒர்மையில் எழுதப்பட்டுள்ளன. கவிதை என்பது சூட்சமும், மாயத்தன்மை கொண்ட வார்த்தைகளால் புனையப்பட்டிருந்தாலும் அல்லது வெளித்தன்மையாகப் புனையப்பட்டிருந்தாலும் கவிஞனும், வாசகனும் ஒரு நேர்கோட்டில் பயணிக்க வேண்டிய அவசியமோ தேவையோ இல்லை என்பதை மறுபடியும் உணர்த்தும் நூல்.

தேசியம் பற்றிய மார்க்சியக் கோட்பாடு, ஹொரேஸ் பி. டேவிஸ் - தமிழில்: மு. வசந்தகுமார்,

பக்: 368 | ரூ.200

பி. டேவிஸ் அவர்களால் எழுதப்பட்ட ‘Towards a marxist theory of Nationalism’ என்னும் ஆங்கில நூலின் தமிழாக்கமே இந்நூல். முப்பது ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட நூலாக இருந்தாலும் இதில் ஆய்வு செய்யப்பட்ட செய்திகள் இன்றும் விவாதிக்கும் தருவாயில் உள்ளன. இந்நூலில் தேசியம் பற்றிம், சோவியத் ஒன்றியத்தில் தேசியப் பிரச்சனை, யூகோஸ்லேவியாவில் தேசிய இனப்பிரச்சனை, தேசியமும் சீனப்புரட்சியும், இலத்தீன் அமெரிக்கா - தேசியமா அல்லது புரட்சியா, ஆப்ரிக்க விடுதலைப் போராட்டம் ஆகியவை உள்ளன.

தானம் தாராளம், மரு. நா. மோகன்தாஸ் பண்புநூல் வெளியீட்டகம், தஞ்சாவூர், பக்:-96 , ரூ.50

சமய நம்பிக்கைகளோடு வாழ்க்கையை வாழ்ந்து வரும் மனிதர்கள் இறப்புக்கு பின்பும் சமய சடங்குகளால் அவர்களின் உடல்களும் அழிக்கப்படுகின்றன. இந்த மூட நம்பிக்கையை அகற்றி, மனித உறுப்புகளைத் தானம் செய்ய வலியுறுத்துகிறது இந்நூல். இந்த உடல் உறுப்பு தானங்களை சட்ட ரீதியாக எப்படிச் செய்ய வேண்டும் என்பதை எளிமை யாகவும், உடல் தானம் பற்றிய வரலாறு, அறுவைச் சிகிச்சைகள் பற்றிய செய்திகள், உடல் உறுப்பு தானம் செய்வது பற்றிய செய்திகள் ஆகியவைகளை எளிமையாக, அனைவருக்கும் புரியும்படியாக எழுதப்பட்டுள்ள நூல்.

அருணகிரிநாதர் முதல் வள்ளலார் வரை, ச. செந்தில்நாதன் வெளியீடு: புதுமைப்பித்தன் பதிப்பகம் சென்னை - 83 | பக்: 152 | ரூ.80

சமயவாதிகளுக்கும், அவர்கள் சார்ந்த பக்தி இயக்கத்திற்கும் வேறு ஒரு பக்கம் உண்டு. வேறு ஒரு பக்கம் என்பது தமிழ்ச் சமுதாயத்தின் சமூக வரலாற்றையும், பண்பாடு விடயங்களையும், எந்த மக்கள் சார்ந்து இயங்கியதையும் தெரிந்து கொள்ள முடியும். அந்த வகையில் எழுதப்பட்டுள்ள இந்தப் புத்தகத்தில் வள்ளலாரின் தொடக்கப் புள்ளியான அருணகிரிநாதர் என்ற முடிவோடும், திருமுறைகள் போற்றித் துதித்த சிவன் வணக்கததை மீறி முருகன் வணக்கம் ஏன் வந்தது, சைவத்தின் சரிவுக்கு காரணம் போன்ற பல சமூக வரலாற்றை எடுத்துக் கொண்டு ஆய்வு செய்கிற நூல்.

என் வாழ்க்கையின் கதை: | டாக்டர் எஸ்.பி. கோபிக்கர் | தமிழில் கீதாகிருஷ்ணா | பதிப்பு : பி.வி. வெங்கட்ராமன் | வெளியீடு: டாக்டர் கோபிக்கர்ஸ் ஃபௌன்டேஷன் ஃபர் ஹோமியோபதி | விற்பனை உரிமை: பாரதி புத்தகாலயம் | பக்:176 | ரூ.120

ஹோமியோபதி மருத்துவத்தின் மூத்த வல்லுநர்களில் ஒருவர் இந்நூல் ஆசிரியர். தமது மருத்துவத்துறை அனுபவங்களை இந்நூலில் விவரித்துச் செல்கிறார். அவரின் அனுபவங்கள் சில இனிமை யாகவும், சில கசப்பானவையாகவும், சில வேடிக்கையானவைகளாவும் இருக்கிறன. இவர், சிரமங்களையும் பகிர்ந்து கொள்பவராகவும், செல்வத்தைத் தேடாமல் மனிதர் களை நேசித்தவரின் வாழ்க்கையை வாசிக்கும் போது ஒரு முன் மாதிரியான மனிதரைச் சந்தித்த நிறைவு ஏற்படுகிறது.

ஒரு கம்யூனிஸ்டாக இருப்பதன் நன்மைகள், என். ராமகிருஷ்ணன் | வெளியீடு: சித்திரைப்பதிப்பகம், சென்னை | பக்-: 32 | ரூ.10

ஒரு கம்யூனிஸ்டாக இருப்பவரின் குணநலன்கள் எப்படி இருக்கும் என்று ஆரம்பிக்கும் இந்நூலில் கம்யூனிஸ்ட் மூலவர்களைப் பற்றிய செய்திகளும், ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் லண்டனில் படிக்கச் சென்றவர்கள் கம்யூனிச சித்தாந்தங்களால் ஈர்க்கப்பட்டு, திரும்பி இந்தியா வந்து கம்யூனிஸ்ட் கட்சி மூலம் மக்களுக்குப் பணி செய்த விதம், உலகம் முழுவதும் உள்ள கம்யூனிஸ்ட் ஆளுமைகள் பற்றிய சிறிய அறிமுகம் என்று கம்யூனிஸ்ட் கட்சி ஊழியர்களுக்காக எழுதப்பட்டுள்ள நூல் இது.

சிலப்பதிகாரம் | பதிப்பும் உரையும் -| - டாக்டர் ப.சரவணன், சந்தியா பதிப்பகம் | பக்:-575 | ரூ. 250

தமிழ்க் காப்பி’யங்களில் ஒன்றான சிலப்பதிகாரம் 1872 முதல் 1999 வரை பல்வேறு காலக்கட்டத்தில் முழுவதுமாகவும் சில பகுதிகளாகவும் பதிப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் சிலப்பதிகாரம் பிரஞ்சு, மலையாளம், ஆங்கிலம், மராட்டி, செக், தெலுங்கு, வடமொழி, இந்தி ஆகிய மொழிகளிலும் மொழிபெயர்க் கப்பட்டுள்ளது. இந்நூலில் அரும்பதவுரை தொடங்கி, அண்மையில் வந்த உரை ஈறாக அனைத்து உரைகளையும் தழுவி உருவாக்கப்பட்டுள்ளது.

Pin It