ஆற முடியாமல் அலைகிறது
பொங்கும் மனத்தின் கோபம்
சுவாசப் பைகளை நிரப்பும் காற்று
புயலெனச் சீறி பெருமூச்சாகிறது
தொலைந்து போன வாழ்வுகளை அபகரித்து
குப்பையில் கொட்டும் கொடும் வியாதி உங்களுடையது
தளிர்களின் கைகளில் சூலத்தைத் திணிக்கும்
எண்ணக்குழிகள் படுபாதாளமானவை
படிப்பதற்குப் பயன்படுத்த வேண்டிய அக்கைகளை
இடிப்பதற்குத் தயாராக்கும் இதயமற்றவர் நீங்கள்
ஒளியின் ஊற்றான கண்களை
இருளுக்கு இடமாக்குகின்ற அழுகல் அறிவு உங்களுடையது
நிழலை எரித்து குளிர் காயும்
மடத்தனம் நிறைந்தது உங்கள் வாழ்வு
குழந்தைகளின் மெல்லிறகு மூளைகளில்
மதக்கனத்தை தூக்கிப் போடும் உங்களை
ஒப்பிட விலங்குகள் ஏதும்
உலகில் இல்லை என்பதால்
சுரக்கும் எச்சிலை துப்பிட பயன்படுத்துகிறோம்.
கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- பா.ஜ.கவின் வீழ்ச்சியை வழிமொழியும் வட இந்தியா!
- பாலாற்று நீரில் தமிழ்நாட்டின் உரிமையைத் தடுப்போம்!
- பத்தாண்டுகளுக்குப் பின் பேரா. சாய்பாபா விடுதலை
- இன்னும் இரண்டரை மில்லியன் பூஞ்சைகள்
- 39 இனி 31 என்றாவதா?
- வாடிய மாலைகளிலும் வாசம் கமழ்த்தும் பூக்கள்
- தொடரட்டும்...!
- எளியவனின் நீதி
- இந்திய சட்டசபை
- கருஞ்சட்டைத் தமிழர் ஏப்ரல் 20, 2024 இதழ் மின்னூல் வடிவில்...
- விவரங்கள்
- யாழன் ஆதி
- பிரிவு: தலித் முரசு - ஜூன் 2009