தமிழீழம் தொடர்பான போராட்டங்களில் அடுத்த கட்டப் போராட்டம் என்ன என்பதைத் தமிழீழ மக்களும், தமிழ்நாட்டு மக்களும் முடி வெடுத்தாக வேண்டிய தருணமிது! ஒரு திருப்புமுனை தேவைப்படுகிறது.
இத்திருப்புமுனையின் முதல் தேவையாக, தமிழீழம் தொடர்பான கோரிக்கைகளில், தமிழ் ஈழத்தில் உள்ள தமிழர்களும் தமிழ்நாட்டில் உள்ள தமிழீழ ஆதரவு அமைப்புகளும் ஒரே நிலைபாட்டை எடுக்க வேண்டியது கட்டாயமாகிறது.
தமிழ்நாட்டில் தமிழீழம் குறித்த கருத்துகளைத் தங்கு தடையின்றியும், தடை வந்தாலும் சிறை சென்றும் பேசி வருகிறோம்; எழுதி வருகிறோம். இராணுவத் தால் முற்றுகையிடப்பட்டு - குடிமை உரிமைகள் மறுக் கப்பட்டுள்ள சூழ்நிலையில், ஈழத்தமிழர்கள் தங்கள் கருத்துகளை உரிமையுடன் வெளியிடும் வாய்ப்பு கள் மிகவும் குறைவு என்பதை நாம் அறிவோம். ஆனால் சம்பந்தர் தலைமையில் உள்ளோர் - தமிழ் நாட்டில் உள்ள தமிழீழ ஆதரவு இயக்கங்கள் ஒருமித்து எடுக் கும் நிலைபாடுகளுக்கு முரணாகப் பேசி வருகிறார்கள்.
எடுத்துக்காட்டாக, இலங்கையில் நடக்கும் பொது நலநாடுகள் மாநாட்டில் இந்தியா அறவே கலந்து கொள்ளக்கூடாது என்பது தமிழ்நாட்டில் எடுக்கப் பட்ட நிலை. ஆனால், முதலில் பொதுநல மாநாட்டில் இந்தியப் பிரதமர் கலந்து கொண்டு, ஈழத் தமிழர்களின் குறைகளைக் களையப் பேச வேண்டும் என்று சம்பந்தர் தலைமையில் உள்ள விக்னேசுவரன் அறிவித்தார் (2013 செப்டம்பர் - 21, டைம்ஸ் ஆப் இந்தியா).
தமிழ்நாட்டில் உள்ள இனத்துரோக ஆற்றல் களான காங்கிரசார், சி.பி.எம். கட்சியினர் மற்றும் சோ சுப்பிரமணிய சாமி போன்ற பார்ப்பன வெறியர்கள் விக்னேசுவரன் பேச்சை சாக்காக வைத்துக் கொண்டு, தமிழ்நாட்டுத் தமிழீழ ஆதரவு ஆற்றல்களைத் தாக்கு கின்றனர்.
ஈழத்தமிழர்கள் இலங்கைக் காமன்வெல்த்தில் இந்தியா கலந்து கொள்ள வேண்டும் என்று கோரும் போது, தமிழ்நாட்டில் உள்ளோர் எதிர்ப்பது- இங்குள்ள அரசியல் ஆதாயங்களுக்காகத் தான் என்று அவதூறு செய்கின்றனர் என்று அவர்கள் கூறினர்.
தமிழகம் கொடுக்கும் நெருக்கடி யைச் சமாளிப்ப தற்காக, “இலங்கை போவது பற்றி நான் இன்னும் முடிவு செய்யவில்லை’’ என்று பிரதமர் மன்மோகன் சிங் அறிவிக்கிறார்.
இந்தியப் பிரமதரே இப்படி அறிவித்த பின், சம்பந்தர் குட்டிக் கரணம் போட்டு, இலங்கைக் காமன்வெல்த்தில் இந்தியா கலந்து கொள்ளக்கூடாது என்கிறார். (பி.பி.சி. இணையதளம் - தமிழ், 2013 அக்டோபர் 22).
அதாவது சம்பந்தர் வகையறா வினர் இந்திய அரசின் - விசுவாசி களாக நடந்து கொள்கிறார்களே தவிர, தங்கள் இனத்தைச் சேர்ந்த தமிழ்நாட்டு மக்கள் இயக்கங்கள் ஈழம் தொடர்பாக எடுக்கும் ஒரு மித்த நிலைபாட்டை ஆதரிப்ப தில்லை.
ஒருவேளை, காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக் கூடாது என்று கோருகிற கருத்துரிமை இலங்கையில் இல்லையென்றால், இது தொடர்பாக அமைதிகாக்க வேண்டுமேயன்றி “இந்தியா கலந்து கொண்டு எங்கள் சிக்கல்களுக்காகக் குரல் கொடுக்க வேண்டும்’’ என்று கூறக் கூடாது.
வடக்கு மாநிலத் தேர்தல் பரப்பு ரையின் போது, “இங்கு கணவன் மனைவிக்கிடையே நடக்கும் சண்டைபோல் சிங்களர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையே சிக்கல்கள் உள்ளன. இதில் மூன்றாவது நபராகிய தமிழ்நாட்டினர் தலையிட்டு, மணமுறிவு (தனி ஈழம்) தான் தீர்வு என்று சொல்லக் கூடாது’’ என்று கூறினார்.
சம்பந்தரோ அல்லது விக்னே சுவரன், சுமந்திரன் உள்ளிட்ட அவரின் அணியினர் தமிழகத்தில் ஈழம் தொடர்பாக எடுக்கப்படும் சரியான - தேவையான நிலைபாடு களுக்கு முரணாகப் பேசும் போது, தமிழ் ஈழமக்கள் (வடக்கு, கிழக்கு மாநிலங்களின் மக்கள்) வெறும் பார்வையாளர்களாக இருக்கக் கூடாது. எந்தெந்த வடிவங்களில் முடியுமோ அந்தந்த வடிவங்களில் தங்கள் எதிர்ப்பை சம்பந்தர் அணியிடம் தெரிவிக்க வேண்டும்.
தமிழீழத்தில் பொதுக்கூட்டம் போட்டுத் தங்கள் நிலையை மக்கள் தெரிவிக்க முடியாது என்ற உண் மையை நாம் அறிவோம். வடக்கு கிழக்கு மாநில மக்கள் தங்களுக்குள் வீடுகளில், வீதிகளில், கோயில்களில், மக்கள் கூடும் பிற இடங்களில் சம்பந்தர் அணியின் தவறான அணுகுமுறைகளை விமர்சனமாகப் பேசிக் கொள்ள வேண்டும். அப்போது அக்கருத்து தமிழ்த் தேசியக் கூட்டணித் தலைமையை எட்டும். அங்கு வரும் தமிழ் நாளிதழ்களில் மாற்றுக் கருத்துகளை எழுத வேண்டும்; வெளியிட வேண்டும். நேரடியாக அத்தலைவர்களைச் சந்தித்து அவர்களின் கருத்துகளில் தங்களுக்கு உடன்பாடில்லை என் பதைத் தெரிவிக்க வேண்டும்.
2009 பேரழிவு முடிந்து நான் காண்டுகள் முடிந்து ஐந்தாவ தாண்டு நடந்து கொண்டுள்ளது. இராசபட்சே கும்பல் மீது பன்னாட்டுத் தலையீடுகள் கூடுதலாக வருகின்றன. அக்கும்பல் முன்னைப் போல் அதே பாணியில் தமிழினத் திற்கெதிரான சர்வாதிகாரத்தை நடத்த முடியாத அளவிற்கு சிறித ளவாவது தடங்கல்கள்கள் உருவாகியுள்ளன. இவ்வாறு உருவாகியுள்ள இந்த வெளியைத் திறமையாகப் பல்வேறு வடிவங்களில் தமிழ் ஈழ மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். சம்பந்தர் - விக்னேசுவரன் அணியினர் தங்கு தடையின்றி இராசபட்சே கும்பலுக்கு சலாம் போட்டு, இந்தியாவுக்கு விசுவாசம் காட்டும் போக்கில் தடைக் கற்களைப் போட வேண்டும்.
தமிழீழ மக்கள் செயலற்று இருக்கக் கூடாது. இறுக்கமான காற்றழுத்தச் சூழலில் அதற்கேற்ப மூச்சுவிட முயல்வதைப் போல- இப்பொழுதுள்ள இக்கட்டான நிலையிலும் ஈழமக்கள் இச்சூழலுக் கேற்ற வடிவத்தில் செயல்பட்டாக வேண்டும். வெறும் பார்வையாளர் களாக இருக்கக்கூடாது. இச்செயல் பாட்டின் ஊடாகத்தான் சனநாயக வெளிக்கேற்ற புதிய தமிழீழ இயக்கம் பிறக்கும். இவ்வுணர்ச்சியைத் தடுக்க இலங்கை அரசு அடக்குமுறைகளை ஏவும்.
அவற்றை எதிர் கொள்ளவும் அதற்காக சிறைக்குச் செல்லவும் அணியமாக வேண்டும். ஆனால், சனநாயக வடிவங்களில் போராடும் மக்களை அரசின் அடக்குமுறை களால் முற்றிலுமாகத் தடுத்துவிட முடியாது. இப்புதிய மக்கள் திரள் இயக்கத்தின் இப்போதைய இலக்கு குடிமை உரிமை மீட்பாக இருக்க வேண்டும்.
குடிமை உரிமை மீட்பில் வேர் பிடித்து, மக்கள் ஆதரவைத் திரட்டிக் கொண்ட பின், குடிமை உரிமை மீட்பின் நீட்சியாக, ஐ.நா. மேற்பார்வையில் கருத்து வாக் கெடுப்பு கோர முடியும்.
ஆனால், சம்பந்தர் அணியைத் திருத்த முடியாது என்ற கசப்பான உண்மையை தமிழீழத் தமிழர்கள் உணர்ந்தாக வேண்டும். அவ்வணி எதிரியிடம் சரணாகதி அடை வதைத் தனது “இராசதந்திரம்” என்று வர்ணித்துக் கொண்டு அடிமை அரசியல் நடத்திக் கொண் டிருக்கும்.
புலம் பெயர்ந்த நாடுகளில் தமிழர்கள், தங்களை ஒரு குடிமை உரிமை மீட்பு அமைப்பாக இன்னும் ஒருங்கிணைத்துக் கொள்ள வில்லை. 2009 பேரழிவிற்குப் பின் நான்கரை ஆண்டுகள் கடந்து விட்டன. ஆண்டு தோறும் மாவீரர் நாளில் கூடுவதும், அமைதி வணக் கம் செலுத்துவதும் மட்டும் போது மா? அது அமைப்பு வடிவம் பெற வேண்டாமா? புலம் பெயர்ந்த நாடுகளில் எத்தனை குழுக்கள்?
அவ்வப்போது ஏற்படும் நிகழ் வுகளின் எதிர்வினையாகக் கூடிக் கலைந்தால் போதாது. அமைப்பாக வேண்டும். புலம் பெயர்ந்த நாடுகளில் ஏன் அமைப்பாக முடிய வில்லை?
அரசியல் போராட்டம், அமைப்பு, இயக்கம் ஆகிய துறை களில் ஈழத்தமிழர்களுக்குக் கிடைத் துள்ள பட்டறிவை விட உலகில் வேறு யார்க்குக் கிடைத்திருக்கிறது? ஈழத்தமிழர்களை விட அறிவு நுட்பம் வாய்ந்த, ஈகத்திற்கஞ்சாத வேறொரு இனம் உண்டா? இவை அனைத்தையும் பயன்படுத்தி, தமிழ் ஈழத்திலும், புலம் பெயர்ந்த நாடுகளிலும் புதிய சூழலுக்கேற்ற அமைப்பை உருவாக்க வேண்டும்.
அமைப்பு வடிவம் பெறாத சமூகம் தலைமை இல்லாத சமூகம் ஆகும்; சரியான தலைமையில்லாத சமூகம் சர்வாதிகாரிகளின் வேட்டைக்காடு மட்டுமல்ல, சந்தர்ப்ப வாதிகளின் வேட்டைக்காடும் ஆகும்.
தமிழ்நாடு
ஈழத்தமிழர்களுக்காகத் தமிழ் நாட்டுத் தமிழர்கள் எண்ணில டங்கா ஈகங்கள் புரிந்திருக்கி றார்கள்; உயிரிழப்புகள், உடைமை இழப்பு, வேலை இழப்பு, சிறை வாழ்வு என ஏராளமாக ஈகம் செய்துள்ளார்கள். ஈழ ஆதரவுக் கட்சி களும் இயக்கங்களும் தமிழ்நாட்டுத் தமிழர்களுக்காகப் போராடியதை விட ஈழத்தமிழர்களுக்காகப் போராடியதே அதிகம். 1983லிருந்து கணக்கெடுத்தால் இந்த உண்மைகள் விளங்கும்.
இத்தனை ஈகங்களால், போராட்டங்களால், ஈழத்தமிழர்களுக்குத் தமிழ்நாட்டுத் தமிழர்கள் சாதித்தது என்ன? சொல்லிக் கொள்ளும் படியான சாதனை எதுவுமில்லை. 2009-இல் ஈழத்தில் போர் நிறுத்தம் கொண்டு வர முடிய வில்லை. போர் நிறுத்தம் கொண்டு வரும் வகையில் இந்திய அரசுக்குத் தமிழ்நாட்டுத் தமிழர்கள் போராட்டம் நெருக்கு தல் நடத்தவில்லை; கொடுக்க வில்லை.
இப்பொழுது, ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் அமெரிக்கா - இலங்கை அரசுக்கு எதிராகக் கொண்டு வந்த தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கும் நிலைக்குத் தள்ளியுள்ளோம் என்று கூறிக் கொள்ளலாம். ஆனால், அமெரிக்கத் தீர்மானம் இலங்கையின் மீது பன்னாட்டுப் புலனாய்வு வந்து விடாமல் தடுக்கும் மதில் சுவர் என்பதே நடைமுறை உண்மை. எனவே, இத்தீர்மானத்தை ஆதரித்த தன் மூலம், இந்தியாவின் இலங்கை ஆதரவுக் கொள்கை அப்படியே நீடிக்கிறதே தவிர, மாறிவிட வில்லை.
2008 -2009-இல் இலங்கை அரசு நடத்திய தமிழின அழிப்புப் போரில், இந்தியா படை, பணம், பன்னாட்டு ஆதரவு திரட்டித் தருதல் என்பன போன்ற பல வகையிலும் பங்கெடுத்தது. இன்றும் பன்னாட்டுப் புலனாய்வு மன்றம் சிங்கள அரசு மீது அமைத்திடாமல் பாதுகாப்பதில் இந்தியாவின் பங்கு முகா மையானது.
இப்பொழுது இலங்கையில் பொதுநலநாடுகள் மாநாடு நடை பெறாமல் தடுப்பதில் தொடங்கி, குறைந்த அளவாக, இந்தியா அதில் கலந்து கொள்ளாமல் புறக்கணிக்க வேண்டும், அதிலும் குறைந்த அளவாக பிரதமராவது அதில் கலந்து கொள்ளாமல் இருக்க வேண்டும் என்ற கோரிக்கைகளுக் காகப் போராட்டங்கள் தமிழகத் தில் நடக்கின்றன. எமது தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியும், இப்போராட்டங்களில் பங்கு கொண்டு வருகிறது.
பொதுநலநாடுகள் மாநாட்டில் இந்தியா பங்கு கொள்ளவில்லை என்றால், சிங்கள அரசுடன் இந்தியா கொண்டுள்ள உறவில் மாற்றம் வந்ததாக எடுத்துக் கொள்ள முடியுமா? முடியாது. நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கியுள்ள நிலையில் தமிழக மக்களின் வாக்குகளை இழந்துவிடக்கூடாது என்பதற்காக நயவஞ்சக நாடகமாடி, கொழும்பு மாநாட்டில் கலந்து கொள்ளாமல் இருக்கலாம். அல்லது பிரதமர் கலந்து கொள்ளாமல் இருக்கலாம். அவ்வாறு நடந்தால் அது ஏமாற்று உத்தி தவிர, இலங்கையின் மீது இந்தியாவின் கொள்கை மாறியதன் அடையாளம் அன்று. தமிழீழத் தமிழர்களுக்கு நீதிபெற்றத் தர இந்தியா முன்வந்து விட்டதாகக் கருத முடியாது.
இந்தியாவின் இலங்கைக் கொள்கை - சிங்கள ஆதரவு-- தமிழின எதிர்ப்பு என்ற வரலாற்று அடிப்படையில் அமைந்தது. இன வரையறுப்பு - இன அணுகுமுறை ஆகிய வற்றின் மீது கட்டி எழுப்பப் பட்டுள்ளது. இந்தக் கமுக்கத்தை அண்மையில், இலங்கையின் இந்தியத் தூதர் கரியவாசம் போட்டு உடைத்து விட்டார்.
இலங்கையில் உள்ள தமிழர் களையும், இந்தியாவில் உள்ள தமிழர்களையும் தவிர்த்த மற்ற எல்லாரும் ஒரே இனத்தைச் சேர்ந்தவர்கள் என்றார். அதாவது ஆரிய இனத்தைச் சேர்ந்தவர்கள் என்றார்.
பாரதிய சனதாக் கட்சித் தலைவர் அத்வானியும் அவரது இணை யத்தளத்தில், அண்மையில் அதே கருத்து வெளியிட்டிருந்தார். இலங்கையிலும், இந்தியாவிலும் ஒரே இனத்தவர்தாம் உள்ளனர். எனவே, இலங்கை இந்திய ஒற்றுமையைப் பிரிக்க முடியாது என்றார்.
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் உள்ள இந்த ஆரிய இனப்பிணைப்பைத் தமிழ்நாட்டில் ஈழமக்களுக்காகப் போராடும் பல அமைப்புகள் புரிந்து கொள்ள வில்லை. ஆரியக் கொள்கையில் பா.ச.க.வுக்கும் காங்கிரசுக்கும் இடையில் வேறுபாடில்லை என்ற அடிப்படை உண்மையையும் தமிழ கத்தின் ஈழஆதரவு பல அமைப்பு கள் அறியவில்லை; அல்லது அவ்வாறு அறிந்து கொள்ள விரும்பவில்லை.
காங்கிரசு - பா.ச.க மட்டுமின்றி வடஇந்தியத் தென்னிந்தியக் கட்சி கள், மனித உரிமை அமைப்புகள் ஆகியவையும் சிங்கள இன ஆதரவு, தமிழின எதிர்ப்பு அல்லது தமிழினப் புறக்கணிப்பு என்ற அணுகு முறையை வெவ்வேறு அளவுகளில் அழுத்தங்களில் கொண்டுள்ளன. இந்தக் கட்சிகள் கடந்த மார்ச்சு மாதம், இந்திய நாடாளுமன்றத்தில் “இலங்கையில் நடந்தது இனப் படுகொலை’’ என்ற தீர்மானம் போட முடியாது என்று மறுத்து விட்டன. இப்போதும் இந்தக் கட்சிகள், இலங்கையில் பொதுநல நாடுகள் மாநாடு நடக்கக் கூடாது என்று கூறவில்லை. மனித உரிமைப் போராளிகளான அருந்ததிராய், மேதாபட்கர் போன்றவர்கள் கூட இக்கோரிக்கையை எழுப்பவில்லை.
இந்தியாவில் தமிழினத்திற் கெதிராக உள்ள இந்த இனப்பாகு பாட்டைப் புரிந்து கொள்ளாத தமிழர்கள், புரிந்துக் கொண்டாலும் அதை வெளிப்படுத்த விரும்பாத தமிழர்கள் ஈழத்தமிழர்களின் விடிவுக்காக எந்த அளவுக்குப் போராடிட முடியும்? அடையாளப் போராட்டங்களும் தங்களை அடையாளப் படுத்திக் கொள்ளும் போராட்டங்களும் மட்டுமே அவர்களால் நடத்த முடியும்!
தமிழர்களுக்கும் கன்னடர்களுக்குமான காவிரிச் சிக்கலில்- தமிழர்களுக்கும் மலையாளிகளுக் குமான முல்லைப் பெரியாறு அணைச் சிக்கலில், - தமிழர்களுக்கும் தெலுங்கர்களுக்குமான பாலாற்றுச் சிக்கலில், - தமிழர்களுக்கும் சிங்களர்களுக்குமான கச்சத்தீவு மற்றும் மீன்பிடிப்புச் சிக்கலில் இந்திய அரசும், இந்தியாவின் இதர அரசியல் கட்சிகளும் என்றாவது நடுநிலை வகித்து, நீதி சொன்ன துண்டா? இல்லை. இந்தியாவுக்குள் பன்னாட்டு அநாதைகளாகக் கிடக்கும் தமிழர்களின் அவலத்தை உணராத, உணர்ந்தாலும் அதை வெளிப்படுத்தாத, தமிழ்நாட்டுக் கட்சிகளும், அமைப்புகளும் ஈழத் தில் நடைபெறும் தமிழர்களுக் கெதிரான இனப்பாகுபாட்டைத் தடுக்கப் போகிறோம் என்றால் அதில் எந்த அளவு உண்மை இருக்கும்? எந்த அளவில் அதில் வெற்றி பெற முடியும்?
தமிழ்நாட்டின் மொத்த வணி கத்தை ஏற்கெனவே மார்வாடி- குசராத்தி சேட்டுகள் கைப்பற்றி விட்டார்கள். இப்போது அவர்கள் தமிழக சில்லறை வணிகத்தையும் கைப்பற்றிக் கொண்டுள்ளார்கள். மார்வாடி - குசராத்தி சேட்டுகளின் புதிய பங்காளிகளாக இணைந்து மலையாளிகள் தமிழக வணிகத்தைக் கைப்பற்றிக் கொண்டுள்ளார்கள். நிதி நிறுவனங்களில் மலையாளிகள் கோலோச்சுகிறார்கள்.
மார்வாடி - குசராத்தி சேட்டுகள் சென்னை சௌக்கார்பேட்டையில் கொற்றம் நடத்துகிறார்கள் என் றோம். இது பழைய கதை, இப் போது சென்னையில் பல சௌக் கார் பேட்டைகள் உருவாகிவிட் டன. புரசைவாக்கம் கெல்லீஸ் பகுதியில் அடுக்குமாடி வீடுகளைக் கட்டிக் கொண்டு தமிழர்களுக்கு வாடகைக்கு தரமுடியாது என்று பகிரங்கமாகக் கூறுகிறார்கள். மனைவணிகத்தில் கோலோச்சும் மார்வாடி - குசராத்தி சேட்டுகள்- தமிழரல்லாத குடியிருப்புகளை தமிழகமெங்கும் உருவாக்கி வருகிறார்கள். ஏராளமாக நிலங்களை வாங்கிப் போட்டுள்ளார்கள். அவர்களுக்கு அடுத்த நிலையில் மலையாளிகள் ஆக்கிரமிப்பு உள்ளது.
வடமாநிலங்களிலிருந்து அன்றாடம் பல்லாயிரம் பேர் வந்து தமிழ கத்தில் குவிகிறார்கள். குக்கிராமங் களிலும் வெளி மாநிலத்தவர்கள் ஏராளமாகக் குடியேறி விட்டார் கள். இந்த வேகத்தில் அயலார் குடியேற்றம் போனால் அடுத்த பத்தாண்டுகளில் தமிழகம் தமிழர் தாயகமாக இருக்காது. வேற்றினத் தார் தாயகமாக மாறிவிடும்.
தமிழகத்தில் சூறாவளிக் காற்று போல் அயலார் தொழில், வணிக குடியேற்ற ஆக்கிரமிப்பு நடைபெறுகிறது. இதைக் கண்டு கொள்ளாத கட்சிகளும் அமைப்புகளும் ஈழத்தில் நடைபெறும் சிங்களக் குடி யேற்றங்களைத் தடுக்கப் போராடுகிறோம் என்றால் அதில் எந்த அளவு உண்மை இருக்கும்? அது வெறும் அடையாளப் போராட்ட மாகத்தானே அமையும்?
எமது தமிழ்த் தேசப் பொதுவு டமைக் கட்சி தமிழகத்திலிருந்து வெளியாரை வெளியேற்ற வேண் டும் என்று போராடுகிறது. மொழி அடிப்படையில் தமிழர் தாயகமாக தமிழ்நாடு அமைக்கப்பட்ட 1956 நவம்பர் 1-க்குப் பிறகு தமிழ்நாட்டில் குடியேறிய அனைத்து வெளி மாநிலத்தவரையும் வெளிநாட்டி னரையும் வெளியேற்ற வேண்டும் என்கிறது த.தே.போ.க. தமிழகத்தில் புதிதாக வந்து குவிந்துள்ள வெளி மாநிலத்தவர் யாருக்கும் வாக்காளர் அடையாள அட்டையோ, குடும்ப அட்டையோ வழங்கக் கூடாது என்று இயக்கம் நடத்துகிறது. தமிழகக் கட்சிகளும் அமைப்புகளும் தமிழகத்தில் நடைபெறும் அயலார் ஆக்கிரமிபிற்கெதிராக ஏன் குரலெழுப்பவில்லை?
கடந்த ஆண்டு காவிரி நீரை முற்றாகத் தடுத்து வைத்துக் கொண்டது கர்நாடகம். அந்த அநீதிக்குப் பக்க வலுவாகச் செயல்பட்டது இந்திய அரசு. தமிழகத்தில் பல மாவட்டங்களில் பதினாறு இலட்சம் ஏக்கருக்கு மேல் சாகுபடி செய்திருந்த பயிர்கள் காய்ந்து சருகாயின. மேலும் பல இலட்சம் ஏக்கர் நிலங்கள் தரிசாகப் போடப்பட்டன. இந்த அநீதியை- அவலத்தை எதிர்த்துத் தமிழகம் தழுவியப் போராட்டத்தை யாரும் நடத்த வில்லையே ஏன்? காவிரி டெல்டா மாவட்டங்களில் உழவர்கள் தற்கொலை செய்து கொண்டார்கள். அதன் பின்னர் கூட தமிழகம் தழுவிய போராட்டங்கள் வெடிக்க வில்லை. டெல்டா மாவட்டங்களில் வட்டார அளவில் போராட் டங்கள் நடத்தப்பட்டன. கண்முன்னே நடந்த தமிழகத் தமிழர்களின் துயரங்களும் - தற்கொலைகளும் தமிழகக் கட்சிகளையும் அமைப்புகளையும் தமிழகம் தழுவிய அளவில் கட்டி எழுப்ப வில்லை என்றால் - இவை ஈழத் தமிழர்களுக்காக நடத்தும் போராட்டங்கள் அடையாளப் போராட்டங்களாக அமையாமல் - இந்திய அரசைப் பணிய வைக்கும் போராட்டங்களாகவா அமையும்?
தமிழக முதலமைச்சர் செயலலிதா மிகத் துணிச்சலாகத் தமிழகப் பள்ளிக் கல்வியில் தமிழ் மொழியை வெளியேற்றும் திட்டத்தை அறிவித்துச் செயல்படுத்தி வருகிறார். நடப்புக் கல்வியாண்டில் ஒன்றாம் வகுப்பு முதல் +2 வரை ஆங்கிலப் பயிற்று மொழி வகுப்பு களைத் தொடங்கியுள்ளார். தமிழக மெங்கும் இது முழுமையாகச் செயல்படுத்தப்பட உள்ளது. இத் திட்டம் முழுமையடைந்து விட்டால் தமிழ்நாட்டிலிருந்து தமிழக அரசே தமிழை வெளியேற்றி விட்டதாக அமையும் இந்தக் கொடுமையை, - இனத்தின் மொழி அழிப்பை எதிர்த்துத் தமிழகம் தழுவிய போராட்டங்கள் தமிழ் நாட்டில் நடைபெற வில்லையே ஏன்? தமிழ்வழிக் கல்விக் கூட்டியக்கம் சார்பில் வரம்பிற்குட்பட்ட சில போராட்டங்கள் மட்டும்தானே நடந்தன? தமிழ் மொழியை வெளியேற்றும் செயலலிதா அரசின் தமிழின எதிர்ப்புத் திட்டத்தை எதிர்த்துத் தமிழகம் தழுவிய அளவில் வீதிக்கு வராத கட்சிகளும் அமைப்புகளும் தனிநபர்களும் தமிழ் ஈழத் தமிழர்களின் உரிமையை மீட்டிட என்ன செய்துவிட முடியும்?
ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் போல ஒரு புள்ளி விவரம் வெளியாகியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் 161 அரசுத் தொடக்கப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பில் தமிழ்வழிப் பிரிவுகள் இல்லை. 28 நடுநிலைப் பள்ளிகளில் 1-ஆம் வகுப்பில் தமிழ் வழி வகுப்புகள் இல்லை.
நிறைவாக...
ஈழத்தமிழர்களிடையேயும் தமிழகத் தமிழர்களிடையேயும் உள்ள குறைபாடுகளை, வலுவின்மைகளை (பலவீனங்களை) ஓரளவு பார்த்தோம். இந்தத் திறனாய்வு அடிப்படையில் இனிச் செய்ய வேண்டியவற்றைச் செய்ய முனைய வேண்டும்.
தமிழீழத் தமிழர்கள்
1. தமிழீழத்தில் புதிய சூழலுக் கேற்ற முறையில் - புதிய சனநாயக அமைப்பொன்றை உருவாக்கிக் கொள்ள வேண்டும். அதற்குத் தேவைப்படும் ஈகத்தைச் செய்தாக வேண்டும். ஆயுதப் போராட்ட வடிவம் இப்போதைய உடனடித் தேவை அன்று.
இந்திய - இலங்கை அரசுகளின் கங்காணித் தலைமையாக உள்ள சம்பந்தர் வகையறாக்களின் தலைமையைப் புறந்தள்ள வேண்டும்.
தமிழீழத்தில் புதிதாக உருவாக்கப்படும் சனநாயக அமைப்பின் தலைமையை ஏற்றுப் புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் தமிழர்கள் ஒருங்கிணைய வேண்டும்.
2. தமிழீழத் தமிழர்கள் இலங்கை அரசை மட்டுமின்றி இந்திய அரசையும் தங்களது இனப்பகை அரசாக வரையறுக்க வேண்டும். இந்திய அரசின் மூலமாக ஈழ உரிமைகளை மீட்க முடியும் என்று இனியும் கருதினால், ஈழத் தமிழர்களை வரலாறு நிரந்தரமாகக் கைவிட்டுவிடும் என்பதை உணர வேண்டும்.
தமிழகத் தமிழர்கள்
1. ஈழத்தமிழர்களின் உரிமைகள் மீட்பிலும் தமிழ் ஈழ விடுதலையிலும் அடித்தள ஆற்றலாகவும் முதன்மை ஆற்றலாகவும் உள்ள மக்கள் ஈழத்தமிழர்களே அன்றி, தமிழ்நாட்டுத் தமிழர்கள் அல்லர்.
தமிழ்நாட்டுத் தமிழர்கள் ஈழத் தமிழர்களின் உண்மையான உருப்படியான ஆதரவு ஆற்றல்களாக மட்டுமே செயல்பட முடியும்.
ஈழவிடுதலைக்காகத் தமிழ் நாட்டில் இயக்கம் நடத்துகிறோம் என்று யார் சொன்னாலும் அவர்கள் ஈழத்தமிழர்களையும் ஏமாற்றுகிறார்கள், தமிழகத் தமிழர்களையும் ஏமாற்றுகிறார்கள் என்ற உண்மையை அறிந்து கொள்ள வேண்டும்.
2. தமிழ்நாட்டுத் தமிழர்களின் உரிமைகள் - சிக்கல்கள் ஆகியவற்றின் தீர்வுக்காகப் போராடித் தமிழ்நாட்டு மக்கள் ஆதரவை அடித்தளமாகக் கொண்டு செயல்படும் கட்சி அல்லது அமைப்பே தமிழ்நாட்டில் வளரும். அவ்வாறு வளர்ந்து தமிழக மக்களின் பாதுகாப்புப் படை போல் விளங்கும் தமிழக அமைப்பே, ஈழத் தமிழர்களின் துயர்துடைக்கவும் அவர்களின் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கும் உருப்படியான துணை ஆற்றலாய் விளங்கமுடியும்.
3. இந்திய அரசு இனப்பகை அரசு என்பதை வரலாற்று வழிப்பட்ட உண்மையை உணர்ந்து அதனடிப் படையில் தமிழகத் தமிழர்கள் கொள்கை வகுக்க வேண்டும். அப்படிப்பட்ட அமைப்புகளையே ஏற்க வேண்டும், ஆதரிக்க வேண்டும்.
மேற்கண்ட அடிப்படையில் செயல்பட்டால் தமிழீழத் தமிழர்களுக்கும் தமிழகத் தமிழர்களுக்கும் வரலாற்றின் வாயில் திறக்கும்.
பெ.மணியரசன்
இதே போல் கர்நாடகா, ஆந்திரா, மராட்டியம், டில்லி...இன்னும ் பிற மாநில அமைப்புகள் அங்குள்ள குடியேறி உள்ள தமிழர்களை வெளியேற்ற வேண்டும் என்ற கோரிக்கையை பெ.மணியரசன் ஆதரிப்பாரா?
உலகம் முழுக்க பல நாடுகளில் அகதிகளாக குடியேறி அந்ததந்த நாடுகளில் குடியுரிமை பெற்றுள்ள ஈழத்தமிழர்களை அந்தந்த நாடுகளின் அமைப்புகள் இலங்கைக்கு அனுப்பக் கோரி போராடினால் பெ.மணியரசன் ஆதரிப்பாரா?
முதலாளியத்தின் வளர்ச்சி போக்கில் ஒரு தேசிய இனத்தின் எல்லைப் பகுதியில் பிற தேசிய சிறுபான்மையினர் குவிந்து இருப்பதும், பிழைப்புக்காக பிற தேசிய இன மக்கள் இன்னொரு தேசிய இனத்திற்குள் குடியேறுவது தவிர்க்க இயலாத ஒன்று. இதையும் வேற்று தேசிய இனத்தினை சேர்ந்த முதலாளிகள்( அவர்களுக்கு தேசியமே கிடையாது என்பது வேறு) தமிழ்நாட்டில் வந்து முதலீடு செய்து சுரண்டுவதையும் இணைத்து குழப்ப கூடாது.
தமிழ்நாட்டு தமிழர்கள் பிற மாநிலங்களில் குடியேறுவதும் நிகழ்கிறது
இதை எல்லாம் கணக்கில் கொண்டுதான் முழக்கங்கள் வைக்கப்பட வேண்டும்
சுரண்டுபவனுக்கும், சுரண்டப்படுபவனு க்கு ஒரே அளவு கோல் நிச்சயம் இருக்க முடியாது.
தமிழீழத்தில் தமிழ்த் தேசிய இனத்தைக் கறுவறுக்க முற்படும் சிங்கள அரசின் சதித்திட்டத்தைப ் போலவே, தமிழ்நாட்டில் தமிழ்த் தேசிய இனத்தைக் கறுவறுக்க வேண்டிய தேவை இந்திய அரசுக்கு இல்லை என சுற்றுவளைத்துக் கூறுகிறீர்கள்.
இந்திய அரசு, தமிழ்நாட்டில் பிற இனத்தாரைக் குடியமர்த்தி அழித்தால் அது பரவாயில்லை. ஆனால், தமிழீழத்தில் மட்டும் சிங்களக் குடியேற்றம் கூடாது.. என்னய்யா உங்கள் ஞாயம் ?
தமிழ்நாட்டில் வேற்று மாநிலத்தினர் குடியேற்றுவதற்க ு காரணம் தமிழ் முதலாளிகள் இல்லையா? இந்திய அரசு மட்டும்தான் காரணமா..?
இப்போது ஈழத்தில் இருக்கும் எஞ்சிய தமிழர்களும் கொஞ்சம் கொஞ்சமாக சிதைக்கப்படுகிற ார்கள். அங்கு வாழும் மக்களில் ஐம்பது சதவீதத்துக்கும் மேற்பட்டோர் ஊட்டச்சத்து குறைபாட்டினால் ஊசலாடிக்கொண்டு இருக்கிறார்கள். இளம்பெண்களுக்கு கட்டாய கருத்தடை செய்யப்படுகிறது . தமிழர்களின் நிலம் சிங்கள இராணுவத்தினரின் ஆதிக்கத்தில் உள்ளது. தமிழ் மக்களுக்கு போட்டியாக விவசாயம் போன்ற தொழில்களை செய்து குறைந்த விலைக்கு தமிழர்களுக்கே அவர்கள் விற்பனை செய்கிறார்கள். இதன் மூலம் தமிழர்களின் தொழில் வளர்ச்சி முடங்கியுள்ளது. சிங்கள குடியேற்றவாசிகள ுக்கு நிலம் பகிர்ந்து அளிக்கப்படுகிறத ு. வளர்ச்சி திட்டங்கள், சுற்றுலா வளையம், இராணுவ முகாம் என்ற பெயரில் தமிழர்களின் பாரம்பரிய தாயகம் தந்திரமாக ஆக்கிரமிக்கப்பட ுகிறது. திருகோணமலை, அம்பாறை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்கள் அடங்கிய ஈழத்தின் கிழக்கு மாகாணத்தை பற்றி இப்போது யாரும் மூச்சுவிடுவதில் லை. அங்கு நடக்கும் சிங்கள ஆக்கிரமிப்புக்க ு மறைமுகமாக அங்கீகாரமே கொடுக்கப்பட்டு விட்டது. வட மாகாணத்தையாவது விட்டுவையுங்கள் என்று தான் குய்யோமுறையோ என கூக்குரலிடுகிறா ர்கள். இன்று உலகத்துக்கு நாட்டாமை செய்யும் அமெரிக்கா என்னும் நாட்டுக்கு வெறும் முன்னூறு ஆண்டுகள் வரலாறே உண்டு. முன்னூறு ஆண்டுகளுக்கு முன்னர் அமெரிக்காவில் வெள்ளை இன மக்கள் இல்லை. இன்றைய உலகின் பெரும்பாலான நாடுகளின் வரலாற்றை நோக்கினால் அவை ஐந்நூறு ஆண்டுகளுக்கும் மிகாதவை. ஆனால் எண்ணூறு ஆண்டுகளுக்கு முன்பே யாழ்ப்பாண ராச்சியத்தை நிறுவி அரசாண்ட ஈழ மக்கள் இன்று சொந்த மண்ணிலேயே அந்நியர்களாகவும ் அடிமைகளாகவும் உழன்று அழியவேண்டிய நிலை!. தமிழ் மொழிக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேற்பட்ட இலக்கிய மரபு இருப்பதாக கூறுகிறார்கள். தமிழர்களுக்கு மிகப்பெரிய வரலாறு இருப்பதாகவும் சொல்கிறார்கள். இப்போது இருக்கும் கையறு நிலை வரலாற்றில் எப்போதாவது வந்ததா என தெரியவில்லை. தமிழர்களின் இந்த கையறு நிலை இந்தியா போட்ட பிச்சை. விடுதலைப்புலிகள ின் முப்பது ஆண்டுகால ஆயுதப்போராட்டத் தை பயங்கரவாதம் என உலகம் நம்புகிறது. ஆனால் சிங்கள இனவெறி அரசின் அறுபதாண்டுகால பயங்கரவாதத்தை அது பார்க்க மறுக்கிறது. இதற்கும் இந்தியா தான் காரணம். இந்த காமன்வெல்த் மாநாடு கொழும்பில் நடத்தப்படுவதற்க ு சிங்கள அரசை விட இந்திய அரசு தான் மிகுந்த முனைப்போடு முயற்சிகளை எடுத்து வந்தது. இந்தியாவின் சார்பில் கமலேஷ் சர்மா என்னும் அதிகாரி இதற்காக இரவு பகல் பாராமல் ஓடியாடி உழைத்து உலகளவில் ஆதரவு திரட்டி வந்தார். இந்த மாநாடு மூலம் இலங்கைக்கும் ராஜபக்சவுக்கும் உலகளவில் செல்வாக்கு ஏறும். இதன் மூலம் தமிழ் இனப்படுகொலையை உலகின் நினைவிலிருந்து அகற்றலாம். எழுப்பப்படும் குற்றச்சாட்டுக் களை முனை மழுங்க செய்யலாம் என்பது கணக்கு.
RSS feed for comments to this post