திங்கட்கிழமை பட்டினிக் கிடந்தால் சிவபெருமானே நேரில் வந்து கை கொடுப்பார் என்று சொன்னாலும் நீ, தீனிப்பையை வெறுமையாய் வைக்காதே. பசித்தீ குடலை தின்றுவிடும்.

சனிக்கிழமை பட்டினிக்கு மகிழ்ந்து கோவிந்தப் படையாட்சி கழுகேறி வருவார் என்று எவன் புளுகினாலும் கேட்காதே. நேரத்தோடு உணவு கொள்- தீனிப்பையில் எப்போதும் உணவு தளதளவென்று இருக்கட்டும்.

இதைக் கேள்: நடலை அறுந்
தாள் அருணை
நம்பனுக்கு அன்பில்லா
உடலை ஒறுத்தால்
ஆவதுண்டோ -
அடலைநூல்
ஓதினால் பாசம் பொழியுமோ புற்றிலே
மோதினாற்
பாம்பு சாமோ.

இச்செய்யுட் கருத்து: நல்லவனாயிரு. உடலைத் தண்டிக்காதே என்பதாம். உண்மை மருத்துவர் இதைத்தான் வற்புறுத்தினார்கள்.

- புரட்சிக்கவிஞர்
குயில் 4-10-1960

அனுப்பி உதவியவர்:- தமிழ் ஓவியா

Pin It