அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள இந்திய நாடாளுமன்றத் தேர்தலுக்கான தயாரிப்புப் பணிகளில் காங்கிரசு, பாரதியசனதா உள்ளிட்ட இந்தியத் தேசியக் கட்சிகள் முனைப்புடன் இறங்கி விட்டன. காங்கிரசுக் கட்சி தனது பட்டத்து இளவரசரான இராகுல்காந்தியை முன்னிறுத்தி தேர்தலை சந்திக்க முடிவு செய்துள்ள நிலையில், அவருக்கு எதிராக நரேந்திரமோடியை முன்னிறுத்தப் போவதாக பாரதியசனதாக் கட்சி அறிவித்துள்ளது.
குஜராத்தில், 2002ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் கோத்ரா தொடர்வண்டி எரிப்பு நிகழ்வைத் தொடர்ந்து இசுலாமியர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட மதவெறிப் படுகொலைகள், வரலாற்றில் ஆறாதவடுவை ஏற்படுத்திய கொடுஞ்செயலாகும். திட்டமிட்டு இசுலாமியர்களின் வீடுகளும், கடைகளும், பெண்கள், முதியவர்கள் என இசுலாமியர்களும் தாக்கப்பட்டு, அழித்தொழிக்கப்பட்ட கொடுஞ்செயலுக்கு முழுக்க முழுக்க ஆதரவாக இருந்தவர் அப்போதைய குஜராத்தின் முதல்வராக இருந்த நரேந்திரமோடி ஆவார்.
‘ஒவ்வொரு வினைக்கும் ஒரு எதிர்வினை உண்டு’ என இசுலாமியர்கள் தாக்கப்படுவதை ஞாயப்படுத்திப் பேசிய முதல்வர் நரேந்திரமோடி, இசுலாமியர்கள் படுகொலை செய்யப்படுவதைத் தடுக்க முனைந்த 500க்கும் மேற்பட்ட காவல்துறை அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து படு கொலைகளுக்குத் துணை நின்றார்.
அப்படுகொலையின் போது, ‘பாரத் மாதாக் கீ ஜே’ என்றும், ‘ஜெய் ஸ்ரீராம்’ என்றும் முழக்கமிட்டுக் கொண்டு, இசுலாமியப் பெண்களை வல்லுறவுக்குள்ளாக்கியும், படுகொலை செய்தும் கொன்ற ஆர்.எஸ்.எஸ். மதப்பயங்கரவாதிகள், இந்தியத் தேசியத்துடன் இணைந்ததே இந்துத்வா என்பதை குஜராத்தில் பிரகடனப்படுத்தினர்.
ஆரியப் பார்ப்பனிய ‘இந்துத்வா’ கொள்கையை முன்னிறுத்தி ஆட்சி நடத்துவதாகச் சொல்லிக் கொள்ளும் பாரதியசனதாக் கட்சியின் நரேந்திரமோடி ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற குஜராத் கலவர நிகழ்வு, நரேந்திரமோடியை உலகெங்கும் அறிமுகப்படுத்தியது. இந்த அறிமுகம், ஹிட்லருக்கும், இன்றைக்கு சிங்கள இனவெறியன் இராசபக்சேவுக்கும் கிடைக்கும் அதே அறிமுகத்திற்கு ஒப்பானதாகவே இருந்தது.
ஆனால், இதைத் தம் சாதனைகளுக்கு கிடைத்த வரவேற்பாகப் புரிந்து கொண்ட மோடி, தமது எதிர் கால அரசியல் நலனுக்காக அதைப் பயன்படுத்தத் தொடங்கினார். இன்று உலகமய முதலாளிய ஊடகங்கள் பலவும், ஆரியப் பார்ப்பனிய ஊடகங்களும் இந்தியாவின் எதிர்கால நம்பிக்கை நாயகனாக மோடியை முன்னிறுத்துகின்றன.
அப்படி மோடி என்ன தான் குஜராத்தில் சாதித்து விட்டார்? என்று ஆராய்ந்தால் ஏமாற்றமே மிஞ்சுகிறது.
இன்றைய உலகமயக் கால கட்டத்தில் முதலாளிய ஊடகங்களால் முன்னிறுத்தப்படுகின்ற, போலியான தொழில் வீக்கத்தையே அவை ‘வளர்ச்சி’ என முன்னிறுத்துகின்றன.
தற்போது அதே போன்று, குஜராத் மாநிலத்தை பன்னாட்டு நிறுவனங்களுக்கும், வடநாட்டுப் பெருமுதலாளிய நிறுவனங் களுக்குமான வேட்டைக்காடாக மாற்றி ‘சாதனை’ புரிந்ததுதான் நரேந்திர மோடியின் உண்மையான சாதனையாகும்.
யாருக்கும், எந்த சனநாயக உரிமையையும் வழங்காமல் தொழிலாளர் உரிமைகளைக் காலில் போடு மிதித்து சுடுகாட்டு அமைதியை மோடி நிலை நாட்டினார். இசுலாமியர் படுகொலையை அடுத்து அம்மோடி நிலைநாட்டினார். இசுலாமியர் படுகொலையை அடுத்து அம்மாநில மக்களிடம் பற்றிக் கொண்ட அச்ச உணர்வை தனது இந்த கெடுபிடிக் கொள்கைக்கு வாய்ப்பாக மோடி பயன் படுத்திக்கொண்டார். அம்மாநிலத்தின் ஆட்சி நிர்வாகம் முற்றிலும் ஒரு நபர் செயல்பாடாக, மோடியின் செயல்படாக மாற்றியமைக்கப்பட்டது.
உலகமய முதலாளிகளுக்கு இந்த மயான அமைதியும், அதன் மூலம் கிடைத்த குறை கூலித் தொழிலாளர் உழைப்பும் பிடித்திருந்தன.
மூலதன ஈர்ப்பு மையமாக குஜராத் வலுப்பெற்றது. அது மோடி வருவதற்கும் முன்பும் தொழில் வளர்ச்சியில் முதல் நிலை மாநிலம்தான் மோடியின் சனநாயக மறுப்பு, முதலாளிய தாராளமயத்திற்கு ஒத்து செயாக இருந்தது. வெளிமூலனத்தை ஈர்த்தது.
ஆயினும் அந்தப் போக்கு அதே வேகத்தில் தொடர முடியவில்லை.
கடந்த 2010-11ஆம் நிதியாண்டில், இந்தியாவின் அந்நிய நேரடி முதலீட்டில் 3.38 விழுக்காட்டைப் பெற்றிருந்த குஜராத் மாநிலம், 2011-12ஆம் ஆண்டில் 2.85 விழுக்காடாக குறைந்தது. தற்போதைய நிதியாண்டில் இது மேலும் குறைந்து, 2.35 விழுக்காடாக உள்ளது.
இதன்படி, அந்நிய நேரடி முதலீடுகளை ஈர்ப்பதில் குஜராத் மாநிலம், மூன்றாம் இடத்திலுள்ள தமிழ்நாட்டை விட பின் தங்கி 6ஆம் இடத்தில் இருக்கிறது. (காண்க: தி இந்து, 13.04.2013). இவ்வாறு குஜராத் இறங்கு நிலையில் உள்ளபோதுதான், குஜராத் அந்நிய முதலீடுகளை ஈர்க்கும் மையமாக உள்ளது என்ற வேடிக்கைப் பரப்புரையும் நடைபெற்றுக் கொண்டுள்ளது.
குஜராத்தின் போலியான ‘வளர்ச்சி’யைப் பற்றி பேசும் முதலாளிய ஊடகங்கள், உண்மையில் மிகப்பெரிதாக வளர்ந்துள்ள அம்மாநிலத்தின் கடன் தொகை பற்றி எவ்விதக் கருத்தும் வெளியிடுவதில்லை.
கடந்த 2001-2002ஆம் நிதியாண்டின் போது, குஜராத் மாநிலத்தின் மொத்தக் கடன் தொகை 45,301 கோடி ரூபாய் ஆகும். கடந்த 2011ஆம் ஆண்டு திசம்பர் 31 அன்று, இது இரு மடங்கிற்கும் மேலாக உயர்ந்து 1,18,299 கோடி ரூபாயாக உள்ளதென குஜராத் மாநில நிதியமைச்சர் வாஜூபாய் வாலா அறிவித்தார் (காண்க: 28.02.2012, தி டைம்ஸ் ஆப் இந்தியா),
கடந்த 2010ஆம் ஆண்டு முதல் குஜராத் மாநிலம் மின் உற்பத்தியில் தன்னிறைவு பெற்று விட்டதெனவும், எரிவாயு உள்ளிட்டத் தேவைகள் அனைத்தும் நிறைவு செய்யப்பட்டு விட்டதாகவும் தம்பட்டம் அடித்தார் மோடி. ஆனால் உண்மையென்ன?
2011ஆம் ஆண்டு வெளியான நடுவண் அரசு மக்கள் தொகைக் கணக்கெடுப்பு, குஜராத்தில் இன் றைக்கும் 11 இலட்சம் வீடுகளுக்கு மின்சார இணைப்பே கொடுக்கப்படவில்லை என்ற உண்மையை அம்பலப்படுத்தியது. அதில் 9 இலட்சம் குடும்பங்கள் மண்ணென்னையைக் கொண்டுதான் இன்றைக்கும் தங்கள் இல்லங்களில் விளக்கேற்றுகின்றனர் என்றும் அவர்களில் பெரும்பாலானர்கள் நகர்ப்புறத்தவர்கள் என்பதும் கண்கெடுப்பில் தெரியவந்தது. (காண்க: தி பினான்சியல் எக்ஸ்பிரஸ், 05.03.2012).
மோடி நிர்வாகத்திறன் மிக்கவர் என்றும் நிதி மேலாண்மையில் வல்லவர் என இந்தியாடுடே போன்ற முதலாளிய ஊடகங்கள் சொல்லிக் கொண்டிருந்த வேளையில், இந்தியத் தலைமைக் கணக்காளர்(CAG) குஜராத்தின் நிதி மேலாண்மை குறித்து ஆராய்ந்து, கடந்த மார்ச் மாதம் வெளியிட்ட அறிக்கையில், பொறுப்பற்றவகையில் நிதி மேலாண்மை இருப்பதாக சாடினார்.
கடந்த ஆண்டை விட, இவ்வாண்டு 41 விழுக்காடு கடன் தொகை அதிகரித்திருப்பதையும், அரசின் பல முதலீடுகள் நட்டத்தில் இருப்பதையும் அவ்வறிக்கையில் தலைமைக் கணக்காளர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், கல்வி மற்றும் சுகாதாரத்துறைகளுக்கு மற்ற மாநிலங்களை விட குஜராத் குறைந்தளவே நிதி ஒதுக்கி வருவதை கவலையுடன் குறிப்பிட்டுள்ளார். பலதுறைகளில், அத்துறைப் பணிக்காக ஒதுக்கப்பட்ட நிதி செலவிடப்படாமல் அப்படியே இருப்பதையும் அவர் அம்பலப்படுத்தினார். கணினிக் கல்விக்காக ஒதுக்கப்பட்ட 292 கோடி ரூபாயில் வெறும் 88.24 கோடி ரூபாயே செலவிடப்பட்டுள்ளதெனவும், சிறப்பு நீதிமன்றங்களுக்காக 629 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு அதில் வெறும் 252.45 கோடி ரூபாயே செலவிடப்பட்டுள்ளதெனவும் அவர் தெரிவித்தார். (காண்க: தி டைம்ஸ் ஆப் இந்தியா, 22.03.2013).
மகாராட்டிரத்தையடுத்து, ஊட்டச்சத்துக் குறைவாக உள்ள குழந்தைகள் இந்தியாவிலேயே குஜராத்தில்தான் அதிகம். 2008ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட தேசிய குடும்ப சுகாதார சர்வே, குஜராத்தின் 80 விழுக்காட்டுக் குழந்தைகளும், கருவுற்றப் பெண்கள் 61 விழுக்காட்டினரும் சோகை நோயால் (Anaemic) பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவித்தது. மக்களின் சுகாதாரத்திற்கு அதிக நிதி செலவிட்டு, இக்குறைபாடுகளை சரிசெய்ய முன்வராத மோடிஅரசு, அந்நிய முதலீடுகளை ஈர்ப்பதற்காக மட்டும் மாநகரங்களில் புதிய தொழிற்சாலைகள் கட்டுவதில் கவனம் செலுத்துகின்றது.
பாரதியசனதாக் கட்சி, மோடியை முன்னிறுத்திப் பணிகளை செய்ய திட்டமிட்ட நிலையில், அம்முடிவுக்கு பா.ச.க.விலேயே எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்ப்புத் தெரிவித்தவரும் சாதாரண மானவர் அல்ல, பா.ச.க.வின் மூத்த தலைவரான எல்.கே.அத்வானி.
குஜராத் கலவரத்தை முன்னிட்டு, பாரதியசனதாக் கட்சியில் மிதவாத இந்துத்வாவாதியாக கருதப்படும் வாஜ்பாயி, மோடிக்கு எதிராக நகர்வுகள் மேற் கொண்டபோது, அதைத் தடுத்து நிறுத்தி மோடியைக் காப்பாற்றியவர் எல்.கே.அத்வானி ஆவார். குஜராத்தில் யாரும் செய்ய முன்வராத அளவிற்கு இசுலாமியப் படுகொலைகளை நிகழ்த்திய காரணத்தால் ஏற்பட்ட ‘பாசம்’ அது! இப்போது, எல்.கே.அத்வானி, தன்னையே விஞ்சும் அளவிற்கு மோடி ‘வளர்ந்து’ விட்டதைப் பார்த்து வெளிப்படையாகவே வயிறெரிகிறார்.
மோடியை பாரதியசனதாக் கட்சியின் நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரைக் குழுவின் தலைவராக அறிவித்த அடுத்த நாளே தனது அனைத்துக் கட்சிப் பதவிகளையும் ராஜினமா செய்தார். பின்னர் ஆர்.எஸ்.எஸ். ஆணையை ஏற்று பதவி விலகலைத் திரும்பப் பெற்றார். பாரதியசனதாக் கட்சியின் பிரதமர் வேட்பாளராகத் தானே முன்னிறுத்தப்பட வேண்டும் என்ற எண்ணம் அத்வானிக்கு இருக்கிறது.
கட்டுப்பாடானக் கட்சி, ஒழுக்க சீலத் தலைவர் என்று தம் பட்டம் அடித்துக் கொள்ளும் பா.ச.க. பதவிச் சண்டையில் காங்கிரசை விடவும் நாறிக் கிடக்கிறது.
இந்தியத் தேசியம் பலவீனப்பட்டுள்ள இச்சூழலில், இந்துத்வ வெறியுடன் மேலெழ முயலும் பா.ச.க., இந்தியத் தேசிய வெறியை முன்னிறுத்தி பரப்புரை செய்யக் கூடும். அதற்கு பதிலடி கொடுப்பதாக நினைத்துக் கொண்டு, பா.ச.க.வைவிடதான் தான், தீவிர இந்துத்வ வெறியன் என அப்சல் குருவின் பிணத்தைக் காட்டி காங்கிரசுக் கட்சியும் வாதிடக் கூடும். இவ்விருக் கட்சிகளும் கட்டியெழுப்ப விரும்பும், இந்துத்வ இந்தியத் தேசியத்தின் ஊடாக, சனநாயகப் பறிப்புத் தேசிய இனங்களின் மீதான ஒடுக்கு முறையும் தீவரம் பெறும் ஆபத்து உள்ளது.
உலகமயத்திற்கு உவப்பானதும் அதுதான். இந்த ஒடுக்கு முறையிலிருந்து தற்காத்துக் கொள்ள தமிழ்நாட்டு மக்கள் தமிழ்த் தேசியத்தின்பால் அணி திரள வேண்டும்.
1)பாரதம்....மாத ா என்ன இது எல்லாம்?இஸ்லாமி யர்களால் உருவாக்கப்பட்ட கற்பனை புராணங்களின் மிச்ச சொச்சமா?ஆம் எனில் நான் நிறுத்தி கொள்கிறேன்.இல்ல ை ஹிந்துத்துவாவின ்"அகண்ட பாரத"கனவின் கற்பனையின் தொடர் என்றால் எழுதுகிறேன்!
திருடர்களாய்,கட ற்க் கொள்ளையனாய் ஆட்சி செய்த புஷ்கர்ன பிராமண வகுப்பை சேர்ந்த தஹிர் என்பவனின் ஆட்சியில் அடிமைகளாக வாழ்ந்த சூத்திரர்கள்,சம ணர்கள் இஸ்லாமிய கலீபாவிற்கு கடிதம் எழுதினார்கள்:எங ்களை காப்பாற்றுங்கள் .
ஆரியர்களால் அடிமைகளாக்கப்பட ்ட பூர்வீக குடிகளை காப்பாற்ற வந்தவர்கள் முஸ்லிம்கள்.முஹ ம்மது பின் காசிம் தலைமையில் தஹிர் தோற்க்கடிக்கப்ப ட்டு ஆட்சியை பெற்ற முஸ்லிம்கள் அடிமைகளை விடுவித்தார்கள் ;அவர்களுக்கு உணவு வழங்கும் பெரும் விருந்திற்கு ஏற்ப்பாடு செய்யப்பட்டது.ஆ னால பந்தியில் உந்தி பெருத்த பிராமணர்களின் ஆக்கிரமிப்பை பார்த்து,வந்த கடிதத்துக்கு எதிர்மறையாய் நிலை இருப்பதை அவதானித்து விட்டு விச்சரித்தார்.. ..விசாரனையில் இது சம்பிராதயம் சடங்கு என்றவுடன் நிலைமையின் விபரீதத்தை புரிந்த முஹம்மது பின் காசிம் பந்தியை ஆக்கிரமித்திருந ்த பிராமணர்களை அடித்து துரத்தி விட்டு விடுதலை பெற்ற பூர்வ குடிகளுக்கு விருந்தளித்தார் .
முஸ்லிம்கள்,ஆளு ம் எண்ணத்தில் சிந்துவை வெல்ல வந்தவர்கள் அல்ல;அடிமைகளாக வாழ்ந்த பூர்வ குடிகளை மீட்க வந்தவர்கள்;மீட் டார்கள்,மீண்டவர ்கள் இஸ்லாம் தழுவினார்கள்... முஸ்லிம் ஆனார்கள்.
இன்றும்,இனியும் ஜாதிய கொடுமைகளுக்குள் ளாகியுள்ளவர்களை ,பொருளாதார சுரண்டல்களுக்கு ஆளாகியோரை,அவமான த்தால் கூனி குறுகி நிற்ப்போரை,பெண் களை,குழந்தைகளை, வயதான முதியோரை காக்கும் ஒரே வலிமை ஆற்றல் முஸ்லிம்களுக்கு தான் உண்டு.படைத்த இறைவன் அதற்காக தான் முஸ்லிம்களை தேர்ந்தெடுத்துள ்ளான்.இந்த இலக்கை அடைவதற்கு முஸாஃபர் நகர்களோ,குஜராத் களோ தடையாகிட முடியாது.தடைகள் தாண்டி இஸ்லாம் வெல்லும்.இந்திய ா மீண்டும் நீதிமிக்க ஆட்சியின் கீழ் வரும்.
2)உலகின் திரும்பிய பக்கம் எல்லாம் கொடுமைகளுக்கு ஆளாகி நிற்கும் முஸ்லிம்கள் உலகை ஆளாப் போகிறார்கள் என்றால்...உலகை தொழுவோரால் ஏற்க முடியாது.
ஆனால்,உலகின் யதார்த்தம் போராளிகளின் இழப்பில் தான் புதிய உதயங்கள் நிகழ்ந்திருக்கி ன்றன.அந்த உதயம் இஸ்லாத்தின் முஸ்லிம்களின் இழப்பில் தான் நிகழும்.
1)கடவுள் பெயர் கூறி தட்சணை பெறும் பூசாரியும்,பள்ள ிவாயிலில் வாழ வழியில்லாத ஏழ்மையில் கையேந்துவோனும் ஒன்றா?பள்ளிவாயி லில் கையேந்தி நிற்கும் ஏழைகளில் பலர் ஹிந்துக்கள் எனப்படும் பாவப்பட்ட மக்கள்.ஏன் பள்ளிவாயிலை நாடுகிறீர்கள் என்ற கேள்விக்கும் அந்த ஏழைகளிடம் பதிலுண்டு...பெர ுமைக்கு கோயில் உண்டியலிலும்,கு ருக்கள் தட்டிலும் தட்சணையை தூக்கி எறிவோர் ஏழைகளாகிய எங்களை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை.எ ங்களின் ஜீவிதம் கழிவதே இந்த பள்ளிவாயில்களில ் தான்.இது சந்தருக்கு கோபத்தை தரலாம்..கொதிப்ப ை உண்டாக்கலாம்..ஆ யினும் உண்மை.
2)கோழையாக முஸ்லிம் வாழப் பழகாததால் தான் மதக் கலவரங்களில் ஹிந்து வெறிக் கும்பலோடு,காவல் துறையையும் தைரியமாய் எதிர் கொள்கிறான்.
குண்டு வைத்தவன் முஸ்லிம் என்ற பொய்யாய் ஊதிய பலூன் உடைந்து வருஷம் பலவாகி விட்டது.சம்ஜோத எக்ஸ்பிரஸ்,மக்க ா மஸ்ஜித் என 64 இடங்களில் ஒட்டு தாடியோடு குண்டு வைத்தது ஹிந்து வெறியர்கள் என்பது அம்பலமாகி அசிங்கப்பட்ட பின்பும் அரைத்த மாவை அரைப்பது அழகல்ல.
3)வாலிக்கும்,அட ுத்தவன் மனைவிக் கடத்தலுக்கும் என்ன சம்பந்தம்,சந்தர ்,இராமயணம் தெரியாதா?முதலில ் ராமயணத்தை இன்றிலிருந்து படிக்க தொடங்கு வாலியை கொன்ற கோழை குணம் பற்றிய தெளிவு கிடைக்கும்.
4)சாகப் பழகியவன் வாழ கற்று கொள்கிறான்;வாழ மட்டும் தெரிந்தவன் சாவைப் பார்த்து பயப்படுகிறான்,ச ாவும் அவனை விரைவில் அணைத்துக் கொள்கிறது.பெரும ்பாலான தற்கொலை செய்தோர் எல்லாம் வாழப் பழகியவர்கள்.சனா தானிகளுக்கு வாழ்வை தவிர்த்து வேறொன்றும் தெரியாது.
முஹம்மது(அல்லாஹ ீவின் அருளும் ஆசியும் என்றென்றும் அவர்கள் மீது பொழியட்டுமாக!)அ வர்களின் படை மனித குல அடிமை தளையை,அசிங்கத்த ை,அவமானத்தை ,அழிவை,அநீதியை அழித்து மனிதனை சுதந்திர மனிதனாய் வாழ வைக்கும் பேரருள்.வரலாறு சான்று கூறுகிறது.இட்டு க்கட்டப்பட்ட இதிகாசம் அல்ல முஹம்மது நபியின் வாழ்வும் வழியும்.
முஹம்மது நபியின் வாழ்வை படியுங்கள்;உங்க ளின் பல கேள்விகளுக்கு விடை கிடைக்கும்.பொய் யை எழுதாதீர்;பொய்ய ுக்கு மறுப்புரை எழுதாதின் காரணம் அக்கரை உள்ளவரானால் படியுங்கள்;அவதூ று கூறுவோருக்கு பதிலளித்து பயனில்லை.
நீங்கள் சொல்லும் சனாதான தர்மத்துக்கே வருவோமே ! ஒரு வாக்கு வாதத்திற்காக , அது தான் 'இந்து' மதம் என்று வைத்து கொண்டாலும், அந்த மதத்தின் வேத நூலுகளையும், உபனசிடகளையும் பற்றி உங்களுக்கோ , அல்லது மற்ற ஹிந்து சகோதரர்களுக்கோ என்ன அறிவு இருக்கிறது ? அதுடையே எண்ணிக்கை எத்தனை என்றாவது தெரியுமா ? வேதத்திற்கும், உபனசிடுகளுக்கும ் உள்ள வித்தியாசம் என்ன என்று தெரியுமா ? ஹிந்து மதத்தின் சட்டங்கள் தான் என்ன ?
வேதங்கள் போய் வெறும் புராண /இதிகாசங்கள் தான் உங்களின் மதம் ஆகி இருக்கிறது. ராமாயணம் மற்றும் மகாபாரதம் ஒரு புலவரின் படைப்பு என்று மறந்து அது வாழ்க்கை யின் கலங்கரை விளக்கமாக எப்பொழுது மாறியது ? அதையாவது ஹிந்து சகோதரர்கள் பின்பற்றுகிறார் கள் என்றால் அதுவும் இல்லை. பின்னு எங்கு இருக்கிறது மதம் ?
மன இஷ்டங்களை பின்பற்றி, கல்லை கடவுள் என்று அழைத்து, கடவுளை , தன்னுடையே விருப்பம் பூர்த்தி செய்யும் பூதமாக நடத்தி, சமூகத்தால் அங்கிகரிக்க பட்ட அனச்சரங்களில் திளைத்து வாழ்வதை , 'ஹிந்து' மதம் என்று நீங்கள் அழைத்தால் உண்மையில் நீங்கள் தாம் சனாதான தர்மத்துக்கும், ஹிந்து மதத்திற்கும் முதல் துரோகி.
நீங்கள் ஹிந்து மதத்தை தேடி கண்டு பிடித்து பின்பற்றுங்கள், நீங்கள் உண்மையாளர் எனின் ! அதுவே உங்களையே, உங்களுடையே இஸ்லாமிய விருப்பு போக்கை மாற்றி விடும்.
உண்மையில், கட்டு கோப்பாக சட்டங்களை பின்பற்றுவதுக்க ும் , மானாவறியாக வாழுவதுர்க்கும் உள்ள வித்தியாசம் தான் இஸ்லாத்தையை பின்பற்றுவதற்கு ம் , வேறு மதங்களில் நம்பிக்கை கொள்வதும்.
ஷா என்ற சொல் அரபியில்லை என அவிழ்த்து விட்ட பொய் ஊதி வீச்சம் எடுத்தவுடன் ஹரம்....அக்ரஹார ம் எனும் புது கரடி விடுகிறார் சாணக்கியர்.போது மய்யா உமது குல பிழைப்பு.புராண இதிகாசங்கள் கொண்டு மக்களை சீரழிக்க அவிழ்த்த பொய்யே மனித குலத்தை சாபமாய் தொடர்கிறது.இதில ் உண்மை வரலாற்றை திரிக்கும் அசிங்கமா?
1)முஹம்மது நபி(அல்லாஹி அவர்கள் மீது அருள் பாலிப்பானாக!)அவ ர்களின் குரைஷி குலத்திற்கும் இந்திய ஆரிய வமச வழி பிராமணர்களுக்கு ம் ஒரு சமபந்தமும் இல்லை.2)குரைஷிக ளில் சிலை வணங்கிகளாக இறந்த முஹம்மது நபி(ஸல்லல்லாஹீ அலைஹி வ ஸல்லம்)அவர்களின ் முன்னோர்கள் காபிர்களே!அவர்க ள் யாவரும் நரகின் எரி கொள்ளிகளே!அது போன்று உலகில் வாழ்வோர்,வாழ்ந் து மறைந்தோர் என யாராயினும் தன்னைப் படைத்த இறைவனை வணங்காமல் சிலையையோ,மனிதனை யோ,மிருகங்களையோ ,சூரியன் சந்திரனையோ,பறவை களையோ,கிரகணங்கள ையோ,செத்தவர்களை யோ இன்னும் இது போன்ற எண்ணற்ற வணக்கத்திற்குரி யதாக கருதப்படுபவைகளை யோ வணங்கினால,அந்நி லையிலே மரணித்தால் அவர்கள் யாவரும் காபிர்களே!அவர்க ள் யாவரும் நரகின் எரி கொள்ளிகளே!
அது போன்று இறைவன் வழங்கிய வாழ்வினை வழிகாட்டுதலை விட்டு விட்டு தன்னைப் போன்ற மனிதர்களால் உருவாக்கப்பட்ட புராணங்களை,இதிக ாசங்களை,மனுஸ்மி ருதிகளை,பிற இஸங்களை,சட்டங்க ளை பின் பற்றினால் அவர்களும் காபிர்களே!அவர்க ளும் நரகின் எரி கொள்ளிகளே!
ஆதலால் அரைத்த மாவை மீண்டும் அரைக்காமல் மேலுள்ள கருத்திற்கு ஏற்ப விவாதம் செய்வது எனில அல்லாஹிவின் அருளால் உதவியால் நான் தாயாராயுள்ளேன்.
RSS feed for comments to this post