2001 ஆம் ஆண்டு “பெரியார் காலத் தமிழகத்தை உருவாக்குவோம்” என்ற முழக்கத்தோடு நாம் பயணத்தைத் தொடங்கினோம். தோழர்களின் உழைப்பாலும், தொண்டினாலும் கட்டி எழுப்பிய நம் இயக்கத்தின் செயல்பாடுகள், இயக்கத்திற்கு வெளியே கொள்கை ஆதரவாளர்களால் பெரிதும் வரவேற்கப்பட்டது. வெற்று மேடைப் பேச்சுக்களன்றி, நாம் மேற்கொண்ட செயல்பாடுகளாலேயே நம் கழகத்தின்மீது அனைவரின் கவனமும் ஈர்க்கப்பட்டது என்பதே உண்மை. பெரியார் நமக்கு விட்டுச்சென்ற சமுதாய இழிவுஒழிப்பு, ஜாதி – தீண்டாமை ஒழிப்புக்கான செயல்பாடுகளை முன்னெடுக்கும் முயற்சிகளில் கழகத்துக்கு உள்ளேயே நாம் கசப்பான அனுபவங்களை சந்திக்க வேண்டியிருந்ததை இங்கே திரண்டிருக்கும் நாம் அனைவரும் அறிவோம்.
பெரியார் நடத்திய சுயமரியாதை இயக்கமானாலும், திராவிடர் கழகமானாலும், அந்த இயக்கங்கள் கொள்கை சார்ந்தவைகளாகவும், கொள்கையை மக்களிடம் கொண்டு போவதற்கே என்ற பார்வையுடனும் அதற்கேற்ற நெகிழ்ச்சித்தன்மையுடனும், இயக்கத்தை தலைவர் பெரியார் கட்டியமைத்தார். சுயமரியாதை இயக்கம் ஓர் அதிசயமான இயக்கம் என்று அவர் எழுதினார். அமைப்புகள், அதிகாரங்களின் மய்யங்களாக்கப்பட்டு, அதன் வழியாக தனிமனித முனைப்புகள் மேலோங்கும்போது, கொள்கைச் செயல்பாடுகள் பின்னுக்குத் தள்ளப்படும் இடர்ப்பாடுகளைக் கடந்த சில ஆண்டுகளாகவே நாம் சந்திக்க வேண்டியிருந்தது.
அதனால் கொள்கைச் செயல்பாடுகளின் வேகம் குறைந்து, ஒரு கட்டத்தில் தேங்கிப்போனது, மேலும் முன்னெடுக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டோம். இந்தத் தடைகளை அகற்ற நாம் மேற்கொண்ட பல முயற்சிகள் பயன்தராத நிலையில் மீண்டும் பெரியார் காலத் தமிழகத்தை உருவாக்கி அவர் விட்டுச் சென்ற கொள்கைகளை மேலும் தெளிவோடும், புரிதலோடும், வேகத்தோடும் கொண்டு செல்ல வேண்டிய கடமையை ஆற்றுவதற்கும், அதில் தங்களை இணைத்துக்கொள்ளுவதற்கும் முன்வந்துள்ள தோழர்களாக நாம் திரண்டிருக்கிறோம். பெரியார் காலத்திலும் பல்வேறு கால கட்டங்களில் இத்தகைய கொள்கை மாறுபாடுகள் – முரண்பாடு களை பெரியார் சந்திக்க வேண்டியிருந்தது. அப்போதெல்லாம் அவர் மேற்கொண்ட அணுகு முறைகளை நாம் பாடமாகக் கொண்டு கொள்கைக்காகவே அமைப்பாகியிருந்த நாம், அமைப்பின் பெயருக்காகப் போராடிக்கொண்டிருக்க வேண்டாம் என்று முடிவெடுத்தோம். நமது தோழர்களின் கருத்தும் உணர்வும் இதே போன்று இருந்தது நமக்கு மேலும் நம்பிக்கையையும் ஊக்கத்தையும் தந்தது.
இப்போது நாம் உருவாக்கிடும் இந்த அமைப்பு பெரியார் இலட்சியப் பயணத்தில் மேலும் ஒரு முன்னோக்கிய வளர்ச்சியே தவிர பிளவோ, பின்னடைவோ அல்ல என்ற சரியான புரிதலோடு, மீண்டும் பெரியார் காலத் தமிழகத்தை உருவாக்கி பெரியார் விட்டுச்சென்ற சமுதாய இழிவு ஒழிப்பு, ஜாதி, தீண்டாமை ஒழிப்பு, பெண்விடுதலை, தமிழருக்கான விடுதலை என்ற செயல்திட்டங்கள், கருத்தாக்கங்களோடு பயணத்தைத் தொடர உறுதியேற்போம்.
நாள்: 12.08.2012 கொளத்தூர் தா.செ.மணி - விடுதலை க. இராசேந்திரன்
இடம்: ஈரோடு
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
அண்மைப் படைப்புகள்
- கீழ்வெண்மணி படுகொலையின்போது பெரியார் அமைதி காத்தாரா?
- பகுத்தறிவுச் சுடர் எஸ். ஆர். இராதா
- தேனி தேசத்தில்... இலக்கிய சாரல்
- திராவிடர் கழகப் பெயர் மாற்றம் ஒரே நாளில் நிகழ்ந்தா?
- கம்யூனிஸ்ட் ஜீ. ஓ.!
- பூரண வெற்றி
- மனிதர்கள் எரிக்கப்படும் நாட்டில் யானைகள் எங்கே தப்புவது?
- அமெரிக்கப் பணத்தில் கொழிக்கிறது மக்கள் விரோத ஆர்.எஸ்.எஸ். அமைப்பும், பார்ப்பனியமும்
- 'மாவோ' என்றழைக்கப்படும் மாசேதுங்
- திதி
பெரியார் முழக்கம் - ஆகஸ்ட் 2012
- விவரங்கள்
- கொளத்தூர்மணி - விடுதலை இராசேந்திரன்
- பிரிவு: பெரியார் முழக்கம் - ஆகஸ்ட் 2012
திராவிடர் விடுதலைக் கழகம்: ஒரு முன்னோக்கிய வளர்ச்சியே!
கீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.
கீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.
அமைப்பு அதிகார மய்யம் தனி மனித முனைப்பு எல்லாம்தான் கொள்கைக்கு எதிரானதா ?
இது பிளவு இல்லீன்னா ? ஏன் பிரியணும் ? எனி இம்பார்ட்டெண்ட் கொள்க வேறுபாடு ?
RSS feed for comments to this post