நேர்காணல்
சரஸ்வதி (மலேசிய சோசலிசக் கட்சி - PSM)

பொதுவா உலகம் முழுவதும் சொல்லுவாங்க தமிழர்கள் உலகத்தை ஆண்டார்கள், வாணிபம் செய்தாங்க, கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தில எல்லாம் இருந்தாங்க என்று. ஆனால் இன்று உலகத்தில் எவ்வளவோ முன்னேற்றங்கள். மனிதர்கள் இடம்பெயர்ந்து வாழ்கிறாங்க. உதாரணமாக மலேசியத் தமிழர்களை 100 ஆண்டுகளுக்கு முன்பு தோட்டங்களில் வேலை செய்வதற்கு வெள்ளையர்கள் கப்பம் கட்டி சஞ்சிக் கப்பலில் கொண்டுவந்தாங்க. இது history. அதே மாதிரி ஆபிரிக்காவுக்கும் கொண்டு போனாங்க. இப்படி வரும்போது அவர்களது வாழ்க்கை அடிமைச் சங்கிலிகளினால் அமுக்கப்பட்டு 3 தலைமுறைகளாக அடிமைக் கூலிகளாகத்தான் வாழ்ந்தார்கள்.

மலேசியா 1957இல் டீசவைளைடமிருந்து விடுதலைபெற்ற பிறகும் கூட உள்நாட்டு முதலாளிகளால் தோட்டங்கள் வளர்க்கப்பட்டு தமிழர்களின் வாழ்க்கை அப்படியே தான் இருக்கின்றது. ஆனால் நான் தமிழர்களுக்காக மட்டும் இங்கு பேசவில்லை. சோசலிசக் கட்சயில் உலகத் தொழிலாளரின் வாழ்க்கைக்காகத்தான் நாங்கள் போராடுகிறோம். சோசலிச அமைப்பில் தான் மக்களின் வாழ்வு மீட்சிபெற முடியும் என்று நம்புகின்றேன்.

தொழிலாளர்களின் நிலையை உயர்த்துவதற்காக நீங்கள் என்ன வெலைத்திட்டங்கள் முன்னெடுத்துள்ளீர்கள்?

60களில் சம்பந்தன் என்ற ஒருவர் வலதுசாரி இயக்கத்தின் (ஆளும்கட்சி) மனிதவள அமைச்சராக இருந்து தோட்டங்களைத் துண்டாடினார். (ஒரு பெரிய கம்பெனிக்கு விற்றுவிடுவார்கள்). அப்போது அதில் உள்ள தொழிலாளி அந்தத் தோட்டத்திலிருந்து விரட்டி அடிக்கப்படுவார். மலேசியாவுக்கு இந்தத் தொழிலாளிகளைக் கொண்டுவரும்போது அவர்களுக்கு வீடு, பாடசாலை, கோவில், கள்ளுக்கடை போன்றவற்றை அமைத்துக் கொடுத்ததினால் அவங்க அங்கேயே மூழ்கிக்கெடப்பாங்க. 40, 50 வருசம் தோட்டங்களை பிரிட்டிஷ்காரர்கள் அதன் லாபங்களை அனுபவித்தபிறகு விற்றுவிட்டு வெளியேறும்போது, அதாவது தோட்டங்கள் துண்டாடப்படும்போது சம்பந்தர் என்ன செய்கிறார் என்றால் 10 பர்ச்சஸ் படி எழுதிக்கொடுங்க தோட்டத்தை வாங்குகிறோம் என்ற சொல்லித் தோட்டத்தை வாங்கினார். 30 தோட்டங்களுக்கு மேல் வாங்கி மறுபடியும் இந்த பிரிட்டிஷ்காரங்க எப்படி தோட்டங்களை அடிமைமுறையில் வைத்து இருந்தாங்களோ அந்த மாதிரித்தான் இந்தக் கூட்டுறவுத் தோட்டங்களையும் அமைச்சு வச்சிருக்கிறாங்க.

93ல் இருந்து தோட்டத்தொழிலாளிக்கு மாதச்சம்பளம் கிடைக்கணும் என்று பெரிய போராட்டம் நடத்தினோம். 2 வருடப் போராட்டம். கடைசியில் 2002 ல் தான் தொழிலாளிக்கு 325 வெள்ளி (7 வெள்ளி - 1ஸ்டேர்லிங் பவுண்) கிடைக்கிறது. மலேசியாவில் utter poverty உள்ளது. ஒரு தொழிலாளி 12 மணிநேரம் factory யில் வேலை செஞ்சாத்தான் 600 வெள்ளிகளைப் பெற முடியும். மலேசியாவில் factory தொழிலாளிங்க 23 மில்லியன் ஆக உள்ளனர். மக்கள் தொகையில் 60% மலாய்காரர்கள், முஸ்லீம்கள். 30% சீனர்கள். 8% தமிழர்கள், 2ம% மற்றைய இனத்தவர்கள். So இதில் 30% மலாய்காரர்கள் கடை, எம்போரியம், அந்தமாதிரி வச்சுக்கிட்டு வாழ்க்கை நடத்திறாங்க. மலாய்க்காரர்களில் 40%க்கு மேல் factory தொழிலாளிங்க. மலேசியா வந்து பிரிட்டிஷ் மாதிரியில்லை. நம்ப வந்து Industrialisation தொழில்மயத்தை நோக்கிப் போகிறோம். British வந்து re-industrialisation நோக்கிப் போறாங்க.

10 மில்லியன் Work Force தொழிலாளர்கள இருக்கிறாங்க. அதில் 8% Union ல் இருக்கிறாங்க. மிகுதி 92% யூனியனில் இல்லை. அவங்க இன்னும் organize பண்ணுப்படல. 1957களில் 67% தொழிலாளர்கள் Union ல் இருந்தாங்க. இப்ப 2005 ல் less than 8% தான் யூனியனில் இருக்கிறாங்க. இது ஏன் இவ்வளவு குறைஞ்சுதுன்னா, காரணம் மலேசியாவில் உள்ள Law. Union அமைக்க முடியாது. உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தைக் காரணம்காட்டி உங்களப்புடிச்சு 2, 3 வருசம் உள்ளபோட்டு Court-க்கே கொண்டு வரமாட்டாங்க. மறியல் போராட்டம் செய்தா கைதுபண்ணுவாங்க. அரசாங்கம் குடிசைப்பகுதிகள் உள்ள நிலங்களை உடைக்கவந்தா அதற்கு எதிராக நாங்கள் மக்களோட சேர்ந்து மறியல் போராட்டம் செய்தா கைது பண்ணுவாங்க. இந்தமாதிரி பல விசயத்துல நம்ப 7 முறை கைதுசெய்யப்பட்டு உள்ளுக்கு போய், பிறகு வெளியில வந்திருக்கோம்.

மலேசியத் தமிழர்கள் இந்த யூனியனில் பங்குபற்றும் வீதம் எப்படி இருக்கின்றது? National Average-ஐ விடக் குறைவா?

ரொம்பக் குறைவு. National Average 8% தான். நாம் வந்து தமிழர் என்று பார்க்கல. மலேசியத் தொழிலாளிங்க என்றுதான் பார்க்கிறோம். ஆனா 1930,47,50 களில் வந்து தமிழர்கள், சீனர்கள் நிறையப் போராட்டம் செஞ்சு இருக்கிறாங்க. 3 லட்சம் தொழிலாளர்கள் போராட்டம் செஞ்சு இருக்கிறாங்க. இந்தப் போராட்டம் அவங்களுக்கு வீடு கொடுக்கவில்லை என்று நடந்தது. தோட்டப்புறத்தில் குடிசைதான் வீடாக இருக்கும். ஆட்டுக்கொட்டகை மாதிரி வீடுகள். இதைவிட, இனரீதியில் நீ கீழ்ஜாதி, நான் மேல்ஜாதி என்பதற்கு எதிராக, அதை எல்லாம் ஒடச்சு வீரசேனன், கணபதி, பாலா, நாதன் போன்றவர்கள் பெரிய மறியல் போராட்டங்கள் செஞ்சு இருக்கிறாங்க. அதன்மூலம் தான் இப்ப இருக்கிற Labour சட்டங்கள் கிடைத்தன. ஞாயிற்றுக்கிழமை வேலைசெஞ்சா சம்பளம் குடுக்கணும். 8 மணிநேர வேலை. இதெல்லாம் 30, 40களில் நடந்த போராட்டங்களால்தான் இப்போது நாங்கள் அனுபவிக்கிறோம்.

ஆனா 69க்கு பிறகு உள்நாட்டு பாதுகாப்பு சட்டம் வந்தபிறகு எல்லா யூனியன் நடவடிக்கைகளும் படுமோசமா தோல்வி அடைஞ்சிருச்சு. இப்ப நாட்டில் ஏதாவது பெரிய மறியல் நடத்துவது கஷ்டம். 93இல் நம்ப சோஷலிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவங்க வந்து மாபெரும் மறியல் போராட்டம் செஞ்சோம். 3000 பேர் வந்து மக்களுக்கு அடிப்படை தேவைகளான தண்ணீர் வேணும், வீடு வேணும், என்று போராட்டம் செஞ்சிருக்கோம்.

மலேசியா தென்கிழக்காசியாவின் மைய Economy என்று சொல்லப்படுகின்றது. அங்கே மக்களின் வாழ்க்கைத்தரம் ஏற்றத்தாழ்வுகள் எப்படி இருக்கின்றன?

ரொம்ப மோசம். ஏன்னா 540 வெள்ளிக்கு குறைவாக சம்பளம் எடுத்தா ஏழை என்று அரசாங்கம் ஓர் குறியீடு வைச்சிருக்கு. ஆனா நம்மண்ணா 1000 வெள்ளிக்கு கீழ எடுத்தா ஏழை. அப்படி பார்க்கும்போது 10 மில்லியன் Work Force அந்தமாதிரி எடுக்கிறதால ரொம்ப ஏற்றத்தாழ்வு காணப்படுகிறது. விலைவாசி 200 மடங்கு ஏறிப்போயிருக்கு. இப்ப பார்க்கப்போனா Hospital வந்து Private ஆகப்போவுது. தண்ணி Private ஆகப்போகுது. தோல் Private ஆகிரிச்சு. 5 முறை இந்த வருசத்திலேயே பெற்றோல் விலை ஏறிடிச்சு. So இந்த நாட்டு வளர்ச்சியை ஒப்பிட்டுப் பார்க்கும்போது பாட்டாளி வர்க்கம் படுமோசமான நிலையில 1000 வெள்ளிக்கு கீழ எடுக்கிறாங்க. Bank ல கடன் வாங்கித்தான் அன்றாட வாழ்வை நடத்திறாங்க.

அங்கு அடிப்படைச் சம்பள நிர்ணயம் என்று ஒன்று உண்டா?

இல்லை. அப்படி ஒன்றும் இல்லை. அங்கு எல்லோருமே றப்பர் வேலை செய்யும் தொழிலாளர்கள். வறுமைக்கோட்டிற்குக் கீழ்தான் இருக்கிறார்கள். றப்பர் தோட்டங்கள் அழிஞ்சுக்கிட்டிருக்கு.

சாமிவேலு போன்ற அரசியல் தலைவர்கள் தானே அங்கு கூடுதலாக மலேசியத் தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள்?

ஆமாம். அவர்கள் இங்கு டோனி பிளையர் மாதிரி வலதுசாரிக் கட்சியைச் சேர்ந்தவர்கள். அவர்கள் தங்களது வசதியைத் தான் பார்ப்பார்கள். ஆனால் கவர்ண்மென்ட் என்ன சொல்லுதன்னா இவங்கதான் 8% இந்தியர்களுக்கு தலைவர்கள் என்று. ஆனால் அவங்க எல்லாம் அடிப்படைப் பிரச்சினையை தட்டிக்கேட்க தைரியம் இல்லாத தலைவர்கள். பேருக்குத்தான் தலைவர்கள்.

மலேசியப் பாராளுமன்ற முறையினூடாக அங்கு சோஷலிசத்தை நிறுவலாம் என்று நம்பகின்றீர்களா?

மார்க்ஸ் அன்றே சொல்லிட்டார். அன்று UBBC ல் யாருடைய தத்துவம் உலகத்துக்கு ஏற்புடையதாக இருக்கிறது என்று பார்க்கும்போது லண்டன் மக்கள் மார்க்ஸ் தான் மிகச்சிறந்த சிந்தனையாளர் என்கிறார்கள். உலகம் முழுவதும் எந்த சோஷலிச வர்க்கமும் பாட்டாளி வர்க்கம் ஓர் நியாயமான வாழ்க்கையை வாழனும் அப்படீன்னு நினைக்கிறவங்க கண்டிப்பா சோஷலிசத்தை ஏற்றுக்கொள்ளுறாங்க. நம்ப கட்சி எலெக்ஷனை ஓர் யுக்தியாகப் பயன்படுத்தி நம்ப கட்சியை விளம்பரப்படுத்த ஆட்களைப் பாராளுமன்றத்துக்கு அனுப்புகின்றோம். நாம் மக்களால் எழுகின்ற புரட்சிதான் நிரந்தரமாக இருக்கும் என்று நம்புகிறோம். ஆனா. அதை பாராளுமன்றம் மூலம் செய்ய முடிஞ்சா கண்டிப்பா அதை சாதிப்போம்!

முதலில் வந்த அரசாங்கம் உங்கள் பெரும்பாலான போராட்டங்களை ஒடுக்கி இருக்கின்றதென்று கூறினீர்கள்?

ஆமாம். அதற்கு ஒரு உதாரணம் நாலுபேர் கூடி இப்படி பேசிக்கொண்டிருக்கும்போது பொலிஸ் நினைத்தால் something wrong என்று நம்பள arrest பண்ண முடியும். அப்படி ஒரு பொலிஸ் சட்டமே இருக்கு. பயங்கரமான சட்டம். ஒரு மறியலும் செய்ய முடியாது. சட்டவிரோதம். நம்முடைய பேரணி பூரா சட்டவிரோத பேரணின்னுதான் வரும். Illegal Demonstration என்று தான் வரும். ஆனால் மக்கள் இதுதான் சரி என்று வீதிக்கு வரும்போது அரசாங்கம் யார். நம்பளை சட்டவிரோதம் என்று சொல்வதற்கு? இதுதான் எங்களுடைய stand. Very clear point. People want to do this, so we go ahead with them.

அண்மைக்காலமாக மலேசியாவில் வெளிநாட்டில் இருந்து குடிவந்த, குறிப்பாக இந்தோனேசியாவிலிருந்து வந்த தொழிலாளர்களை Illegal Immigrant என்று சொல்லி வெளியேற்றுகிறார்கள். இது சம்பந்தமாக உங்கள் நிலைப்பாடு என்ன?

Ult is very sad. எப்படி இந்தியர்கள் அல்லது சீனர்கள் அந்தக்காலத்தில் கொண்டுவரப்பட்டு அடிமைப்படுத்தப்பட்டாங்களோ அதைவிட மோசமா இருக்கு. Factory உள்ளுக்கே வீட்டைக் கட்டிக் கொடுத்து Very unhealthy condition. அவங்க agreement போடுறது ஒரு சம்பளம். பிறகு வந்து அதைவிட பாதியாய் குடுக்கிறது. நம்ப முடிந்தவரை Immigration Workers உடன் வேலைசெய்யப் பார்க்கிறோம். உலகத் தொழிலாளர் எங்க இருந்தாலும் நம்ப வந்து help பண்ணனும். அதுதான் நம்ம கோட்பாடு. ஆனா இப்ப நாடுவிட்டு நாடு வருவது Globalisation TEchnique. அதை நம்ப வெறுக்கிறோம். குடும்பம், பிள்ளைகள், எல்லோரையும் பிரிந்துவந்து கடைசியாக ஒன்றும் கொண்டுபோறதில்லை. அந்த நடுவருக்குத்தான் பணத்தை அள்ளிக் கொட்டிட்டுப் போறாங்க. நிறையப்பேர் நம்மகிட்ட வந்து அழுதிருக்காங்க. So இந்த Policy யை நான் வெறுக்கிறேன். ஆனா அந்த Workersஐ நான் வெறுக்கல்ல.

இலங்கைத் தமிழர்களுக்கும் மலேசியத் தமிழர்களுக்குமிடையே உள்ள பிரச்சினையைப்பற்றிச் சற்றுத் தெளிவுபடுத்துங்கள்.

முரண்பாடுகள். அப்படி ஒண்ணும் ரொம்ப ஓப்பனாக இல்ல. இலங்கைத் தமிழருக்கும் மலேசியத் தமிழர்களுக்குமிடையேயான வேறுபாடு ரொம்பப் பெரிய அளவில் இல்லை. ஆனா, இலங்கைத் தமிழருக்கு என்ன feelings ன்னா, Doctors, Lawers என்று பெரிய பெரிய அளவில் அவங்க வேலை செய்யிறதால மலேசியத் தமிழர்கள் வந்து அடிமைக் கூலிகள் என்ற எண்ணம் அவங்களுக்க உண்டு. அந்த இணைப்பு வந்து ரொம்ப வித்தியாசம். அப்புறம் சங்கங்கள். இலங்கைத் தமிழர்கள் மட்டுமல்ல, If I am not mistaken 68க்கும் மேற்பட்ட சங்கங்கள் இருக்குது. உதாரணமாக நாடார் சங்கம், இலங்கைத் தமிழர் சங்கம், மலையாளி சங்கம், தெலுங்கு சங்கம், செட்டியார் சங்கம், அப்படி இனச் சங்கங்கள், மலேசியாவில் 8% தமிழர்கள், only 8% of the total population of the Malaysian country. But they are divided.

இப்ப Indian Progressive Party வந்து சொல்லுவான் நாங்க பறையர்கள் என்று. Which is break away from MIC (Malaysian Indian Congress). It’s not doing anything. இந்தியாவில் இருந்து ஏன் ஒரு நல்லதைக் கொண்டுவரவில்லை. முன்னேற்றத்தை, புரட்சியைக் கொண்டுவரவில்லை. Why use the caste name? to oppress and make profit. தமிழர்களை போராட்டத்திலிருந்து பிரித்து அவர்களை ஒன்றுபடவிடாமல் ஆக்குவது இந்த caste naming. நீ பறையன் என்றால் பச்சை, கவுண்டன் என்றால் மஞ்சள், வெள்ளையன் என்றால் வெள்ளை. அந்த மாதிரிப் பிரிச்சு. 60% மலாயர்கள், 30% வீதம் சீனர்கள் இருக்கிற இடத்தில் 8% தமிழர்கள். இது இன்னும் வர வர 1% ஆகிவிடும். தமிழர்கள் மலேசியாவில் இருக்க மாட்டோம். இதுல உன்னோட சொந்த லாபத்துக்காகத்தான் ஜாதியை வச்சிருக்கு. It’s not for the working class. So we are totally against it.

மலேசியத் தமிழர்களின் எதிர்காலம் எங்கு நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறது?

இனவாரியாகப் பிரித்துப் பதில் சொல்வது ரொம்பக் கஷ்டம். ஏன்னா, மலாய்க்காரங்க சோஷியல்லி ரொம்ப டெரிபிள். அவங்கதான் மெஜாரிட்டி 60% முஸ்லிம் மலாய்க்காரங்களின் பிள்ளைகள் தான் Magority Drugs -ல் போவது அவங்கதான். Social Illness அவர்களிடம்தான் நிறைய இருக்கின்றது. நம்ப தமிழ் பிள்ளைகள் வாழ்விடம் எஸ்டேட்டை ஒட்டிய வீடாக இருந்தது. அவங்கள் தோட்டங்கள் துண்டாடப்படுகின்றது. தோட்டம் வந்து 5 storey building கட்டிறதுக்கு or Golf Course கட்டிறதுக்கு. இதில் 25,000 மலிவு விலையில் வீடுகள் கட்டலாம். அந்தமாதிரி தோட்டங்கள் விற்பனைக்குப் போகும்போது இந்தத் தொழிலாளி ஒன்றும் குடுக்கப்படாம மாற்றுவீடு கொடுக்காம விரட்டியடிக்கும்போது அவங்க பையன்கள் Town ல் போய் குடிசை கட்டிக்கொண்டு சொந்தமாக வாழ்றாங்க. So அங்க வந்து சில social problems இருக்கு. மலேசியாவில் என்ன பிரச்சினைன்னா, மலேசியர்கள் அவங்க இனத்துப் பிரச்சினையை அவங்க அவங்க Propaganda பண்ணுவாங்க. சீனர்கள் அவங்கட பணப்பலத்தைக் கட்டிக்காக்கணும் என்று அவங்க பிரபலப்படுத்துவாங்க. தமிழர்கள் வந்து சிறையில் சாகிறார்கள் என்பது பிரச்சினை. பிரச்சினை இருக்கு. But we voice for everybody.

மலேசியாவில் குறிப்பிடக்கூடிய அளவில் புரட்சிகர இலக்கியவாதிகள் இருக்கிறார்களா?

நம்முடைய அன்றாடத் தமிழ்ப் பத்திரிகைகளைப் பார்த்தால் தமிழ் நேசன், தமிழ் நண்பன். அதிலும் ஒருசில தமிழ் மலர்தான் தமிழ் நண்பனாக மாறியது. அதில் இனத்தைப் பற்றிக் கொஞ்சம் எழுதினதாலும் இஸ்லாம் இனத்தைப்பற்றி எழுதினதாலும் மூடிட்டாங்க. எங்களுடைய பிரிண்டிங் policy is very bad. அது மலாயோ, தமிழோ, சீனமோ, எதுவாயினும் கவர்ண்மெண்டைப்பற்றிக் கொஞ்சம் சென்சிட்டிவ்வாக அட்டாக் பண்ணி எழுதினால் அந்தச் செய்தியைப் புடுங்கிடுவாங்க. இதுக்கு பயந்துக்கிட்டு எல்லா பேப்பர்ஸ்சும் உதாரணம் நம்முடைய தமிழ்ப் பத்திரிகைகள் 4. 5 பக்கங்கள் இருக்கும். இதில் நடுப்பக்கத்து பேஜும் புல்லாக இந்தியன் ஸ்டோரி. தேவையில்லாத இந்தியன் கதை, இந்திய அரசியல், அது இது சினிமாக்கள். இவைதான் வரும். நம்ம போராட்டம் பற்றி எதுவும் வராது.

இலக்கியம் என்று சொல்லும்போது சாமிவேலு காலகட்டத்தில இருந்து அடிவருடியாத்தான் இருக்கு. 1960களில் எனக்குத் தெரிந்து கல்யாணப் பரிசாக ஏதாவதொரு பெரியார்களின் புத்தகமோ, படமோ இருக்கும். நிறைய நூல்நிலையங்கள் தோட்டங்களில் இருக்கும். நிறைய விவாதங்கள் நடக்கும். ஆனால் 1970-80க்குப் பிறகு நத்திங். முன்பு நிறைய சீர்திருத்தk குழுக்கள் இருந்தாங்க. பாரதி இலக்கிய மன்றம், நூலகம், இப்ப எல்லாம் அழிஞ்சிருச்சு. தமிழ் இலக்கியம் இப்போ மலேசியாவில் மானம்கெட்டுப் போச்சு. நாங்கள் அந்த இலக்கியத்தை விட்டு விலகி நிற்கின்றோம். நாங்கள் மக்கள் இலக்கியத்துக்கு ஆதரவு. ஆனால் இங்கு இவர்களின் இலக்கியம் வெறும் குப்பை.

மலேசியத் தமிழர்கள் ஆரம்பங்களில் தமது பிரச்சினைகளை இலக்கியங்கள் ஊடாக வெளிப்படுத்தியிருக்கிறார்கள். அதை ஏற்றுக்கொள்கிறீர்களா?

எந்த ஓர் அடக்குமுறையும் மனிதனின் சிந்தனையை அடக்கமுடியாது. அந்த ஸ்பீடை உருவாக்கவதற்கு இலக்கியங்களாலும், எழுத்தாலும் உதவி செய்யமுடியும்.

முதலாவது தமிழர்களின் புலம்பெயர்வு மலேசியாவில்தான் நடந்தது. அந்தப் பதிவுகள் முழுக்க மலேசியக் கிராமப்புற இலக்கியங்களிலும், தோட்டத் தொழிலாளர்களின் இலக்கியங்களிலும் தான் இருக்கின்றன. அந்தக்காலத்தில் ஆநனயை வளரவில்லை. மலேசியாவின் சுதந்திரத்தின் பிறகும் பத்திரிகைகள் சுதந்திரம் கட்டுப்படுத்தப்பட்டதால் அவர்களின் கஷ்டதுன்பங்கள் எல்லாம் இலக்கியங்கள் ஊடாகத்தான் வெளிவந்துள்ளன.

இல்லை. அந்த இலக்கியம் எப்ப வந்தது. 1957இல் இருந்தது. இப்ப இல்லை. தற்கால மலேசிய புரட்சிகர இலக்கியவாதியென்று யாரையாவது உங்களால் கூறமுடியாது. மலேசியத் தமிழ் அரசியலில் மலேசிய இந்திய காங்கிரஸ், மலேசிய மணிமன்றம், மலேசிய இந்து சங்கம் எல்லாம் அரசியல் கட்டுக்கோப்புக்குள் அடங்கிவிட்டது. இப்ப இவை எல்லாம் வலதுசாரி அரசின் வாயாகத்தான் (ஊதுகுழல்) இருக்கின்றன.

மலேசியாவிலுள்ள Illegal Immigrant இன் பங்களிப்பு (2 லட்சம்) மலேசியாவின் பொருளாதாரத்தில் உள்ளது. அவர்களைத் திருப்பி அனுப்பினால் மலேசியாவின் பொருளாதாரம் பாதிக்கப்படாதா?

இல்லை. ஏனென்றால், அவ்வளவு ஆட்பலம் மலேசியாவிலேயே உள்ளது. அதற்காக அவர்களைத் திருப்பி அனுப்பவேண்டும் என்று கூறவில்லை. அந்த Immigrant Workers சுரண்டப்பட்டு மிகவும் அடிமைத்தனமாக நடத்தப்படுகிறார்கள். இதற்கு எதிராகத்தான் நாங்கள் கதைக்கின்றோமே தவிர வேறு இல்லை. அவர்கள் காலை 7 மணிமுதல் இரவு 12 மணிவரை வேலை செய்கிறார்கள். ஞாயிறு விடுமுறை இல்லை. வேலை. இது explotation. இதனை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது. நாங்களும் வேலைசெய்கிறோம். அவர்களும் Human beings.

அவர்களுக்கு என்ன தீர்வு என்று நினைக்கிறீர்கள்?

சட்டப்படி அவர்களுக்குரிய உரிமைகளை வழங்கவேண்டும். எங்களுக்கு இன்றுவரை minimum wages கிடையாது. இதற்காகப் பெரிய போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அடுத்தவருடம் 10000 பேர் பார்லிமென்ட் போய் இதற்காகப் Protest பண்ணப்போகின்றோம்.

நீங்கள் கூறுவதில் ஒரு முரண்பாடு தெரிகின்றது. வெளிநாட்டுத் தொழிலாளர்கள் செய்யும் வேலைகளுக்கு மலேசியத் தொழிலாளர்கள் காத்திருக்கின்றனர் என்று. ஆனால் அதே வேளை இந்த வெளிநாட்டுத் தொழிலாளர்களை இங்கு தொழில்புரிய அனுமதிக்கவேண்டும் என்றும் சொல்கிறீர்கள்.

இதைச் சற்றுத் தெளிவாக நோக்கவேண்டும். முதலாளிகள் எப்படி இதை மனேஜ் பண்ணுகிறார்கள் என்றால், ஆயிரக்கணக்கில் வெளிநாட்டுத் தொழிலாளர்களை வேலைக்கு வைத்திருப்பது உள்நாட்டுத் தொழிலாளர்களுக்கும் பாதிப்பு. அதேவேளை வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கும் பாதிப்பு. உள்நாட்டுத் தொழிலாளி வேலையில்லாமல் இருக்கின்றான். வெளிநாட்டுத் தொழிலாளி அடிமட்டச் சம்பளத்திற்கு வேலை செய்கிறான். நாம் என்ன சொல்ல வருகிறோம் என்றால், உள்நாட்டுத் தொழிலாளிக்கும் வேலை வழங்கப்படவேண்டும். அதே வேளை வெளிநாட்டுத் தொழிலாளிக்கும் சரியான உரிமை வழங்கப்படவேண்டும். எந்த ஒரு தொழிலாளியையும் புறக்கணிக்கக்கூடாது. அவர்களுக்குரிய அனைத்து உரிமைகளும் வழங்கப்படவேண்டும். நாம் தொழிலாளர்களைப் பிரிக்கும் இந்த முதலாளித்துவச் சூழ்ச்சிக்கு உடன்படுவதில்லை.

இலங்கையில் நடக்கும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தைப் பற்றி உங்கள் நிலைப்பாடு என்ன?

உலகத்தில் எங்கே தேசியப் போராட்டம் நடக்கின்றதோ «¾üÌ நாம் தடையில்லை. எல்லோருக்கும் அவர்களது சுயநிர்ணய உரிமை முக்கியம்.But Sri lanka ல் நடக்கும் போராட்டத்தில் அவர்களின் இராணுவரீதியான போராட்டம் - அவர்கள் முன்வைக்கும் கோரிக்கை எமக்கு கேள்விக்குறியாக இருக்கின்றது. தமிழ்நாடு (தமிழீழம்) கேட்கும் கோரிக்கையில் எல்லா மக்களுக்கும் விடுதலை கிடைக்கக்கூடிய சமதர்மப் போராட்டத்தை முன்வைச்சாங்கண்ணா எமது கட்சி உலகநிலையில் இருந்து அதை ஆதரிப்போம். விடுதலைப் புலிகள் அந்த நிலையை வைக்காததால் நாம் அதை ஆதரிக்கமுடியாது. அதேநேரம் இதனை முழுமையாக நிராகரிக்கவும் முடியாது. ஏனென்றால் மக்கள் இதில் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள்.

மக்களின் சுயநிர்ணய உரிமை இதில் சம்பந்தப்பட்டுள்ளது. விடுதலைப்புலிகள் மட்டும் தான் தமிழ் மக்களின் தனிப்பிரதிநிதி என்பதை நான் ஏற்றுக்கொள்ளவில்லை. இதேவேளை விடுதலைப்புலிகள் ஓர் போராட்டத்தை நடத்திக்கொண்டிருக்கும்போது அவர்களுடன் ஓர் உரையாடலை மேற்கொள்வதையும் தவிர்க்கமுடியாது. அதேநேரம் அவர்களின் கோரிக்கைகள் சிலவற்றை நாம் critise பண்ணுகின்றோம். முற்றுமுழுதாகப் புலிகளை நிராகரிக்கிறோம் என்று கூறுவது சர்வதேசரீதியில் மிகவும் தவறான வார்த்தை. ஏனென்றால் புலிகளை முழுதாக நிராகரித்தால் அது தமிழிமக்களை முழுதாக நிராகரிப்பது போல் ஆகிவிடும். நாம் கூறுவதைப்போல எல்லாருக்கும் சமவுடைமை போராட்டத்தை முன்வைத்தால் நாங்கள் 100 வீதம் ஆதரவு வழங்குவோம்.

நீங்கள் இங்கு வந்த நோக்கம் பற்றிக் கூறமுடியுமா?

இங்கு சோசலிச அடிப்படையில் மார்க்சிசம் என்ற கருத்தரங்கிற்குத்தான் நான் வந்தேன். அப்புறம் மற்றைய சோசலிச, மார்க்சிச நண்பர்களைச் சந்தித்து உரையாடுவதற்கும் இது நல்ல வாய்ப்பு. அத்துடன் மற்றைய ஆசிய நாடுகளுடன் இங்குள்ள சோசலிச முறையை ஒப்பிட்டுப் பார்க்கும்போது ஐரோப்பிய நாடுகளில் சோசலிச சித்தாந்தம் ஒர் தெளிவான பாதையை நோக்கிப் போய்க்கொண்டிருப்பதைப் பார்க்கும்போது ரொம்ப சந்தோசமாக இருக்கிறது. ஒரு மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய பலம்வாய்ந்த அமைப்புமுறை ஐரோப்பிய நாடுகளில் உருவாகிக் கொண்டிருக்கிறது. இந்த வரலாற்றுபூர்வ நம்பிக்கையைக் கொண்டுதான் நான் மலேசியாவுக்குச் சென்று அங்குள்ள மக்களை பலப்படுத்துவதற்கு இந்த அனுபவம் உதவும் என்று நான் நினைக்கிறேன். இது அனுபவபூர்வ நம்பிக்கை. சர்வதேச நிலையில் சோசலிச சமுதாயம் உருவாகுவதற்கும் அகில உலகப் போராட்டத்தை நாம் பலப்படுத்துவோம் என்னும் நம்பிக்கை உண்டு.

Pin It