தமிழின அழிப்பு செயல்பாட்டில் யாரும் கற்பனை செய்து பார்க்க முடியாத தீவிர வன்மத்தோடு இந்திய அரசு முனைப்புக் காட்டுகிறது. இலங்கை அரசுக்கு இரண்டு போர்க்கப்பல்களை வழங்குவதற்கு செய்து கொள்ளப் பட்டுள்ள ஒப்பந்தம் அத்தகையது.

கோவா கப்பல் கட்டும் கூடத்தில் இரண்டு அதி நவீன போர்க்கப்பல்களைக் கட்டி முடித்து வரும் 2017 ஆம் ஆண்டு இலங்கைக்கு இந்தியஅரசு இவ்வொப் பந்தபடி வழங்க இருக்கிறது.

2008--2009 தமிழின அழிப்புப் போரில் சிங்கள வெறி இலங்கைக்கு எல்லா வகை உதவிகளையும் செய்து அந்த போரை இணைந்து நடத்தியது இந்தியா. போர்க் கருவிகள், உளவுத்தகவல்கள், உளவுக்கருவிகள் போன்ற வற்றைக் கொடுத்ததோடு சிங்கள அரசுடன் இணைந்து போரை வழிநடத்தியது இந்தியஅரசு.

எல்லாம் முடிந்த பிறகு இப்போது இலங்கைக்கு இரண்டு போர்க்கப்பல்களை வழங்க வேண்டிய அவசி யம் என்ன? இந்தியப் பெருங்கடல் வல்லரசு களான சீனாவும், இந்தியாவும் இலங்கைக்கு நண்பர்கள். சீனா வால் இலங்கைக்கு ஆபத்து வரப்போவது இல்லை. பாகிஸ்தானும் இலங் கைக்கு நட்புநாடுதான் இவ்வாறு இருக்க இலங்கைக்கு வேறு எந்த நாட்டில் இருந்து ஆபத்து வந்து விடப் போகிறது? எதுவும் இல்லை.

சர்வதேச பயங்கரவாதிகள் மூலமான அச்சுறுத்தல் இந்தியாவின் தெற்கிலிருந்து வரக்கூடும் என்றால் அதற்கு இந்தியா தனது கடற்படையை வலுப்படுத்திக் கொள்ளுமேயல்லாமல் இலங்கைக்குப் போர்க் கப்பல்கள் தருவதன் மூலமாக இந்த பாதுகாப்பு நட வடிக்கையை மேற் கொண்டுவிட முடியாது.

‘நாம் தரவில்லை என்றால், சீனா தந்து விடும்’ என்ற நிரந்தரப் பல்லவியை இதற்கும் பாடுகிறார்கள். இந்தியாப் போர்க்கப்பல்கள் தந்துவிட்டால் இலங்கை சீனாவிடம் போர்க்கப்பலோ வேறு நவீன ஆயுதங்களோ வாங்காது என்ற உத்தரவாதம் ஏதும் உண்டா? அதுவும் இல்லை. பிறகு எதற்காக இலங்கைக்குப் போர்க்கப்பல் வழங்க வேண்டும்?

ஈழத்தமிழர்களை அழித்தாயிற்று. இனி தமிழ் நாட்டுத் தமிழர்களை அச்சுறுத்தலில் வைக்க வேண் டும் என்பதே இந்நடவடிக் கையின் முதன்மை யான உள்நோக்க மாகும்.

இப்போது ஏற்பட்ட அழிவிலிருந்து பாடம் கற்றுக் கொண்டு விடுதலைப் புலிகள் மீண்டும் எழுவார்களானால் அதற்கும் முன்தடுப்பாக இது அமைய வேண்டும் என்பது அடுத்த நிலை நோக்கமாகும்.

கச்சத்தீவு இந்தியாவின் பகுதியாக இருந்ததே இல்லை என்று அப்பட்டமான ஒரு பொய்யுரையை உச்சநீதி மன்றத்தில் இந்திய அரசு அளித்துள்ளதையும் இந்த நடவடிக்கையையும் இணைத்துப் பார்க்க வேண்டும். தமிழ்நாட்டு மீனவர்களைத் தாக்குவதற்கும், வரும் எதிர்காலத்தில் தமிழ்நாட்டில் தமிழ்த் தேசிய அரசியல் எழுச்சி கொண்டால் அதை எதிர் கொள்வ தற்கு சிங்கள இலங்கையைக் கூட்டாளியாக பயன் படுத்திக் கொள்வதற்கும் இசைய செய்யப்பட்டுள்ள தொலை நோக்குத் திட்டமே போர்க்கப்பல் வழங்கும் திட்டமாகும்.

சீனா குறித்த அணுகுமுறை தொடர்பாக இந்தியா விற்கும் இலங்கைக்கும் எவ்வளவுதான் முரண்பாடுகள் இருந்தாலும் தமிழின அழிப்பில் இந்த இரண்டு ஆரிய வகை அரசுகளும் எப்போதும் கூட்டாளியாகவே இருப் பார்கள்.

இலங்கைக்கு இந்தியா போர்க் கப்பல்கள் வழங்கும் திட்டம் தமிழர்களுக்கு மேலுமொரு எச்சரிக்கையாகும்.

Pin It