periyarr 350பழையதை மாற்றக் கூடாது என்பதும், பழையவைகள் எல்லாம் தெய்வாம்சத்தால் ஏற்பட்டவை என்பதும் - பழைய செய்கைகளோ, பழைய தத்துவங்களோ, பழைய மாதிரிகளோ, பழைய உபதேசங்களோ முக் காலத்துக்கும், முடிவு காலம் வரைக்கும் இருப்பதற்கும், பின்பற்றுவதற்கும் தகுதியான தீர்க்கதரிசனத்துடன் தெய்வீகத் தன்மையில் ஏற்பட்டவை என்று சொல்லப்படுமானால் - அவைகளை மத வெறியர்களுக்கும், பழைமையில் பிழைக்கக் காத்து கொண்டிருக்கும் சோம்பேறிச் சுயநலக் கூட்டங்களுக்கும் விட்டு விட வேண்டுமே ஒழிய, அவற்றைப் பொதுஜன - சாதாரண நித்திய வாழ்க்கையில் கடைபிடிக்கிறவர்கள் யாராய் இருந்தாலும் அவர்கள் மிக மிகக் கஷ்டமும் தொல்லையும் அனுபவிக்க வேண்டிவரும் என்பதில் மறுப்புக்கு இடம் இருக்காது.    

- ‘விடுதலை’ 03.03.1948

Pin It