சாதி எதிர்ப்பு - பார்ப்பன எதிர்ப்பு - இந்து மத எதிர்ப்புகளை புறந்தள்ளி விட்டு, மொழி அடிப்படையில் முன் வைக்கப்படும் தமிழ் தேசிய முழக்கத்தில் பா.ஜ.க.வினரும் பங்கேற்க தயாராகவே இருக்கிறார்கள் என்பதை அண்மையில் வந்துள்ள செய்திகள் உறுதி செய்கின்றன. தமிழக பா.ஜ.க. மதுரையில் ஏப்ரல் மாதத்தில் ‘தாமரை சங்கமம்’ என்ற பெயரில் மாநாடு நடத்தவிருக்கிறது. இது குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்த பா.ஜ.க. தலைவர் பொன். இராதா கிருட்டிணன், “மாநாட்டுக்கு அழைப்பு விடுக்கும் வகையில் 2 தமிழ்த் தாய் சிலைகளின் பவனி 8 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை அனைத்து மாவட்டங்களிலும் நடைபெறும் (‘தினத்தந்தி’ 6.4.2012) என்று கூறியுள்ளார்.

மதுரை மாவட்ட பா.ஜ.க. தலைவர் ராஜரத்தினம் அளித்துள்ள பேட்டி ஒன்றில், “கன்யாகுமரியிலிருந்து தமிழன்னை சிலை மதுரைக்கு ஊர்வலமாக எடுத்து வரப்படவிருக்கிறது. தமிழர்களின் பிரச்சனைகளைத் தீர்க்க பா.ஜ.க.வால் தான் முடியும் என்பதோடு, தமிழ் உணர்வு கலந்த தேசியமே தமிழக பா.ஜ.க.வின் பார்வை என்பதைத் தெளிவுபடுத்தவே இந்த ஏற்பாடு” என்று கூறியுள்ளார். (‘குமுதம் ரிப்போர்ட்டர்’ 8.4.2012)

இத்தகைய ‘ஊடுருவல்’ ஆபத்துகள் நேர்ந்து விடக் கூடாதே என்ற காரணத்தால்தான் பெரியார் ‘திராவிடர்’ என்ற பெயரைத் தேர்வு செய்து, தமிழின விடுதலையை முன்னெடுத்தார். ‘தமிழ்த் தாய்’ இந்துத்துவ பார்ப்பன சக்திகளுக்கும் தமிழ் தேசிய சக்திகளுக்கும் ‘தாயாகி’விட்டபோது, அவரது புதல்வர்கள் சகோதரப் பாசத்துடன் குடும்பம் நடத்திவிடக் கூடாது என்பதே நமது கவலை.

பால்ய விவாகங்கள்

குழந்தைப் பருவத்திலேயே திருமணம் செய்து விட வேண்டும் என்ற பார்ப்பனியக் கொடுமைக்கு எதிராக பிரிட்டிஷ் இந்தியாவில் தடைச் சட்டம் வந்தபோது அதை எதிர்த்து கூக்குரலிட்டவர்கள் பார்ப்பனர்கள். பெரியாரின்  ‘குடிஅரசு’ பார்ப் பனர்கள் ஓலங்களுக்கு பதிலடி தந்தும், சட்டத்தை ஆதரித்தும் உறுதியாக கட்டுரைகளை எழுதியது. ‘சுதந்திர’ இந்தியாவில் பெண்களின் திருமண வயது 18 ஆகவும், ஆண்களின் திருமண வயது 21 ஆகவும் உயர்த்தப்பட்டாலும், சட்டங்களை புறந்தள்ளி ‘பார்ப்பனிய’ பால்ய விவாகங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்து பார்ப்பனியம் சமூகத்தில் செல்வாக்குடன் தொடருவதையே இது வெளிப்படுத்துகிறது. இது தொடர்பாக அரசு வெளியிட்ட புள்ளி விவரங்களை ‘டைம்° ஆப் இந்தியா’ ‘(ஏப்.5) வெளியிட்டுள்ளது.

2010 ஆம் ஆண்டில் 18 வயக்கு முன்பே நடக்கும் சட்ட விரோத ‘பால்ய விவாகங்களில்’ ஜார்கண்ட் முதலிடத்தையும் (13 சதவீதம்), ராஜ°தான் இரண்டாவது இடத்தையும் (10.1 சதவீதம்) பிடித்துள்ளது. இவையெல்லாம் இந்து பழமைவாதத்தில் ஊறிப் போன மாநிலங்கள். ஆனால், தொடர்ந்து 30 ஆண்டுகளுக்கு மேல் இடதுசாரிகளான மார்க்சி°ட் கம்யூனி°ட்டு கட்சி ஆட்சி செய்த மேற்கு வங்க மாநிலம், இந்த பார்ப்பனியப் பிற்போக்குத்தனத்தில் மூன்றாவது இடத்தைப் பிடித்திருப்பதுதான் (8.2) அதிசயம். பீகாரும் (7.2 சதவீதம்), ஒடிசாவும் (6.3 சதவீதம்) கூட மேற்கு வங்கத்துக்குப் பின்னால் தான் வருகின்றன. டெல்லியில்தான் மிகக் குறைந்த அளவில் ‘பால்ய விவாகங்கள்’ நடக்கின்றன (0.5 சதவீதம்) தமிழ்நாடு, அய்ந்தாவது இடத்தில் இருக்கிறது (1.8. சதவீதம்).

‘யுனிசெப்’ நிறுவனம், உலக குழந்தைகள் தொடர்பாக வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் உலகில் நடக்கும் குழந்தைகள் திருமணங்களில் 40 சதவீதத்துக்கும் அதிகமாக இந்தியாவில்தான் நடக்கின்றன என்று கூறுகிறது. 2001-2010 ஆம் ஆண்டுகளுக்குள் ‘பால்ய விவாகங்கள்’ இந்தியாவில் 6.1 சதவீத அளவுக்கு குறைந்துள்ளன என்றும், அந்த புள்ளி விவரம் கூறுகிறது.  குஜராத், இமாசலப் பிரதேசம், உ.பி., மகாராஷ்டிரா, ஒடிசா மாநிலங் களில் கடந்த 10 ஆண்டுகளில் பால்ய விவாகங்கள் குறையாது, பின் தங்கிய நிலையிலேயே இருப்பதை புள்ளி விவரம் சுட்டிக் காட்டுகிறது. இம்மாநிலங் களில் ‘திராவிடகட்சிகள்’ ஆட்சி எதுவும் நடக்க வில்லை என்பதையும் சுட்டிக்காட்ட வேண்டியிருக் கிறது. பெண்கள் கட்டாயத் திருமணத்தில் காலமெல்லாம் அவதிப்படாமல், மணவிலக்கு பெற்றுக் கொள்ளலாம் என்று பெண்களுக்கு சட்டம் வழங்கியுள்ள உரிமைகளை அதிக அளவில் பயன்படுததிய மாநிலம் தமிழ்நாடு. 2010 ஆம் ஆண்டில் இந்தியாவிலேயே விவகாரத்துகள் அதிகம் பெற்ற மாநிலம் தமிழ்நாடு (8.8. சதவீதம்). கருநாடகம் இரண்டாவது இடத்தில் (8.2 சதவீதம்) உள்ளது. ‘விவாகரத்து’ பெறுவது ஒன்றும் சமூக அவலமல்ல என்ற சிந்தனை தமிழ்நாட்டில் மேலோங்கி நிற்பது குறிப்பிடத்தக்கதாகும்.

கோயில் சொத்துகளை ஏப்பமிடும் பார்ப்பனர்கள்

கோயில் நிர்வாகத்தை அரசு கட்டுப்பாட்டி லிருந்து நீக்கி, தனி வாரியத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்று ராமகோபாலன் ‘பிராமண சங்கம்’ இந்து முன்னணி போன்ற பார்ப்பன பார்ப்பனிய அமைப்புகள் கூப்பாடு போடுகின்றன. கோயில் சொத்துகளை சுருட்டுவதில் பார்ப்பனாகளே முன்னணியில் இருக்கிறார்கள் என்ற உண்மை அம்பலத்துக்கு வந்துள்ளது. மயிலாப்பூர் கபாலீசுவரன் கோயில் நிர்வாக அதிகாரி பரஞ்சோதி, கோயில் சொத்துகளை ஆக்கிரமித்துள்ளவர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளார். 473 பேரில், இரண்டு பேர் மட்டுமே மு°லீம்கள், இந்துக்களில் ஒரு சில பார்ப்பனரல்லாதார் தவிர, பெரும்பான்மையினர், அய்யர், அய்யங்கார்கள்தான். கே.எம்.முன்ஷி ராஜ கோபாலாச்சாரி பார்ப்பனர்களால் தொடங்கப் பட்ட பாரதிய வித்யாபவன், ‘காபாலீசுவரனுக்கு’ 35 லட்சம் ரூபாய் வாடகை தரவில்லை.

1903 ஆம் ஆண்டு பார்ப்பனர்கள் தொடங்கிய மயிலாப்பூர் கிளப் ‘கபாலீசுவரனுக்கு’ தரவேண்டிய வாடகை பாக்கி 3.57 கோடி, ‘புதிய ஜனநாயகம்’ பத்திரிகை  இதை விரிவாக அம்பலப்படுத்தியுள்ளது. தில்லை நடராசன் கோயில் நிர்வாகத்தைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்த தீட்சப் பார்ப்பனர் கோயில் சொத்துகளை நகைகளைத் திருடியதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டதால், சென்னை உயர்நீதிமன்றம், தில்லை நடராசன் கோயிலை அறநிலையத் துறையிடம் ஒப்படைத்து உத்தரவிட்டது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றம் சென்றுள்ள தீட்சதர்கள், தங்களில் ஒருவர்தான் ‘நடராசப் பெருமான்’ என்றும், எனவே கோயிலும், அதன் சொத்துகளும் தங்களின் ஆன்மிக உரிமை என்று வழக்குப் போட்டிருக்கிறார்கள்.

பெரு முதலாளிகளுக்கு...

நாடாளுமன்றத்தில் பிரணாப் முகர்ஜி தாக்கல் செய்த நிதி நிலை அறிக்கையில் பெரு முதலாளிகள் மீதான கம்பெனி வரி மற்றும் நேர் முகவரிகளில் ரூ.4500 கோடி வரை சலுகை அளிக்கப்பட்டுள்ளது. இதை ஈடு கட்டுவதற்காக எக்சை° வரி, சேவை வரி ஆகியவை 10-லிருந்து 12 சதவீதமாக உயர்த்தப்பட் டுள்ளன. இதனால் 73 ஆயிரம் கோடி கூடுதல் வருமானம் கிடைக்கும். பெரும் முதலாளிகளிட மிருந்து சட்டபூர்வமாக விதிக்கப்பட்ட வரிகளையே வசூலிக்காமல் விட்டது 65,29,000 கோடி. இதில் கார்ப்பரேட் நிறுவனங்களிடமிருந்து வசூலிக்காமல் விட்டது 50,000 கோடி. நாட்டின் நிதிப் பற்றாக் குறையின் அளவே ரூ.5,21,000 கோடிதான். விதிக்கப் பட்டிருந்த வரிகளை கண்டிப்பாக வசூலித்திருந் தாலே ரூ.8000 கோடி நிதி உபரியாக இருந்திருக்கும். ஆனால், நிதிப் பற்றாக்குறை அதிகரிக்காமல் இருப்பதற்காக மக்களின் சொத்தாகிய பொதுத் துறை சொத்துகளில் ரூ.30,000 கோடி அளவுக்கு விற்பனை செய்ய அரசு முன் வந்துள்ளது. பன்னாட்டு நிறுவனங்களின் செல்லப் பிள்ளையாகி மக்களை வாட்டி வதைக்கிறது, இந்திய ஆட்சி!

காந்தி - தேசத் தந்தையா?

உ.பி. மாநிலம் லக்னோவில் 6 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி அய்°வர்யா,  தனது பாடப் புத்தகத்தில் ‘காந்தி தேசத் தந்தை’ என்று படித்த போது ஒரு சந்தேகம் எழுந்தது. இந்தப் பட்டத்தை யார் கொடுத்தார்கள் என்று பெற்றோரிடம் கேட்க, அவர்களுக்கு விடை தெரியவில்லை. தகவல் அறியும் சட்டத்தின் கீழ் பல தகவல்களைப் பெற்று வரும் அவரது தாயார் ஊர்வசி சர்மா ஆலோசனையின் பேரில் பிரதமர் அலுவலகத்துக்கு எழுதி கேட்டார். தேசத் தந்தை என்பதற்கான அரசு உத்தரவோ, ஆவணமோ ஏதும் கிடைக்காத பிரதமர் அலுவலகம், உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பியது. அங்கும் எந்த ஆவணமும் இல்லாத நிலையில் தொல் பொருள் ஆய்வகத்துக்கு கடிதத்தை அனுப்பியது. உள்துறை ஆய்வகத்தின் தகவல் அதிகாரி ஜெயப் பிரகாஷ் ரவீந்திரன், இதற்கான பதிலைத் தர முடியாத நிலையில் அய்°வர்யாவே நேரடியாக ஆய்வகம் வந்து ஏதேனும் ஆதாரங்கள் இருக்கிறதா என்று தேடிப் பார்க்கட்டும் என்று பதில் கூறி விட்டார். தேசத் தந்தை என்று காந்தி அதிகார பூர்வமாக அறி விக்கப்படாத நிலையிலேயே அவர் தேசத் தந்தை யாக்கப்பட்டு, தேசிய  சின்னமாக்கப் பட்டு காந்தியை அவமதிப்பது தேச விரோத குற்றமாக்கப்பட்டுள்ளது.

பார்ப்பனர்கள்தான் காந்தியை ‘மகாத்மா’ வாக்கினார்கள் என்றும், ‘என்னிடம் பெரும் தொகையைக் கொடுங்கள். நான் கழுதையைக்கூட மகாத்மாவாக்கிக் காட்டுகிறேன்’ என்றும் பெரியார் கூறியது எவ்வளவு சரியான உண்மை என்பதும் இதன் மூலம் உறுதியாகியுள்ளது. உண்மையில், 1944 ஆம் ஆண்டு ஜூலை 6 ஆம் தேதி சிங்கப்பூரில் வானொலி உரை ஒன்றில், சுபாஷ் சந்திரபோ° காந்தியை ‘தேசத் தந்தை’ என்று பேசினார். அதைத் தவிர வேறு எந்த அரசு ஆணையோ, ஆவணமோ, அப்படிப் பிறப்பிக்கப்படவில்லை.   

- ‘இரா’
----------------------------------------------------------------------

பெ. மணியரசன் கூறுகிறார்...

“தமிழர் ஒற்றுமை என்ற பெயரில் சாதி ஒடுக்குமுறையைக் கண்டு கொள்ளாமல் இருக்க மாட்டோம். சாதி ஒடுக்கு முறை நீங்கும்போதுதான் உண்மையான தமிழர் ஒற்றுமை ஏற்படும் என்பது எங்கள் கொள்கை.”

- த.தே.பொ.க. செயலாளர் பெ. மணியரசன் பேட்டியிலிருந்து
- ‘கருக்கல்’ இதழ் மார்ச்-ஏப். 2012

Pin It