காலம் தொலைத்த வாழ்வின்
இருப்புகள்
கைகளில் ஊன்றுகோல்களாயின
சுருங்கிய தோலும்
நரைத்த முடியும்
வற்றிய உடலும்
நாட்கள் நகர்த்திய காய்கள்
அனுபவத்தின் நதிகள்
வற்றிக் கிடக்க
மீந்திருக்கும் கட்டங்களை
நிரப்பி முடிக்க
எத்தனிக்கும் மனதின் அலைகள்
திறக்கப்படாத கதவுகளும்
மறுக்கப்பட்ட வழிகளும்
நெடுகிலும் நிறைந்திருக்க
பள்ளங்களையும் மேடுகளையும்
பார்வையால் தடவி
தத்திதத்தி
நடக்கின்றன கால்கள்
அறிவிக்கப்படாத முடிவுகளுக்காய்
கண்கள் முளைத்த கோல்களை
செலுத்தி தட்டுகிறது முதுமை
ஆசைகள் தூர்ந்துபோன வாழ்வில்
பாம்பு கடிபட்ட
தாயத்தைப் போல
மீண்டும்
கீழிருந்தே ஆரம்பமாகிறது
ஆட்டம்
கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- கடவுள், மதம் ஒழிந்தால்தான் ஜாதி ஒழியும்!
- சாதித்தார் ஸ்டாலின்! இது சொல்லாட்சியல்ல, செயலாட்சி!
- முனீஸ்வரன்
- அன்னை நாகம்மையார்: பெரியாரின் மனைமாட்சி
- ரிசல்ட் வரும் நாள்
- நதியைக் கொன்றவர்கள்
- நமது தலைவர் ஈ.வெ.ராவும் சென்னை பார்ப்பனரல்லாதார் மகாநாடும்
- கருஞ்சட்டைத் தமிழர் மே 11, 2024 இதழ் மின்னூல் வடிவில்...
- மக்களை நோக்கி அறிவியல் எனும் ஓர் அறிவியக்கம் உருவாக்கப்பட வேண்டும்
- டிராக்டர்கள் மீண்டும் டெல்லி வந்துள்ளன